தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

அங்காடி தெரு வசந்த பாலனின் 'அரவான்' படங்களுடன்



அங்காடி தெரு படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கும் படம் அரவான். ஈரம் படப் புகழ் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார், பேராண்மை படத்தில் நடித்த தன்ஷிகா நாயகியாக நடிக்கிறார். பசுபதி மற்றும் மலையாள நடிகை அர்சனாகவி முக்கியமான கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர். பிண்ணனி பாடகர் கார்த்திக் இசை அமைக்கிறார்.

சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் எனும் நாவலில் இருந்து தழுவப்பட்டுள்ளது. மதுரையின் பழங்காலத்தை கொண்டு இந்த நாவல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆதி 'வரிபுலி' எனும் கதாபாத்திரமாக நடிக்கிறார். வசந்த பாலன் இந்த படத்தின் திரைக்கதை எழுத ஒரு வருட காலம் எடுத்துள்ளார். பரத், அஞ்சலி, ஸ்வேதா மேனன் சிறு பாத்திரங்களில் நடிக்கின்றனர்.


















பெட்ரோல் லிட்டருக்கு ரூ.140, கியாஸ் சிலிண்டர் ரூ.2000!!!


ஆம்,  பெட்ரோல் (கல்லெண்ணெய்) விலை லிட்டருக்கு ரூ.140க்கும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர் (வாயூகலன்/வளிக்கலன்) ஒன்றின் விலை ரூ.2000க்கும் விற்கப்படுகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் இந்த விலை உயர்வு நிலவி உள்ளது. கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் சாலை மறியல் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறியுள்ளது.  நாகா  குகி பழங்குடியினர் நடத்தும் இந்த போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 சதார் மலைப்பகுதியை வருவாய் மாவட்டமாக மாற்றக் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் என்ஹெச்-39 மற்றும் என்ஹெச்-53 ஆகிய 2 தேசிய நெடுஞ்சாலைகளில்  சாலை மறியல் நடத்துகின்றனர்.

தமிழில் அஜித்துடன் நடிப்பது பெருமையாக உள்ளது - பார்வதி ஒமணகுட்டன்


பில்லா2 படத்திற்கு 2008-ம் ஆண்டு மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டம் வென்று மிஸ் வேர்ல்டு போட்டியில் இரண்டாவதாக வந்த பார்வதி ஒமணகுட்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டது தெரிந்த விஷயமே.

இது பற்றி அவரிடம் கேட்டபோது "தமிழில் அதுவும் முஅன்முறையாக அஜித்துடன் நடிப்பது பெருமையாக உள்ளது, படத்தின் நாயகியாக நடிப்பதில் சந்தோஷப்படுகிறேன், சீக்கிரம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன்" என்று கூறினார்.

பில்லா 2 இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இப்போது கோவவில் தொடங்கியுள்ளது.



ஆமிர் கான் பார்த்து பாராட்டிய எங்கேயும் எப்போதும்


கஜினியின் ஹிந்தி பதிப்பை தொடர்ந்து ஆமிர்கானும், முருகதாஸும் நெருக்கமாகி விட்டனர். முருகதாஸ் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தை  ஆமிர் கானுக்கு சிறப்பு ஏற்பாடாக காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த ஆமிர், படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். இயக்குனருக்கும் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பாராட்டினை தெரிவிதுள்ளார்.

அடுத்து 7ஆம் அறிவு படத்தினையும் எதிர்பார்ப்பதாக தெரிவிதுள்ளார்.ஆமிர் ஹிந்தியில் எங்கேயும் எப்போதும் படத்தை ரீமேக் செய்யும் திட்டத்தை வைத்திருப்பதாக கூறுகின்றனர்.

சிம்புவுடன் சென்னையில் மல்லிகா ஷெராவத்


சிம்புவுடன் ஆட சென்னைக்கு வந்துள்ளார் மல்லிகா ஷெராவத், சிம்புவின் ஓஸ்தி படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாட மல்லிகா ஷெராவத் ஒப்பந்தமாகியுள்ளார், அதற்காக அவை சென்னை வந்து தங்கியுள்ளார். இப்பாடலுக்கு நடனம் அமைப்பது ஷோபி, நேற்று முதல் பாட்டிற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்று முதல் சிம்புவும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.

தமண் இந்த குத்துப் பாட்டிற்கு இரண்டு நாள் முன்பு இசை அமைத்துள்ளார். இதை டி.ராஜேந்தர் பாடியிருப்பதாக கூறுகின்றனர். பெண் பாடகி யார் என்று சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இந்த ஒரு பாடலுக்கு சில கோடிகள் செலவு செய்துள்ளதாக சொல்கின்றனர். பார்த்தால் தான் தெரியும்!

ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சியை மாற்றிய மழை



சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ், முதலில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இப்போது சென்னையில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களால், இதன் தேதி மாற்றி வைக்கப்படுள்ளது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழு வானிலை மாற்றங்கள் நிகழ்ச்சிக்கு சாதாகமாக இல்லை எனக் கருதி அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து 8ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.

நுழைவுச் சீட்டு (டிக்கெட்) வாங்கியவர்கள் அதை 8ஆம் தேதிக்கு உபயோகப்படுத்தலாம். மாயாஜாலில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மாலை 7 மணிக்கு நடைபெறும் என்று கூறியுள்ளனர். அடுத்து கோயம்புத்தூரில் 16ஆம் தேதி நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளனர். உண்மையாகவே மழைதான் காரணமா ஹாரிஸ்?

முன்பு வந்த செய்தி: சென்னையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை

சன் நெட்வொர்கிலிருந்து சக்சேனா விலகல்


சன் குழுமத்தில் இருந்து மூன்று தினங்களுக்கு முன் கலாநிதி மாறனின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படும் ஹன்ஸ்ராஜ் சக்சேனா  விலகிவிட்டதாக அவரது வழக்கறிஞர் செந்தில்குமார் தெரிவித்தார். இந்த நிலையில், சக்சேனா   சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார்.

சக்சேனா சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்தவர். இவர் பல்வேறு வழக்குகளில் சிக்கி இரண்டரை மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 14ஆம் தேதிதான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் 16 வழக்குகளை சந்திப்பதாக அவர் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் அடுத்த இயக்குனர்? விஷ்ணுவர்தன்!!!

பில்லா 2 படத்திற்கு இயக்குனராக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது விஷ்ணுவர்தன்தான், அது நடக்காமல் போனது. மீண்டும் இவர்களது கூட்டணி தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. .எம்.ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், இயக்குனர் யார் எனும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. தற்போது பில்லா2 படப்பிடிப்பில் இருக்கும் அஜித், அப்படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தின் அறிவிப்பை கொடுப்பார் என்று ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
தற்போது விஷ்ணுவர்தனும் பவன் கல்யாணை வைத்து இயக்கிவரும் தெலுங்கு படத்திற்கு பிறகுதான் அடுத்த படத்தை பற்றி அறிவிப்பார் எனத் தெரிகிறது, இருந்தும் இவர்களிடையே நடந்துள்ள பேச்சுவார்த்தை, அஜித்தின் அடுத்த படத்திற்கு விஷ்ணுவர்தன் இயக்குனர் ஆகலாம் என்று கூறப்படுகிறது. பொருத்திருந்து பார்க்கலாம்.


7ஆம் அறிவு டிரைலர்



பயப்பட மாட்டேன் தவறை தட்டிக் கேட்பேன் : விஜயகாந்த்


சென்னை மாநகராட்சி தேமுதிக மேயர் வேட்பாளர்   வேல்முருகன் மற்றும் 200 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்  மயிலாப்பூரில் நடந்தது. வேட்பாளர்களை அறிமுகம் செய்து விஜயகாந்த் பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறோம். இன்னொரு கம்யூனிஸ்டு கட்சியும் எங்களுடன் வர இருக்கிறது. நம்பினோர் கைவிடப்படார். பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர் தெய்வத்தோடும், மக்களோடும்தான் கூட்டணி என்கிறீர்கள்.

கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்றார். இப்போதும் சொல்கிறேன் மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பப்படிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் கூட்டணி வைத்தேன். இப்போதுள்ள ஆட்சியை 6 மாதம் குறை  சொல்ல மாட்டேன்.  இப்போது எங்களால் என்ன செய்ய முடியும்?

தமிழகத்தின் முன்னேற்றம்  மற்றும் தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம். போலீசார் சரியாக இருந்தால் நாட்டில் 50 சதவீத பிரச்சினைகள் சரியாகி விடும். நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சிக்குதான் ஓட்டளிக்க வேண்டும்  என்பதல்ல. தே.மு.தி.க.வுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். தவறு நடந்தால் தட்டிக் கேட்பேன்.

தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல திட்டங்களை தே.மு.தி.க. வைத்துள்ளது. ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் இத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.

இவ்வாறு  விஜயகாந்த் கூறினார்.

கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், பார்த்தசாரதி எம்.எல்.ஏ., எல்.கே.சதீஷ், மாவட்ட செயலாளர்கள் வி.என்.ராஜன்,  செந்தாமரைக் கண்ணன், வி.யுவராஜ், தொழிற்சங்க மாநில செயலாளர் சவுந்தர பாண்டியன், கே.எஸ்.மலர் மன்னன், தேனாம்பேட்டை ஜி.குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டிஎன்எஸ்

தமிழ்நாடு பள்ளித் தேர்வுகளில் இனி மதிப்பெண் இல்லை!


பள்ளித் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு முறைக்குப் பதிலாக மதிப்பீட்டு முறை அமலுக்கு வருகிறது. வரும் கல்வியாண்டு (2012-13) முதல் எட்டாம் வகுப்பு வரை மதிப்பெண்ணுக்கு பதில் கிரேடு முறை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இனி மதிப்பெண் போடும் முறைக்குப் பதிலாக ஏ, பி, சி, டி, இ என கிரேடு வழங்க முடிவு செய்துள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்புகளுககு புதிய கல்விமுறையை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு 2013-14-ஆம் ஆண்டுகளில் இப்புதிய முறை விரிவுபடுத்தப்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு கல்வியாண்டை மூன்று பருவங்களாகப் பிரித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோ பர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என ஒரு கல்வியாண்டு மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:

பள்ளி மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி, அவர்களது சிந்தனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்வது தொடர்பாக தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்தது.

அந்தக் குழு, தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

பரிந்துரை விவரம்:

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும் இத்தகைய மதிப்பீட்டு முறையை கட்டாயமாக்கியுள்ளது. இப்போதுள்ள தேர்வுமுறை, மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மாணவர்கள் கணித்துவிடக் கூடிய வகையில் உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் புத்தகங்களைத் தாண்டி வெளியே படிக்க முடியாது.

பொதுத்தேர்வுகள் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தேர்வில் தோல்வி பயம் பல தவறான முடிவுகளுக்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை இந்த மதிப்பீட்டு முறை ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களும் இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.


இரண்டு மதிப்பீடு:

கல்வியாண்டுக்குப் பதில் மூன்று பருவ முறை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த வேண்டும். உடனடி மதிப்பீடு, பருவ மதிப்பீடு என இரண்டு மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு பருவத்துக்கும் உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்ணும், பருவ இறுதியில் மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்ணும் வழங்கப்பட வேண்டும்.

பாடல்கள், விளையாட்டு, நாடகம், கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், பருவ இறுதியில் நடைபெறும் தேர்வு பருவ இறுதி மதிப்பீட்டிலும் கணக்கில் கொள்ளப்படவேண்டும்.

இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடுகள் வழங்கப்படும். ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி, இ1, இ2 போன்ற கிரேடுகள் உள்ளன. ஒவ்வொரு கிரேடுக்கும் கிரேடு புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.

இதில் இ1, இ2 கிரேடுகளைத் தவிர அனைத்து கிரேடுகளுக்கும் கிரேடு புள்ளிகள் வழங்கப்படும்.

மூன்று பருவத்தின் முடிவில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் கிரேடுகள் அடிப்படையில் ஆண்டு இறுதியில் மாணவர்களுக்கு கிரேடு மட்டும் வழங்கப்பட வேண்டும்.

ஒரு பருவத்தில் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் பாடங்கள், அடுத்த பருவத் தேர்வுக்கு வராது. இதனால், ஆண்டுத் தேர்வுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறைந்துவிடும்.

ஒவ்வொரு ஆண்டிலும் மூன்று முறை மாணவர்களின் திறன் மதிப்பிடப்படும். இதுதொடர்பான அறிக்கை ஆண்டு முழுவதும் பராமரிக்கப்பட வேண்டும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

கல்லூரிகளில் பின்பற்றப்படும் செமஸ்டர் முறைக்கு எளிமையாக மாறும் வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் செமஸ்டர் முறையை அறிமுகப்படுத்தலாம்.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறை செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளை ஆராய்ந்தபிறகு, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை அடுத்தக் கல்வியாண்டில் இருந்தும், 9, 10 வகுப்பு வரை 2013-14 கல்வியாண்டிலிருந்தும் அமல்படுத்த உத்தரவிடப்படுகிறது.

முப்பருவ முறையும் அடுத்தக் கல்வியாண்டில் இருந்து அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்எஸ்

போட்டியில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ்

இந்த தீபாவளியில் எந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் ?



கோலிவுட்டின் முன்னனி நட்சத்திரங்கள் ஒன்றாக போட்டியிட்டு பல நாட்கள் ஆகி விட்டது, இப்போது முன்னனி நட்சத்திரங்களான விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

இந்த தீபாவளிக்கு இவர்களது படங்கள் ஒன்றாக வெளிவர உள்ளன, விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் ஏழாம் அறிவு, சிம்புவின் ஒஸ்தி, தனுஷின் மயக்கம் என்ன நீண்ட நாட்களுக்கு பிறகு தீபாவளி பண்டிகைக்கு, அனைத்து தரப்பு நடிகர்களின் படங்களும் வெளிவருகிறது.


ஒரே நாளில் 66 வேட்பு மனுக்கள்

தமிழ்நாட்டில் அக்டோ பர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்டமாக, திருச்சி தவிர சென்னை உள்பட 9 மாநகராட்சிகள், 60 நகரசபைகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக்டடீபர் 17-ந் தேதி அன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 2-வது கட்டமாக மீதமுள்ள 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 19-ந் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

இவை தவிர தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 12 ஆயிரத்து 620 ஊராட்சிகளுக்கும் இந்த இரு நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கண்ட உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இந்த தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

நடைபெறவுள்ள இந்த உள்ளாட்சி தேர்தலில், இதுவரை இல்லாத அளவில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற 10-க்கு மேற்பட்ட கட்சிகள் தனித்தனியே வேட்பாளர் பட்டியலை அறிவித்து களம் இறங்கி உள்ளன.

இதனால் பலமுனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், செப்.22ஆம் தேதி தொடங்கியது. கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் அரசியல் கட்சிகள் மும்முரமாக இருந்ததால், தொடக்க நாட்களில் வேட்புமனு தாக்கல் மந்தமாகவே இருந்து வந்தது.

சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர். நேற்று முன்தினம் வரை தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 25 ஆயிரத்து 700 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்கு, வருகிற 29ஆம் தேதி (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். நேற்று முதல் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய தொடங்கி விட்டனர்.

66 ஆயிரம் மனுக்கள்:

மனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நேற்று முதல் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. தமிழ்நாடு முழுவதும், நேற்று ஒரே நாளில் மட்டும் 66 ஆயிரம் மனுக்கள் குவிந்தன.

பலமுனை போட்டி ஏற்பட்டு, அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்து வருவதால், இறுதி பட்டியலில் லட்சக்கணக்கில் வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சீபுரம்-திருவள்ளூர்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், நேற்று ஒரே நாளில் 1025 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 1,227.

சென்னை மேயர் பதவி 6 பேர் போட்டி:

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமி, தி.மு.க. சார்பில் தற்போதைய மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அவர்கள் தவிர, சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் மற்றும் ஜே.ஹரிதாஸ், ஆர்.டி.சேகர், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகிய 4 சுயேச்சை வேட்பாளர்களும் நேற்று மனு தாக்கல் செய்து உள்ளனர்.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நேற்று மட்டும் 92 பேர் மனு தாக்கல் செய்தனர்.

(டிஎன்எஸ்)

21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்



1.  குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மது அருந்துவதைக் குறைப்பதற்கு உங்களுடைய சொந்தக்காரணங்கள் யாவை? முதலில் உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். மது அருந்துவதை விட்டொழிக்க வேண்டும் என்ற உங்கள் இலக்கை அடைய அது ஒரு வழிகாட்டியாக அமையும். உங்கள் குறிக்கோள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது மது அருந்த வேண்டியிருக்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் இருத்தலாகவோ, மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுதலாகவோ, அல்லது மது அருந்துவதை ஒரேயடியாக விட்டொழிப்பதாகவோ இருக்கலாம். ஆனால் உங்களுக்காக மட்டுமே நீங்கள் மது அருந்துவதை விடமுயற்சி செய்கிறீர்கள் என்பதில் மட்டும் உறுதியாக நில்லுங்கள். இல்லையெனில் நீங்கள் உங்கள் முயற்சியில் வெல்வது கடினம்.

2.  பிறகு, வாரத்தில் ஏதேனும் ஒருநாளை மது அருந்துவதைத் தவிர்க்கும் நாளாகத் தேர்ந்தெடுங்கள் அன்று வேலை நாளாக இல்லாமல் நீங்கள் ஓய்வெடுக்கும் நாளாக இருந்தால்தான் மது அருந்துவதை தவிர்க்க சுலபமாக இருக்கும்.

3.  நம்பிக்கை இழக்காதீர்கள் / இக்கட்டுரையில் எந்த இடத்திலும் மது அருந்துவதை விட்டுவிடுவது சுலபமானது என்று கூறப்படவில்லை. உங்கள் இலக்குகளையும், அவ்விலக்குகளை நீங்கள் தேர்ந்தெடுக்க அடிப்படையானக் காரணங்களையும் மனதில் எப்போதும் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை, ஒரு முறை நீங்கள் தவறி, அதிகமாக மது அருந்திவிட்டாலும், அச்செயல் உங்கள் குறிக்கோளை தடுக்க விடாதீர்கள். மறு நாளிலிருந்து மீண்டும் உங்கள் இலக்கை அடையும் வழியில் தொடர்ந்து செல்லுங்கள். தோல்வி அடையும் போதெல்லாம் ராபர்ட் எப். கென்னடி, “யாரெல்லாம் பெரிய அளவில் தோல்வி அடைகிறார்களோ அவர்கள் பெரிய அளவில் சாதனை புரிவார்கள்” என்று கூறியதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையிலேயே குடிப்பழக்கத்தை நிறுத்த அல்லது குறைக்க விரும்பினால் உங்களால் உறுதியாக வெற்றியடைய முடியும்.

4.  மதுப்பழக்கத்தைக் கைவிட நீங்கள் மேற்கொண்டுள்ள திட்டங்களை உங்கள் குடும்ப அங்கத்தினர்களோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வெற்றியை அடைய அவர்களும் உதவட்டும்.

5.  மதுப்பழக்கத்தை நிறுத்தவேண்டும் என்ற உங்கள் குறிக்கோளை அடைய உங்கள் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களின் ஆதரவினை நாடுங்கள். உங்கள் குடிப்பழக்கத்திலிருந்து நீங்கள் மீண்டுவந்தால் மகிழக்கூடிய அவர்கள், தம் விடுமுறை நாட்களில் உங்களுடன் கூடவே இருந்து உதவுவார்கள். உங்களுடைய கவலைகளையும் எண்ணங்களையும் நீங்கள் அவர்களோடு பகிர்ந்து கொள்வது நலம்.

6.  தடை செய்யுங்கள் / வாரத்தில் ஒரு நாள் மது அருந்துவதை நிறுத்துங்கள். வாரத்தில் ஒருநாள் மது அருந்துவதை நிறுத்துவது உங்களால் முடியும்போது மது அருந்துவதை இரண்டு நாட்களுக்கு நிறுத்த முயற்சி செய்யுங்கள். அதில் வெற்றியடைந்தபின் மூன்று நாட்களாகவும், பின் வாரம் முழுவதையும் மது அருந்தா நாட்களாக மாற்றுங்கள். உங்களது பெரிய இலக்கை, சிறு சிறு இலக்குகளாகப் பிரித்து அடைவது எந்த விதத்திலும் குறைவானதல்ல. உண்மையில் அது உங்கள் குறிக்கோளை நீங்கள் விரைவில் அடையவும், அதில் நிலைத்து நிற்கவும் உதவிகரமாக இருக்கும்.

7.  எப்போதெல்லாம், எந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் நீங்கள் மது அருந்த வேண்டியிருக்கும் என்பதை அறிந்து, பின் அதனைத் தவிர்க்கும் திட்டத்தை உருவாக்குங்கள். வீட்டிலோ அல்லது விருந்துகளிலோ மதுவுக்கு பதிலாக வேறு ஏதாவது பானத்தைப் பருகும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். பொதுவாக நீங்கள் மது அருந்தக்கூடிய நேரத்தில், உங்கள் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகமூட்டும் உரமூட்டும் பொழுது போக்குகளை (உடற்பயிற்சி, படித்தல், ஒவியம்.................. போன்றன) மேற்கொள்ளுங்கள்.

8.  மதுவின் மீது ஏற்படும் ஈர்ப்பினைக் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் எத்தகைய சூழலில் உங்களுக்கு மது அருந்தும் ஆவல் ஏற்படுகிறது என்று கண்டு பிடித்து அச்சூழலைத் தவிர்த்து விடுங்கள். தனியாக இருக்கும்போதோ, விருந்துகளில் பங்குபெறும்போதோ, மதுவருந்தும் ஆவல் ஏற்படுமெனில் அத்தகைய சூழலைத் தவிர்க்கத் திட்டமிடுங்கள். மதுவிற்குப் பதிலாக நல்ல சுவையுள்ள பழரசங்களைப் பருகுங்கள்.

9.  உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள். மது அருந்துவதற்காக நீங்கள் செலவு செய்து வந்த பணத்தை குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் வெளியில் சென்று உண்பதற்காகவோ, திரைப்படம் பார்ப்பதற்காகவோ, விளையாடுவதற்காகவோ செலவு செய்யுங்கள்.

10.       மது அருந்தும் பழக்கக்தைக் குறைப்பது உங்களுக்குக் கடினமாக இருந்தால் கூடுதல் உதவியையும் புதிய திட்டங்களையும் நாடுங்கள் : http://www.stopdrinkingadvice.org/guide/ என்ற இணையதளத்தின் உதவியைப் பெறுங்கள். அல்லது துறைசார்ந்த வல்லுநரை அணுகுங்கள்.

மது அருந்துபவர்களுக்கு எச்சரிக்கை!!!


மது அருந்துவது உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஆனாலும் மது மிகவும் அதிகமாக பாதிப்பது ஈரலை. ஏனென்றால் நாம் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது அது ஈரலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி நமக்கு நோய்களை ஏற்படுத்தும்.
ஈரல் பதிப்பு மூன்று கட்டங்களின் ஊடாக நடைபெறுகிறது.

ஆரம்பத்தில் கொழுப்புப் படித்தல் (fatty change) என்ற பாதிப்பும் பிறகு ஈரல் அழர்ச்சி (hepatitis)என்ற பாதிப்பும் இறுதியாக சிரோசிஸ் (cirrhosis)என்ற வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது

இங்கே முதல் இரண்டும் அதாவது கொழுப்புப் படித்தல் மற்றும் ஈரல் அழர்ச்சி என்பவை இருக்கும் நிலையில் ஒருவர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டால் அவரின் ஈரல் பழைய நிலையை அடைந்து சுகமாகலாம். ஆனால் அது சிரோசிஸ் என்ற நிலையை அடைந்தால் ஈரல் பழைய நிலைக்குத் திரும்புவது சாத்தியமற்றது.

சிரோசிஸ் இருப்பவருக்கு வாழ் நாள் என்னத்தொடங்கி விட்டது என்றே அர்த்தம் , ஆனாலும் அவர் எத்தனை காலங்கள் அந்த நோயிடுன் உயிர் வாழ்வது என்பது அவர் குடியை விட்டாரா என்பதிலேயே தங்கி உள்ளது.


அதாவது சிரோசிஸ் ஏற்பட்ட ஈரல் மேலும் பாதிக்கப்பட்டு முழுவதுமாக செயற்படாமல் போய் மரணம் ஏற்படுவதை பிற்போட மருந்துகளை விட , அந்த நபர் குடிப்பழக்கத்தை விடுவதே முக்கியமானது.

 இந்த ஈரல் பாதிப்பு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே ஏற்படலாம். சில பேரில் ஈரல் முற்று முழுதாக செயல் இழக்கும் வரை மதுவினால் ஏற்படும் பாதிப்பு தெரியாமலேயே ஏற்படலாம்.இதனால் தொடர்ச்சியாக அதிகமாக மது அருந்துபவர்களில் சட்டென மரணங்கள் ஏற்படலாம்.

நீங்கள் மது அருந்துபவர்கள் என்றால் உங்களில் கீழே உள்ள ஏதாவது அறிகுறிகள் உள்ளதா என்பதை அவதானித்துக் கொள்ளுங்கள்...


  1. வயிற்று வலி
  2. உமிழ் நீர் குறைந்து உலர்ந்த வாய்
  3. அதிகமான தாகம்
  4. தொடர்ச்சியான காய்ச்சல்
  5. உடல் பலவீனம்
  6. வயிற்று வீக்கம்
  7. கண் மஞ்சள் நிறமடைதல்
  8. பசி குறைதல்
  9. வாந்தி வருகின்ற உணர்வு
  10. உடல்  நிறை திடீரென அதிகரித்தல்
  11. கருப்பு நிறத்தில் மலம் கழித்தல்
  12. ரத்த வாந்தி எடுத்தல்
  13. ஆண்களில் மார்பு பெரிதாகுதல்
  14. சிந்திக்கும் ஆற்றல் குறைதல்
  15. உள்ளங்கையில் சிவப்பு நிறமாக காணப்படுதல்

மது அருந்துபவர்களே இதில் ஏதாவது அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.அதற்கு முன்பு மது அருந்துவதை விட்டு விடுங்கள்.

மது அருந்துவதை 21 நாட்களில் நிறுத்தலாம் < இங்கே சொடுக்கவும் (Click Here)

சென்னையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை


சென்னையில் யுவன் ஷங்கர் ராஜாவை அடுத்து
ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். விஜய் டிவியில் அதை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர். முன்னதாகவே அறிவித்தபடி இசை நிகழ்ச்சி நடக்கிறது. மாயாஜாலில் முப்பரிமான (3D) அனுபவத்துடன் 270 டிகிரி பரிமான பார்வை வசதியுடன் கூடிய மேடை அமைக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் 2ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது, சில உலக சாதனைகளை செய்ய திட்டமிட்டுள்ளார் ஹாரிஸ்.

மாயஜாலிலும், அதன் இணையதளத்திலும் நுழைவுச் சீட்டு கிடைக்கிறது. மக்கள் கூட்டம் அதிகமாக திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி சொன்ன அஜித்குமார்



அஜித்தின் 50வது படமானா மங்காத்தா, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, அஜித்தின் 25வது படமான அமர்க்களம் வெற்றி பெற்றதை போல், இதுவும் வெற்றிப் பெற்றுள்ளது, அஜித்திடம் இது பற்றி கேட்ட போது, "ரசிகர்களுக்கும் மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், எனக்கு மட்டுமே கிடைத்த வெற்றி அல்ல இது, வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா, வைபவ், ப்ரேம்ஜி, அஸ்வின், மகந்த், ஒளிப்பதிவாளர் ஷக்தி மற்றும் எல்லா தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கிடைத்துள்ள வெற்றி. இவர்கள் எல்லோரும் என்னை தோலில் சுமந்து படத்தை வெற்றி பெற செய்துள்ளனர்.

ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கும் எனது நன்றி, கதையை  கூட முழுவதுமாய் கேட்காமல் என்னோடு நடித்தார். முதல்வர் ஜெயலலிதாவிற்கும் எனது நன்றியை சொல்லக் கடமை பட்டிருக்கிறேன், அரசியலால் ஏற்பட்டுள்ள  பல வதந்திகள், படத்தை பாதிக்கும் நிலை இல்லாமல் இருந்தது. அதனை ஏற்படுத்தியவர்களுக்கு நல்ல பதிலடி." என்று கூறினார்.

தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும் - திருமாவளவன்


திமுக., அதிமுக., அல்லாத மூன்றாவது அணி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சியபோது இதனை தெ‌ரி‌‌வி‌த்த அவ‌ர், பா.ம.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியக் கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைக்க வேண்டும் எ‌ன்றா‌ர்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அ.தி.மு.க. நடந்து கொண்ட விதம் காரணமாக ம.தி.மு.க. என்ற ஒரு அரசியல் கட்சி தேர்தலையே சந்திக்க இயலாத ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டது. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் ஒரு பக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, மறுபுறம் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்து வருகிறது. இது கூட்டணியில் உள்ள கட்சிகளை அவமானப்படுத்துவதாக உள்ளது.
 தி.மு.க.வைப் பொருத்தவரை கூட்டணியில் உள்ள கட்சிகளை கலந்தாலோசிக்காமல் தாங்கள் தனித்துப் போட்டியிடப் போவதாக திடீரென அறிவித்தது.  அக்கட்சியின் இந்தப் போக்கு எங்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பது போல உள்ளது.

அதற்கு முன்னோட்டமாக வரும் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மூன்றாவது வேட்பாளராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று‌‌ம் திருமாவளவன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஐஐடி-யில் புதிய இயக்குனர்


சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி., இயக்குனராக பாஸ்கர் ராமமூர்த்தி பொறுப்பேற்றார். சர்மா தலைமையிலான தேர்வுக் குழு, ராமமூர்த்தியை தேர்வு செய்தது. இதற்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஒப்புதல் அளித்து உத்தரவு வெளியிட்டார்.

சென்னை ஐ.ஐ.டி., இயக்குனராக இருந்த ஆனந்த், கடந்த ஜுலையில் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, ராமமூர்த்தி புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

பேராசிரியர் ராமமூர்த்தி, சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்தவர். இங்கு, 1980ல் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறையில் பி.டெக்., பட்டம் பெற்றார். பின், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., பட்டங்களை பெற்றார்.

சிறிது காலம் அமெரிக்காவில் பணிபுரிந்த அவர், 1986ல் சென்னை திரும்பி, ஐ.ஐ.டி.,யில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறையில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். பின்னர் ஐ.ஐ.டி.,யில் திட்ட முதல்வராக பணிபுரிந்து வந்தார். இவர், மொபைல் போன் மற்றும் ஒயர்லெஸ் தகவல் தொடர்பு சம்பந்தமாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் மும்பை இண்டியன்ஸ் மோதும் சாம்பியன்ஸ் லீக்



சாம்பியன்ஸ் லீக் போட்டியின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் விளையாடுகின்றன.  இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று (செப்.24) நடைபெறுகிறது.

மும்பை அணியில் காயம் காரணமாக சச்சின் விலகியுள்ளார். இதேபோல் ரோஹித் சர்மா, சூர்யகுமார், முனாப் படேல், குல்கர்னி ஆகியோரும் இடம்பெறவில்லை. சச்சின் இடம்பெறாததால் ஹர்பஜன் தலைமையில் மும்பை அணி களம் காண்கிறது.

அதே சமயம் நடப்புச் சாம்பியனும், ஐபிஎல் சாம்பியனுமான தோனி தலைமையிலான சென்னை அணியில், டிம் செளதி மட்டும் காயம் காரணமாக விலகியுள்ளார். மற்றபடி பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. போட்டி சென்னையில் நடைபெறுவதால் சூப்பர் கிங்ஸன்க்கு அது கூடுதல் பலம். சென்னையில் நடைபெற்ற எந்த ஆட்டத்திலும் அந்த அணி தோற்றதில்லை.

பேட்டிங்கைப் பொறுத்தவரையில் சென்னை அணியில் தோனி, மைக் ஹசி, ரெய்னா, சாஹா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சில் அல்பி மோர்கல், டக் பொலிங்கர், அஸ்வின், சூரஜ் ரனதேவ் ஆகியோர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

மும்பை அணியைப் பொறுத்தவரையில் பிராங்க்ளின், பொல்லார்டு, பிளிஸ்ஸப்ர்டு, சைமண்ட்ஸ், அம்பதி ராயுடு ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கக்கூடும். பந்துவீச்சில் மலிங்கா வலுசேர்க்கிறார்.

சென்னையில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் கேப் கோப்ராஸ்-நியூசெளத் வேல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இன்று நடைபெறும் ஆட்டங்கள்:

மாலை நான்கு மணிக்கு கேப் கோப்ராஸ் - நியூசெளத் வேல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெறுகிறது.

இரவு 8 மணிக்கு சென்னை-மும்பை அணிகளிடையே போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிகளை ஸ்டார் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஈ.சி ரீசார்ஜில் அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள்


வாடிக்கையாளர்கள் செய்யும், 'ரீசார்ஜ்' தொகைக்கு அதிகமாக, மொபைல்போன் சில்லரை வியாபாரிகள், கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மொபைல்போன் வாடிக்கையாளர்களில், பெரும்பாலோர், பி.எஸ்.என்.எல்., மற்றும் தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்களின், 'ப்ரீபெய்டு' சேவையை பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக, 'ஈசி டாப்-அப்' என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வசதியை, மொபைல்போன் சேவை நிறுவனங்கள், தங்களின் சில்லரை வியாபாரிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தன. இதற்காக, சில்லரை வியாபாரிகளுக்கு, அந்தந்த சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்கியது.

இந்நிலையில், சில்லரை வியாபாரிகளுக்கு வழங்கிய கமிஷன் தொகை, திடீரென குறைக்கப்பட்டதால், சில மாதங்களுக்கு முன், மொபைல்போன் சில்லரை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேவை நிறுவனங்களால் குறைக்கப்பட்ட, 'கமிஷன்' தொகை ஈடுகட்ட, மொபைல்போன், 'ரீசார்ஜ்'க்கான கட்டணத்திலிருந்து கூடுதலாக, 1 ரூபாயிலிருந்து, 5 ரூபாய் வரை, வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கின்றனர் என புகார் எழுந்துள்ளது.

ராஜினாமா செய்யத் தயார் ஆகும் அமைச்சர் சிதம்பரம்

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் தன் மீது புகார் கூறப்படுவதால் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நிதி அமைச்சகத்திடம் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் மனது வைத்திருந்தால் தடுத்திருக்க முடியும் என ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதம் குறித்த தகவலை சுப்ரமணிய சுவாமி நீதிமன்றத்தில் அளித்துள்ளார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே பிரதமரைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சிதம்பரம் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அவரிடம் கூறியுள்ளார்.

எனினும் சிதம்பரத்துக்கு பிரதமர் முழுமனதுடன் ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோதும், தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும்போதும் என்னுடைய முழு நம்பிக்கையுடன் அவர் பணியாற்றி வருகிறார் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் மூத்த அமைச்சர்களுக்கிடையில் எந்த வித மோதலும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அஜித்தை ராஜா இயக்கவில்லை - ஜெயம் ரவி

அஜித்தை வைத்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்திற்கு, யார் இயக்குனர் என்பதில் இப்போதிலிருந்தே அதிகாரப்பூர்வம் இல்லாத தகவல்கள் வந்த வண்ணம், இருந்தன. ஜெயம் ரவியின் அண்ணனும், ரீமேக் படங்களுக்கும் பெயர் போன இயக்குனர் ராஜா, அல்லது இயக்குனர் ஷங்கர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று கூறப்பட்டது.

ஆனால், ஜெயம் ரவி தனது ட்விட்டரில் ராஜா அஜித் படத்தை இயக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அஜித்தின் தரப்பிலும், ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்திற்கு தேதிகள் மட்டுமே கொடுத்திருப்பதாகவும், வேறு எதுவும் உறுதி செய்யப்படவில்லை எனவும், ஜனவரி மாதம் வரை பில்லா 2 படப்பிடிப்பு இருக்கும் அதுவரை எதுவும் உறுதி படுத்த நேரம் இருக்கப்போவதில்லை எனக் கூறப்படுகிறது.

தி.மு.க.விலிருந்து விலகிய நடிகர்

ஒவ்வொரு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பல கிராமம் நகரம் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வந்தும் கட்சியில் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை, இதனால் மன வருத்தம் அடைந்து தி.மு.க. கட்சியிலிருந்து விலகுவதாக நடிகர் தியாகு தெரிவித்துள்ளார்.

கட்சியில் இல்லாதவர்கள் கூட திமுக தலைவரை துதி பாடியே பல்வேறு பதவிகளையும், வசதி வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.எனக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பதவி பெற்றுள்ளனர். ஆனால் 33 ஆண்டுகளாக திரையுலகில் இருந்தும் எனக்கு எந்த அங்கீகாரமும் கட்சியில் கிடைக்கவில்லை.இதிலிருந்து நீங்கள் என்னை எந்த இடத்தில் வைத்துள்ளீர்கள் என்பது புரிந்து விட்டது. இதுவரை கட்சியில் இருந்தது தவறு என்று புரிந்து கொண்டுள்ளேன். எனவே கடந்த 19ந் தேதி முதல் கட்சியிலிருந்து விலகி கொண்டுள்ளேன். எனது விலகல் கடிதத்தை கட்சியின் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் அறிவிப்பேன், என்று அவர் கூறினார்.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும், தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றி வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

கே.என்.நேருவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும் மு.க.ஸ்டாலின்


நிலப்பறிப்பில் ஈடுபட்டதாக கூறிய புகாரில் மீண்டும் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். அக்.4-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் கே.என்.நேருவை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், கே என் நேரு சார்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் நாளை தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் நாளை காலை திருச்சி வருகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் வருகின்றனர். அடுத்த மாதம் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
சிறையில் இருந்தபடியே நேரு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதால், அதற்கு தேவையான ஆவணங்களை திமுக வக்கீல் அணியினர் தயாராக வைத்துள்ளனர். அடுத்த மாதம் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது, இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுக தலைவர் கருணாநிதி திருச்சியில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ம.தி.மு.க

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டியிட இருக்கிறது. இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்தார். மாநகராட்சி மேயர்களுக்கான முதல் பட்டியலை இன்று வெளியிட்டார். அதன்படி சென்னை மேயர் பதவிக்கான வேட்பாளராக நா.மனோகரன், கோவைக்கு- அர்ஜூனராஜ், மதுரைக்கு- பாஸ்கர சேதுபதி, தூத்துக்குடிக்கு - பாத்திமா பாபு உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர்களும் மனிதர்கள்தான். கேவலப்படுத்த வேண்டாம் ரசிகர்களே

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு திறமை உண்டு, அவர்களது தனித்திறமை எல்லோருக்கும் பிடித்து விடுவதில்லை, சில நடிகர்கள் ஈர்க்காமல் போனால் அதற்கு அவரிடம் திறமை இல்லை என்று அர்த்தம் கொள்வது தவறு. ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்தால் அவருக்கு போட்டியாக மற்றொரு நடிகரை நினைத்துக் கொண்டு மற்ற நடிகரை இழிவு படுத்துவது காலம் காலமாக நடந்து வருகிற ஒன்று, அன்று மக்களின் படிப்பறிவு பின் தங்கியே இருந்தது, அப்போது புரியாமல் செய்து விட்டனர் என்று கூறலாம். ஆனால் இன்று படித்தவர்களே இழிவுபடுத்தும் கேவலமான செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்று பேஸ் புக், ஆர்குட், ட்விட்டர் போன்ற வலைப் பின்னல்களில் பெரிதாக வளர்ந்து வரும் கலாச்சாரம் இது, ஒரு நடிகரை பிடிக்காதவர் அவரை எதிர்ப்பது போன்ற பக்கங்களை உருவாக்கி அதில் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு, அந்த நடிகரை இழிவுபடுத்துவது. அதோடு நில்லாமல் அவர்களுடைய புகைப்படங்களை போட்டோஷாப் மூலம் கிண்டல் செய்தும் வருகின்றனர். 'ஐ ஹேட் விஜய், அஜித், சூர்யா, சிம்பு' எனும் பெயரில் இப்படிப்பட்ட அநாகாரீக செயல்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இது போன்ற செயல்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லாததால் தங்கள் இஷ்டத்திற்கு எல்லை கடந்து போவதுதான் வருத்ததிற்குறிய விஷயம்.

நடிகர்களும் மனிதர்கள் தான் என்னதான் கேலி, கிண்டல், பொழுதுபோக்கு என எதாவது ஒரு வகையில் எடுத்துக் கொண்டாலும், இவை எல்லாம் அந்த நடிகர்களுக்கு தெரிந்தால் அவர்களது மனதும் புண்படும் என்பது தெரியாதா? ஒருவரது படம் வந்தால் அது நன்றாக உள்ளதோ இல்லையோ, குறை இருக்கிறதோ இல்லையோ அதற்கு தகுந்த விமர்சனங்கள் போதாதா? இது வெறும் கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்பதற்காக சொல்லவில்லை, அதையும் தாண்டி கெட்ட வார்த்தைகளால் திட்டுதல், அசிங்கமாக சித்தரித்தல் போன்ற செயல்கள் அதிலிருந்துதான் ஆரம்பமாகிறது. கேலி என்பது ஒரு வகையான விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அசிங்கங்களை ஏற்றுக் கொள்ளமுடியாது. இது வெறும் சில நடிகர்களோடு நின்று விடவில்லை வளர்ந்துள்ள எல்லா நடிகற்களும் இதற்கு விதிவிலக்கே. ஏன் நடிகைகளும் தான்.

தற்போது சமூக வலைப்பின்னல்களை அதிகம் பயன்படுத்துவது படித்தவர்களே, படித்தும் அவர்கள் செய்யும் இழிவு செயல்களை பாருங்கள். பேஸ் புக்கில் இருந்து திறட்டப்பட்ட படங்களை பார்த்தால் தான் தெரியும். இந்தச் செயலால் கிடைக்கும் அற்ப சந்தோசத்திற்காக நேரத்தை இப்படிப் பட்ட வேலைகளில் வெட்டியாக செலவிட வேண்டுமா?






























வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content