"கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்" என்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நாளை மறுநாள் (செப்டம்பர் 2)முதல் தொடங்குகிறது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ரூ 70க்கு 90 செனல்களை காணலாம் என்று சட்டசபையில் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். அப்போது அவர் பேசுகையில்,
கேபிள் டிவி இணைப்பின் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை உள்ளதாலும், இதனை சீர் படுத்துவதற்காகவும், மக்களிடம் அதிக கட்டணம் வசுலிப்பதை தவிர்க்கவும், கடந்த தி.மு.க அரசால் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனம் 2008 ஜூலை மாதம் தனது முதல் ஒளிபரப்பை தொடங்கியது, இந்நிறுவனம் முதலில் 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கியது.
பின்னர், இந்நிறுவனம் அதெ ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காக முடக்கப்பட்டது, இதனால் இந்த இணைப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 31.3.2011 அன்று 432 இணைப்பாகிவிட்டது.
புதிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வசதியினை ஏற்படுத்தும் வகையிலும், இதனை மீண்டும் அமலில் இந்த அரசு கொண்டுவருகிறது. ஏற்கனவே தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம் புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள் பராமரிப்பு செய்யப்பட்டன. மீதமுள்ள 27 மாவட்டங்களில் தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும், புதிதாக அனலாக் தொழில் நுட்ப கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டும், அரசு கேபிள் டி.வி. புனரமைக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கு கட்டுபாட்டு அறைகள் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் நிறுவப்படவுள்ளது, இதனை கண்கானிக்க முழு நேர ஒரு தலைவர் நியமிககபட்டு உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் டி.வி. சேவையைத் தொடங்கும் பொருட்டு, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 34,344 கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களிடம் 1 கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன.
கேபிள் டிவி இணைப்பின் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை உள்ளதாலும், இதனை சீர் படுத்துவதற்காகவும், மக்களிடம் அதிக கட்டணம் வசுலிப்பதை தவிர்க்கவும், கடந்த தி.மு.க அரசால் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனம் 2008 ஜூலை மாதம் தனது முதல் ஒளிபரப்பை தொடங்கியது, இந்நிறுவனம் முதலில் 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கியது.
பின்னர், இந்நிறுவனம் அதெ ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காக முடக்கப்பட்டது, இதனால் இந்த இணைப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 31.3.2011 அன்று 432 இணைப்பாகிவிட்டது.
புதிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வசதியினை ஏற்படுத்தும் வகையிலும், இதனை மீண்டும் அமலில் இந்த அரசு கொண்டுவருகிறது. ஏற்கனவே தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம் புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள் பராமரிப்பு செய்யப்பட்டன. மீதமுள்ள 27 மாவட்டங்களில் தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும், புதிதாக அனலாக் தொழில் நுட்ப கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டும், அரசு கேபிள் டி.வி. புனரமைக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கு கட்டுபாட்டு அறைகள் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் நிறுவப்படவுள்ளது, இதனை கண்கானிக்க முழு நேர ஒரு தலைவர் நியமிககபட்டு உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் டி.வி. சேவையைத் தொடங்கும் பொருட்டு, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 34,344 கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களிடம் 1 கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன.