தி.மு.க.விலிருந்து விலகிய நடிகர்

ஒவ்வொரு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பல கிராமம் நகரம் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வந்தும் கட்சியில் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை, இதனால் மன வருத்தம் அடைந்து தி.மு.க. கட்சியிலிருந்து விலகுவதாக நடிகர் தியாகு தெரிவித்துள்ளார்.

கட்சியில் இல்லாதவர்கள் கூட திமுக தலைவரை துதி பாடியே பல்வேறு பதவிகளையும், வசதி வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.எனக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பதவி பெற்றுள்ளனர். ஆனால் 33 ஆண்டுகளாக திரையுலகில் இருந்தும் எனக்கு எந்த அங்கீகாரமும் கட்சியில் கிடைக்கவில்லை.இதிலிருந்து நீங்கள் என்னை எந்த இடத்தில் வைத்துள்ளீர்கள் என்பது புரிந்து விட்டது. இதுவரை கட்சியில் இருந்தது தவறு என்று புரிந்து கொண்டுள்ளேன். எனவே கடந்த 19ந் தேதி முதல் கட்சியிலிருந்து விலகி கொண்டுள்ளேன். எனது விலகல் கடிதத்தை கட்சியின் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் அறிவிப்பேன், என்று அவர் கூறினார்.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும், தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றி வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content