தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

நடிகர் விஜய்யை தாக்கிய பாரதிராஜா!

தமிழ்நாட்டின் தற்போதியா முக்கிய பிரச்சனை முல்லைப் பெரியாறு அணை, ஆனால் அதுபற்றி கோலிவுட் நடிகர்கள் எந்த கருத்தும் வெளியிடாமல் அமைதிகாத்து வருகின்றனர். காரணம் அந்த நடிகர்களின் படத்தின் வியாரத்தை அது பாதிக்கும் என்பதால், இது பற்றி இயக்குனர் பார்திராஜா நேற்று தினசரி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டிய்ளித்து பேசுகையில்,

தமிழின் முன்னணி நடிகரான‌ ஒருவர் , அன்னா ஹாசாரவின் போராட்டத்திற்கு இங்கிருந்து டெல்லி எக்ஸ்பிரஸ் முலம் டெல்லி சென்று கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தனது ஆதரவினை தெரிவித்துவிட்டு வந்தார்.

ஆனால் தற்போது நிலவும் முல்லை பெரியாறு பிரச்சனைக்காக தேனி மாவட்டத்தில் அவதிப்படும் தமிழர்களுக்கு அவர் குரல் கொடுக்க அவருக்கு தேனி எக்ஸ்பிரஸ் தெரியாமல் போனதன் காரணம் என்ன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் முன்னணி நடிகர் என்று குறிப்பிட்டிருப்பவர் வேறு யாரும் இல்லை நடிகர் விஜய் தான்.



ரூ 300 கோடி கருப்பு பணம் பறிமுதல்!!

டெல்லி மேல் சபையில், மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியிடம் கேட்கப்பட்ட  கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த கூறுகையில்:

மாநில வாரியாக கறுப்பு பணம் கைப்பற்றப்பட்ட விவரங்களை வருமான வரித்துறை பராமரிப்பதில்லை. ஆனால் நாட்டில் நடப்பு நிதியாண்டான  (2011௧2), அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் வரை 7 மாதங்களில் ரூ.299.63 கோடி கறுப்பு பணத்தை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் பணம் மற்றும் நகைகள் அடங்கும். ரூ.179.59 கோடியில் பணமும், ரூ.95.67 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.24.36 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 2010-11-ம் ஆண்டில் ரூ.774.98 கோடி கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ.440.28 கோடி பணமும், ரூ.184.15 கோடியில் நகைகளும் அடங்கும் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

தாஜ்மகாலில் இசை வெளியிடும் ஏ.ஆர் ரகுமான்!!

தமிழில் வெளியாகி ஹிட் ஆன‌ விண்ணைத்தாண்டி வருவாயா படத்தினை ஹிந்தியில் கெளதம் மேனன் இயக்கியுள்ளார்.  இந்த படத்திற்கு இசைபுயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட எமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏக் தேவனா தா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவினை ஆக்ராவில் உள்ள் தாஜ்மகாலில் நடத்த உள்ளனர். இந்த படம் காதலை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதால் தான் பாடல் வெளியிட்டு விழாவினை தாஜ்மாகலில் நிகழ்த்துகிறார்களாம்.




இந்த படத்தின் ட்ரைலர் உங்களுக்காக

பில்லா 2 - ஜனவரி டு ஏப்ரல் 2012


மங்காத்தாவின் வெற்றிக்கு பிறகு தல ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பில்லா 2 படத்திற்காக. இதன் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்ட நிலையில் அடுத்தக் கட்ட பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. தல இந்த படத்திற்காக சண்டைக் காட்சிகளில் அதிக முயற்சி எடுத்துள்ளார். அதை பற்றி இந்த படத்தில் வில்லனாக வரும் வித்யத் ஜம்வால் கூறுகையில், "மிக ஆபத்து நிறைந்த சண்டை காட்சிகளில் அஜித் நடித்துள்ளார், சண்டை காட்சிகள் மட்டுமே ரசிகர்களுக்கு திரைவிருந்தாக இருக்கும்." எனக் குறிப்பிட்டார்.

படத்தின் தயாரிப்பாளர் சுனிர், "பில்லா 2 பற்றி சில தகவல்கள் உள்ளன, 93 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டது, டைட்டில் பாடல் மட்டும் பாக்கி உள்ளது, இந்த படத்தின் போஸ்டர்கள் ஜனவரியிலும்,  டிரைலர் பிப்ரவரியிலும், பாடல் வெளியீடு மார்ச்சிலும் படம் ஏப்ரல் மாதமும் வெளியாகும்." எனத் தெரிவித்துள்ளார்.

தல ரசிகர்கள் ஜனவரி மாதம் முதல் பில்லா 2 வின் செய்திகளையும் படங்களையும் பார்க்கலாம். பில்லா 2 fever from January to April 2012.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினியும் கமலும்.


சூப்பர் ஸ்டார் ரஜினி படமாக இருந்தாலும்,உலக நாயகன் கமல் படமாக இருந்தாலும் இருவருக்கும் தனித் தனி இடம் உண்டு, இருவரும் சேர்ந்து நடித்து பல வருடங்கள் ஆகி விட்ட நிலையில், மற்றொரு முறை இரு சிகரங்களையும் ஒன்றாக பார்க்க முடியாத என்ற எண்ணம் இரு தரப்பு ரசிகர்களுக்கும் உண்டு. இதனை கமல் ஒரு விழாவில் குறிப்பிட்டு இருந்தார், அது இப்போது இயங்குனர் ஷங்கரின் மூலமாக நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் இருவரையும் இணைத்து ஒரு கதையை தயாரித்திருப்பதாக தெரிகிறது, அப்படி இவர்களது கூட்டணியில் இந்த படம் அமைந்தால் அதுவே இந்தியாவின் மிகப்பெரிய படமாக அமையும்.  ஷங்கர் இது பற்றி வரும் ஜனவரி 14 ஆம் தேதி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

ரஜினி இப்போது கோச்சடையன் படத்திற்காக நடித்துக் கொண்டிருக்கிறார், இது அசைவுகளை பதிவு செய்யும் படப்பிடிப்பு என்பதால் 20 நாட்கள் மட்டுமே அவரது கால்ஷீட் தேவைபடும் என்று தெரிகிறது. அதன் பிறகு இந்த படத்தை பற்றி அறிவிப்பை எதிர்பார்க்கலாம், ஆனால் இது ஷங்கர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பாகும் வரை எதையும் உறுதியாக கூறமுடியாது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினியும் கமலும் நடிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு ரசிகர்களின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டிவிட்டதோடு நின்றுவிடாமல் இருந்தால் சரி.

2011 ல் ரசிகர்களை கவர்ந்த 30 படங்கள்


2011ஆம் ஆண்டில் பல நல்ல படங்கள் வெளியாகின, முன்னணி நட்சத்திரங்களும், புதிய முகங்களும் வெற்றிப் படங்களை கொடுத்தனர். சில படங்கள் எல்லா ரசிகர்களையும் கவர்ந்து நன்றாக வசூலை குவித்தது. உதாரணங்களாக சிறுத்தை, கோ, தெய்வத்திருமகள், காஞ்சனா, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், 7ஆம் அறிவு, வேலாயுதம் படங்களை குறிப்பிடலாம். ஆனாலும் வசூல் அதிகம் செய்யாத சில படங்களும் ரசிகர்களை கவர்ந்தன, சில திரும்பிப் பார்க்கவும் வைத்தது. அதில் இந்த ஆண்டு எதிர்பார்ப்பு, பிடித்த படங்கள், நல்ல படங்கள் என எல்லா வகையிலும் 30 படங்களின் பெயர்களை குறிப்பிடுள்ளோம், தங்களுக்கு பிடித்த படத்திற்கு ஓட்டளிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் புக் முகவரிக்கு செல்லவும், இல்லாதவர்கள் கமெண்டுகள் கொடுக்கலாம்.

https://www.facebook.com/questions/195543120537685/?qa_ref=qd


சிறுத்தை
ஆடுகளம்
காவலன்
பயணம்
யுத்தம் செய்
குள்ளநரி கூட்டம்
மாப்பிள்ளை
கோ
வானம்
எங்கேயும் காதல்
அழகர்சாமியின் குதிரை
எத்தன்
ஆரண்ய காண்டம்
அவன் இவன்
வெப்பம்
தெய்வத்திருமகள்
காஞ்சனா
மங்காத்தா
எங்கேயும் எப்போதும்
முரண்
வாகை சூட வா
7ஆம் அறிவு
வேலாயுதம்
வித்தகன்
மயக்கம் என்ன
போராளி
ஒஸ்தி
ரா ஒன்
மௌன குரு
ராஜபாட்டை

மாஸ் ஹீரோ விஜய் -- கெளதம் !!


கெளதம் மேனன் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க‌ இளைய தளபதி விஜய் நடிக்க இருக்கவிருக்கும் படம் யோகன்: அத்தியாயம் ஒன்று. இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை தயாரிக்க இருப்பது பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான ஈராஸ் இன்டர்நேஷனல். மேலும் ரானா படத்தை தயாரிப்பதும் இதே நிறுவனம் தான்.

சரி விஷயத்துக்கு வருவோம், சமிபத்தில் புதிய தலைமுறை தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த கெளதம் பேசுகையில், விஜய்யுடன் சேர்ந்து படம் பண்ணுவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இந்த படம் விஜய்யின் மாஸ் மற்றும் ஸ்டையிலுக்கு ஏற்றவாறும், அதேசமயம் என்னோட ஸ்டையிலிலும் இருக்கும். விஜய்யை வித்தியாசமான பரிமாணத்தில் காண்பிக்க முடியும் என நம்புகிறேன்.

எனக்கு தெரிந்த வரையில் ரஜினி, கமலுக்கு பிறகு ரசிகர்கள் மாஸ் கொண்டுள்ள நடிகர் விஜய் தான். வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு இது போன்ற படம் எடுக்கனும் இருந்தேன், அதுக்கான நேரம் இப்ப வந்தருக்கு என்றார்.  இந்த   படத்தில் விஜய் உளவாளியாக நடிக்கிறார் என்பது மேலும் கிடைத்த் தகவல்.

மூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்


ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித சமுதாயம் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை வாய்மொழித் தரவுகளாக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மனித குலத்திற்கு கடத்தி இருக்கிறது.
வேளாண்மை சார்ந்த நாட்டார் தொழில்நுட்பங்கள் பல நீண்ட நெடிய அனுபவத்தின் விளைவாக மனித குலத்திற்குக் கிடைத்தது.

இந்து சமுதாய மக்களின் சடங்கு சம்பிரதாயங்களுக்குள் ஒருவித அறிவியல் சார்ந்த அர்த்தம் இருக்கிறது என்பதைத் தன் அனுபவத்தின் வாயிலாக கவியரசர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி விளக்கினார்.

நாட்டார் நம்பிக்கைகள் சிலவற்றை மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவை வெறும் மூட நம்பிக்கைகள் என்று தோன்றும். ஆனால் அவை மனித குலம் வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் சாரம் என்ற சிந்தனையுடன் அணுகினால், அந்த நம்பிக்கைகளின் உள் அர்த்தம் நமக்குப் புரியும்.
நாட்டுப்புற நம்பிக்கைகளில் அறிவியல் சார்ந்த நம்பிக்கைகள் சிலவற்றை பற்றி மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

* தென்கோடியில் வெள்ளி தோன்றினால் அந்த ஆண்டு பஞ்சம் வரும் (நாள், நட்சத்திரங்களைப் பற்றிய நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகு, வானவியல் துறைசார்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய நம்பிக்கையாகும் இது.)
* கர்ப்பிணிப் பெண்கள் மலைஏறக் கூடாது. (கர்ப்பிணிப் பெண் மலை ஏறினால் அவளின் கருக் கலைந்து விடும் என்பதால் இந்த நம்பிக்கை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.)
* ஈர ஆடைகளை அணிந்து கொண்டு மங்கலமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. (ஈரமான ஆடைகளை அதிக நேரம் உடுத்திக் கொண்டிருப்பதால் உடம்பின் தட்ப வெப்ப நிலை சீர்குலையும். அதனால் பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.)
* விக்கலை நிறுத்த விக்கிக் கொண்டிருப்பவரிடம் அதிர்ச்சி தரும் பொய்த்தகவல்களைச் சொல்வார்கள்.(இது ஒரு விதமான அதிர்ச்சி வைத்தியமாகும்.)
* அன்னத்தை (சோற்றை) வீசி எறியக் கூடாது. (தண்ணீரையும், சோற்றையும் சிக்கனமாகவும், கவனமாகவும் பயன்படுத்த வேண்டும். உண்ணுங்கள், பருகுங்கள், வீண்விரயம் செய்யாதீர்கள்.’ என்றார் நபிகள் நாயகம். உணவுப்பஞ்சம் உலகின் பலபகுதியில் உள்ள நிலையில் ஆக்கிய சோற்றில் தான் உண்டது போக மீதியை ஏழைகளுக்குக் கொடுத்து உதவ வேண்டும், வீசி எறிந்து வீணாக்கக் கூடாது.)
* நட்சத்திரங்கள் எரிந்து பூமியில் விழுவதைப் பார்க்கக் கூடாது. (நட்சத்திரங்கள் எரியும்போது தோன்றும் ஒளியில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நட்சத்திரங்கள் எரிவதைப் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.)
* புதுப்பெண்ணை ஆடி மாதம் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்க மாட்டார்கள் ("ஆடிக்கு (மாதம்) அழைக்காத (விருந்துக்கு கூப்பிடாத) மாமியாரைத் தேடிப்பிடித்து அடி!" என்கிறது ஒரு சொலவம்.
ஆடிமாதம் கணவன் வீட்டில் இருந்து, கணவனுடன் இல்லற சுகத்தை அனுபவித்தால், அதன் மூலம் அப்பெண் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஆடி மாதம் பெண்கள் கருத்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதால் இத்தகைய நம்பிக்கையும், பழமொழியும் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.)
* உச்சி வெயில் நேரத்தில் எண்ணை தேய்த்துக் குளிக்கக் கூடாது (காலையில் அல்லது மாலையில் தான் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். மத்தியான உச்சிப் பொழுதில் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். மத்தியான உச்சிப் பொழுதில் எண்ணை தேய்த்துக் குளித்தால், சூரியனின் ஒளிக் கதிர்கள் உடம்பின் நரம்புகளைத் தாக்கும், அதனால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.
* ஈரத்துணியைப் பிழியாமல் கதவுகளின் மேல் போடக்கூடாது (ஈரத்துணியைப் பிழிந்து வெயிலில் காய வைத்தால்தான் துணியில் சுருக்கங்கள் ஏற்படாது.)
* மூஞ்சூரைக் கொன்றால் தலைவலி வரும். (மூஞ்சூர் என்பது எலி இனத்தைச் சேர்ந்த அரிய உயிர் இனம். இது பிள்ளையாரின் வாகனமாகவும் உள்ளது. ‘மூஞ்சூர்’ என்ற அரிய உயிர் இனம் அழியாமல் காக்கும் நல்லெண்ணத்தில்தான் இத்தகைய நம்பிக்கைகளை நம் முன்னோர்கள் உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்கள்.)
* கர்ப்பிணிப் பெண்கள் வெறும் வயிற்றுடன் தூங்கக் கூடாது (கர்ப்பிணிப் பெண்களைக் கிராமத்து மக்கள் ஈருயிர்க்காரி (இரண்டு உயிர் உள்ளவள். தாய்க்கு ஒரு உயிர், தாயின் வயிற்றில் வளரும் சேய்க்கு ஒரு உயிர்; ஆக ஈருயிர்) என்று சொல்வார்கள். தாய் பட்டினி கிடந்தால் தாய்க்கு வயிற்றுப்புண் (அல்சர்) போன்ற குடல் நோய் வரும். கருவில் இருக்கும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச் சத்துக் கிடைக்காமல் குழந்தை ‘சோணிக்’ குழந்தையாகப் பிறக்கும்.)
* வீட்டில் நூலாம் படை அதிகமானால், தரித்திரம் வரும் (சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த நம்பிக்கையாகும் இது. வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை இந்த நாட்டார் நம்பிக்கை வலியுறுத்துகின்றது.)
* படுத்துக் கொண்டு சாப்பிடவும் கூடாது; நீர் அருந்தவும் கூடாது (படுத்துக் கொண்டு சாப்பிட்டால், உணவுக்குழாயில் நாம் சாப்பிடும் உணவு அடைத்துக் கொள்ளும் அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.)
* சுடுகாட்டுப் பிணம் எரியும் புகையைச் சுவாசிக்கக் கூடாது. (அப்புகையில் அதிகப்படியான கார்பன் உள்ளது. எனவே அப்புகையைச் சுவாசிக்காமல் இருப்பது நல்லது. சுடுகாட்டுப் புகையைச் சுவாசிப்பதால் மனதில் ஏதேனும் கிலேசம் (பயம்) தோன்றவும் உளவியல் பூர்வமான வாய்ப்பு உள்ளது.)
* பகல் நேரத்தில் வயதுக்கு வந்த பெண்கள் வெட்ட வெளியில் மல்லாந்து படுத்து உறங்கக் கூடாது (வயதுக்கு வந்த கன்னிப் பெண்கள் பகல் நேரத்தில் மட்ட மல்லாக்கப் படுத்து உறங்குவதால், அவளை அறியாமல் அவள் உடுத்தி இருந்த மாராப்பு சேலை விலகிவிட வாய்ப்பு உள்ளது. பகலில், வெட்ட வெளியில் மாராப்புச் சேலை, விலகிய நிலையில் கவர்ச்சியைக் காட்டியபடி படுத்து உறங்கும் கன்னிப் பெண்களை, அவ்வழியே செல்லும் ஆண் பார்க்க நேர்ந்தால் அவனுக்கு பால் உணர்வு ஏற்பட்டு, விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது)
* விளக்கு தானாகவே கருகி அணைந்து விடக் கூடாது. (விளக்கில் எண்ணை இருக்கும் வரை, எண்ணை எரியும். எண்ணை தீர்ந்து விட்டால் விளக்கின் திரியே எரிய ஆரம்பித்துவிடும். திரியும் எரியும் மட்டும் எரிந்து பின் விளக்கு தானே அணைந்துவிடும். விளக்கை ஏற்றும் முன் தேவையான அளவு எண்ணை விளக்கில் இருக்கிறதா..? என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்ற கருத்தையே இந்த நம்பிக்கை வலியுறுத்துகிறது)
* வெறும் உரலை ஆட்டக் கூடாது. (வெறும் உரலை ஆட்டினால், உரல்குழி ஆழமாகும் உரலின் உட்புறம் உள்ள கல் கரையும் அதிகமான சத்தம் ஏற்படும்)
* சங்கிலிகளையும், வீட்டுக்கதவில் இருக்கும் இரும்பில் ஆளை நாராஸ்திகளையும் வீணே ஆட்டக்கூடாது (ஒலிசார்ந்த மாசு ஏற்படுவதை தவிர்க்கவே இந்த நம்பிக்கை படைக்கப்பட்டுள்ளது.)
* இடது கையால் கால் விரல்களைப் பிடித்தபடி சாப்பிடக் கூடாது (கால் நரம்புகளும், இடது கை நரம்புகளும் விரைப்பாக இருக்கும் போது சாப்பிடக் கூடாது.)
* உள்ளங்கையில் சோறுபடாமல் சாப்பிடுவது உறவுகளுக்கு (சொந்தக்காரர்களுக்கு) நல்லது. (உள்ளங்கையில் உள்ள அழுக்கு சாப்பாட்டுடன் வயிற்றினுள் செல்லாமல் இருக்கும். குறைவாகச் சாதத்தை அள்ளி மெதுவாக ரசித்துச் சாப்பிட்டால், உள்ளங்கையில் சாதம் படாது)
* மணப்பெண்ணுக்கு மாத விலக்கு ஏற்படும் நாளில் திருமணம் செய்யக் கூடாது. (இத்தனை நாள் உடல் உறவுக்காக காத்திருந்த புதுமாப்பிள்ளை, திருமணம் ஆன அன்று இரவும் உடல்சுகத்திற்கு ஏமாந்து விட கூடாது என்பதால் இந்த நம்பிக்கையைப் படைத்து உலவ விட்டிருக்கிறார்கள்)
* சிவப்பு எறும்பு சாரி, சாரியாக (சாரை, சாரையாக) வீட்டிற்குள் வரக் கூடாது (அதிகமாக வீட்டினுள் குப்பை கூழங்கள் கிடந்தால்தான் சிவப்பு எறும்பு சாரை, சாரையாக வீட்டினுள் செல்லும், சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த நம்பிக்கையாகும் இது!)
* சாப்பிடும்போது வாழை இலையின் நடுநரம்பிற்கு மேற்பகுதியில் சமைத்த காய், கூட்டு முதலியவைகளைப் பரிமாறுவது நல்லது. (வாழை இலையின் நரம்பிற்கு மேற்பகுதி மெல்லியதாக இருக்கும், அதில் சோற்றைக் குழம்புடன் சேர்த்துப் பிசையும் போது தளிரான அந்த இலைப்பகுதி கிழிந்து விடும் எனவே அதில் கூட்டைப் பரிமாற வேண்டும். வாழை இலையின் நரம்பிற்கு கீழே உள்ள பகுதி சற்று முரடாக இருக்கும். அதில் சோற்றைப் பரிமாற வேண்டும்)
* நகத்தைக் கடிப்பதால் தரித்திரம் வரும். (நகத்தைக் கடிக்கும் போது நகத்தின் உட்புறம் உள்ள அழுக்குகள் வயிற்றினுள் சென்றுவிடும். அதனால் நோய்வரும். நகத்தைக் கடிக்கும்போது, வெட்டுப்படும் நகத்துண்டுகளும் வயிற்றினுள் சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது.)
* அந்தி நேரத்தில் உணவு உண்ணலாகாது. (அந்தி என்பது இரவும் அல்லாத பகலும் அல்லாத நடுப்பொழுது. அந்நேரத்தில் உணவு உண்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல.)
* நின்று கொண்டு சிறுநீர் கழிக்க கூடாது. (இஸ்லாமியர்கள் இதை ஒரு கொள்கையாகவே கொண்டு வாழ்கின்றார்கள். நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும்போது, அதன் துளிகள் தெறித்து காலில் பட வாய்ப்புள்ளது. அதனால் நோய்கள் தோன்றும்.)
* படுக்கும்போது முகத்தை மூடிக் கொண்டு படுக்கக் கூடாது. (முகத்தை மூடிக்கொண்டு படுத்துக் கிடந்ததால் பெற்ற தாயையே அடையாளம் தெரியாமல் ஒருவன் கொன்றதாக ஒரு நாட்டுப் புறக்கதை-(உங்காத்தாளும் எங்காத்தாளும் விடிந்தால் தெரியும்) உள்ளது.
* விளக்கின்றி (இருட்டில்) சாப்பிடக் கூடாது. (இருட்டில் சாப்பிட்டால், சாப்பாட்டுடன் பூச்சி, பொட்டைகளையும் சேர்த்துச் சாப்பிட்டு விடும் அபாயம் உள்ளது.)
* கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது எந்தவித உணவையும் உட்க்கொள்ளக் கூடாது (சூரிய கிரகணத்தின்போது ஏற்படும் வேதியல் மற்றும் ரசாயன மாற்றத்தால், உண்ணும் உணவு மெல்லிய விஷமாகி தாயின் வயிற்றில் இருக்கும். கருவை பாதித்து விடும் அபாயம் உள்ளது.)

இப்படி கிராமத்து மக்களின் நம்பிக்கைகளுக்குப் பின்னால் அறிவியல் பூர்வமான செய்திகளும் உள்ளன. மேலோட்டமாக இவைகளைப் பார்த்து, இவைகள் யாவும் படிக்காத, பாமர மக்களின் மூட நம்பிக்கைகள் என்று பெரும் போக்காக புறங்கையில் தள்ளி ஒதுக்கி விடக் கூடாது. இது போன்ற நம்பிக்கைகள், உலகம் எங்கும் உள்ள பழமையான சமூகங்களில் காணக்கிடக்கிறது. இன்றும் மலைவாழ் மக்களும், பழங்குடியினரும், இதுபோன்ற நம்பிக்கைகளைக் கடைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

"உலகம் எங்கும் (பழங்குடி மக்கள் உட்பட) உள்ள நம்பிக்கைகளை எல்லாம் திரட்டி, ஒருகளப்படுத்திக் கொண்டு (ஓரிடத்தில் வைத்துக் கொண்டு) ஆய்வு செய்தால் பல்வேறு புதிய செய்திகள் ஆய்வுலகத்திற்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ஆன்மீகம், உளவியல், சுற்றுச் சூழலியல் சார்ந்த பல்வேறு நம்பிக்கைகளும் ஓரு விதத்தில் அறிவியல் சார்ந்ததாகவே உள்ளன.

மானுட அனுபவமும், அறிவும் உருவாக்கிய தொழில்நுட்பங்கள், பழந் தமிழர்களால் விஞ்ஞான பூர்வமாகப் பதிவுசெய்யப்படாததால் நாம் இழந்த செல்வங்கள் பலவாகும். நாட்டார் தரவுகளை மூடியிட்ட மனத் தடைகளுடன் அணுகாமல், திறந்த மனதுடன் ஆய்வறிஞர்கள் ஆராய முன்வர வேண்டும்.

 நன்றி : கழனியூரன் ('கிராமங்களை கடந்து செல்லும் கால்கள்' புத்தகத்திலிருந்து)

மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயத்தை ஒதுக்காதிங்க


வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

நன்றி:எழுதமிழா

அதிகாலையில் தண்ணீர் பருகினால் வியாதிகளை விரட்டலாம்



தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed tea) அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம்மெல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.

நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,

மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை

1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, or lunch and dinner do not eat or drink anything for 2 hours)
5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.
இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது மேலும் கடுமையாகாது மட்டுப் படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள்
வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள்
சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி – 30 நாட்கள்
மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) – 10 நாட்கள்
புற்றுநோய் – 180 நாட்கள்
காச நோய் – 90 நாட்கள்.

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். ”நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.

நன்றி:எழுதமிழா

சிம்புவின் போலீஸ் வேஷத்தை பற்றி பேசவில்லை - ஜீவா



சிம்புவுக்கும், ஜீவாவுக்கும் பனிப்போர் நீடிக்கிறது. “கோ” படம் ஹிட்டானதில் இருந்து இருவருக்கும் தகராறு நடக்கிறது. அப்படத்தில் நடிக்க முதலில் சிம்புவைதான் இயக்குனர் கே.வி.ஆனந்த் அனுகினார். அவர் மறுத்ததால் ஜீவா வந்தார். படம் வெற்றி பெற்ற பிறகு இன்டர்நெட்டில் ஜீவா ரசிகர்கள் சிம்புவை தாக்கியும், சிம்பு ரசிகர்கள் ஜீவாவை தாக்கியும் கருத்துக்கள் வெளியிட்டனர்.
அதன் பிறகு ஜீவா கூறும்போது, சிம்பு என் நண்பன் இல்லை என்றார். உடனே நடிகர் ஜெய் குறுக்கிட்டு ஜீவாவை கண்டித்தார். இவ்வாறு மறைமுக சண்டைகள் தொடரும் நிலையில் சமீபத்தில் சாந்தோமில் நடந்த “முகமூடி” படப்பிடிப்பு துவக்க விழாவில் சிம்புவை ஜீவா தாக்கிய பேசியதாக பரபரப்பு தகவல் வெளியானது.

இதுகுறித்து ஜீவாவிடம் கேட்டபோது, மறுத்தார். “அஞ்சாதே” படத்தில் மிஸ்கின் போலீஸ் வேடத்தில் நடிக்க அழைத்தபோது எனக்கு மீசை முளைக்கவில்லை. அதைத்தான் குறிப்பிட்டு பேசினேன். வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை. அடக்கடவுளே என் பேச்சில் இப்படியெல்லாம் அர்த்தம் எடுத்துக் கொள்கிறார்களே என்றார்.

நன்றி:எழுதமிழா

இந்தியாவில் புதிய வடிவ‌ டேப்லட் -சோனி அறிமுகம்!


புதிய வடிவ‌ டேப்லட்டை இந்தியாவில் அறிமுகம் செய்த ச்!

எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக திகழும் சோனி, தனது புதிய வடிவ டேப்லட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் டேப்லட் பி மற்றும் எஸ் என இரண்டு வகையான டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் படங்களுடன்

டேப்லட் பி - விலை ரூ.36990/-




டேப்லட் எஸ் - விலை ரூ.29990/-





வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா


மங்காத்தா வெற்றியை தொடர்ந்து சூர்யாவை கதாநாயகனாக்கி இயக்கவிருக்கிறார் வெங்கட்பிரபு. அவருடன் இணைந்து தெலுங்கு ஹீரோ ரவிதேஜாவும் நடிக்கிறார். வெங்கட்பிரபு படத்தை பற்றி கூறுகையில் திரைக்கதை படத்திற்கு பாதி முடிந்துவிட்டதாகவும், இந்த படம் தமிழுக்கு ஒரு புது பாணியை காண்பிக்கும் என்று தெரிவித்தார்.

படத்தில் நகைச்சுவை அதிகமாக இருக்கும் எனவும், சூர்யா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், அவர் வைத்திருந்த சில கதைகளில் இந்த கதையினை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் முழுவதுமாக திரைக்கதை அமைத்தவுடன் சூர்யாவிடம் கூறப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கதையின் மற்ற நடிகர் நடிகைகள் டெக்னீஷியன்கள்,  இன்னும் தேர்வாகவில்லை எப்போதும் போல் யுவன் படத்திற்கு இசை அமைக்கிறார் என்பது மட்டும் உறுதி. வெங்கட்பிரபு படம் என்றால் நகைச்சுவைக்கும், பொழுதுபோக்கிற்கும் பஞ்சம் இல்லை என்பது உறுதி.

இந்த வருட‌ டாப் 5 ஸ்மார்ட்போன்ஸ்!!


இந்த வருடத்தில் வெளியான ஸ்மார்ட்போன்களின் வச‌திகள் மற்றும் பிரபலம் அடிப்படையில் வரிசை படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் விலை மற்றும் படங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (ரூ 20000 கிழ் உள்ள போன்கள் மட்டும்).

BlackBerry Curve 9360 -- Rs 19,250





LG Optimus Black ---Rs 18,990







Sony Ericsson Xperia Neo V ---Rs 17,500



Nokia 701---Rs 18,450

 Motorola Defy Plus MB526 ---Rs 16,900


வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content