தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

அரசு கேபிள் டிவி செப்‍-2ம் தேதி தொடக்கம் -- ஜெயலலிதா

"கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்" என்ற‌ முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், அரசு கேபிள் டிவி ஒளிபர‌ப்பு சேவை நாளை மறுநாள் (செப்டம்பர் 2)முதல் தொடங்குகிறது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ரூ 70க்கு 90 செனல்களை காணலாம் என்று சட்டசபையில் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். அப்போது அவர் பேசுகையில்,

கேபிள் டிவி இணைப்பின் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை உள்ளதாலும், இதனை சீர் படுத்துவதற்காகவும்,‌ மக்களிடம் அதிக கட்டணம் வசுலிப்பதை தவிர்க்கவும், கடந்த தி.மு.க அரசால் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனம் 2008 ஜூலை மாதம் தனது முதல் ஒளிபரப்பை தொடங்கியது, இந்நிறுவனம் முதலில் 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கியது.

பின்னர், இந்நிறுவனம் அதெ ஆட்சியாளர்களின் சுயநல‌த்திற்காக முடக்கப்பட்டது, இதனால் இந்த இணைப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 31.3.2011 அன்று 432 இணைப்பாகிவிட்டது.

புதிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வசதியினை ஏற்படுத்தும் வகையிலும், இதனை மீண்டும் அமலில் இந்த அரசு கொண்டுவருகிறது. ஏற்கனவே தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம் புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள் பராமரிப்பு செய்யப்பட்டன. மீதமுள்ள 27 மாவட்டங்களில் தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும், புதிதாக அனலாக் தொழில் நுட்ப கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டும், அரசு கேபிள் டி.வி. புனரமைக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதற்கு கட்டுபாட்டு அறைகள் ம‌ற்ற அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் நிறுவப்படவுள்ளது, இதனை கண்கானிக்க‌ ‌முழு நேர‌ ஒரு தலைவர் நியமிககபட்டு உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் டி.வி. சேவையைத் தொடங்கும் பொருட்டு, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 34,344 கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களிடம் 1 கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன.  


விநாயகர் சதுர்த்தி


இந்துக்களின் மூல முதற்பொருளாக விளங்குபவர் விநாயகப் பெருமான். அவரை துதித்தே அனத்தையும் ஆரம்பிக்கின்றோம்; செய்து முடிக்கின்றோம். குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானவர் விநாயகர்.

‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று நம் கையாலேயே பிடித்து வைத்து நாம் பூஜை செய்வதால் நமக்குப் பிடித்தமான தெய்வமாக இருக்கிறார். நம் வினைகளைத் தீர்த்து வைப்பதால் விநாயகர் என்று போற்றுகிறோம். சிவ கணங்களுக்குத் தலைவராதலால் கணபதி என்றும் கணேசர் என்றும் வணங்குகிறோம்.

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினமான விநாயகர் பிறந்த தினத்தை, ‘விநாயகர் சதுர்த்தி’ என்று விமரிசையாகக் கொண்டாடுவது இந்துக்களின் பழமை வாய்ந்த பாரம்பரியம். அவரவர் வீடுகளிலும் ஆங்காங்கேயுள்ள ஆலயங்களிலும் இவ்விழாவைக் கொண்டாடுவது மரபு. விநாயகரை பூஜித்து, விழா கொண்டாடி முடிந்ததும், அதற்கென்று செய்த அவரின் விக்ரஹத்தை (திருவுருவத்தை, மூர்த்தியை) விஸர்ஜனம் (நீரில் கரைத்தல்) செய்வதற்காக கடல், நதி, ஏரி, வாயக்கால், கிணறு என்று நீர் நிகைளை நோக்கி எடுத்துச் சென்று அங்கே கரைத்த பின்னர் அவரவர் வீடு திரும்புவது வழக்கம்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு மாபெரும் சக்தியாக உருவாக்க வேண்டும் என்று நினைத்த மராட்டிய சிங்கம் பால கங்காதரத் திலகர், வீட்டிற்குள்ளும் ஆலயங்களிலும் கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, ஊர்கூடிக் கொண்டாடும் பொது விழாவாகவும் விஸர்ஜன ஊர்வலத்தை ஊரே திரண்டு வந்து கலந்துகொள்ளும் பழக்கமாகவும் மாற்றினார் மராட்டியமாநிலத்தில் ஆரம்பித்த அவ்வழக்கம் பின்பு நாளடைவில் எல்லா மாநிலங்களிலும் பரவிவிட்டது. இறைபக்தியுடன் கூடவே தேசபக்தியும், மக்கள் ஒற்றுமையும் வளர ஏதுவான ஒரு மிகப் பெரும் விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா ஆகிப்போனது.

உபயோகமற்று இருக்கும் அரசு சேவை

ஏற்கனவே நாம் கூறிய ஒன்று தான், அரசு பேருந்தின் நிலையை
"வசதிகளை தொலைத்த அரசு விரைவு பேருந்து!!!" எனும் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தோம். அதை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடரவும்.

நாம் அந்த பதிவில் குறிபிட்டிருந்ததை போல அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் வந்ததை அடுத்து ஆவலுடன் அதை திறந்தோம். ஆனால் அது பதில் இல்லை மின்னஞ்சல் போய் சேராமல் அதற்கு வந்த அறிவிப்பு. கொஞ்சம் இதன் மீது வைத்திருந்த நம்பிக்கையும் போய்விட்டது.

எப்படியெல்லாம் நமது அரசின் சேவைகள் உபயோகமற்று இருக்கிறது. இந்த செய்தியை யாரேனும் அரசின் பார்வைக்கு கொண்டு சேர்த்தால் மக்களுக்கு போக்குவரத்து சீராக அமைய வாய்புள்ளது.

அரசு அலுவலகர்கள் அனைவரும் தப்பாக இருப்பதில்லை, ஒரு சிலரின் தவறே இதனைப் போன்ற அவலட்சனங்களுக்கு காரணமாகின்றது.


10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு -- ‍‍விரைவில் வெளியீடு !!

மத்திய அமைச்சர் நமோ நாராயணன் மீனா, இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் நோட்டு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக 10 ரூபாய் நோட்டு 100 கோடி அளவிற்கு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் சிறப்பு காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியாகின்றன.

ஆனால் காகித‌த்தாள் ஆன நோட்டுகள் அதிக நாள் புழக்கத்தில் இருப்பதில்லை. சீக்கிரம் அழியும் தன்மையுடயவன. இதற்காக தற்போதைய காகிதத்துக்கு பதிலாக பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது மத்திய‌ அரசு. இதனால் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவது தடுக்கப்படும் என்றும், 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடுவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு சர்வதேச அளவில் டெண்டர்கள் கோரப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து மதிப்புகளிலும் அச்சடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

இந்த பாலிமரால் செய்யப்பட்ட‌ (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகள் முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து நியூசிலாந்து, புருனே, நியூசிரியா, ருமேனியா, பர்முடா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவிலும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகமாகிறது.

சோதனை ரீதியாக நாட்டின் 5 நகரங்களில் முதலில் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயணன் மீனா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இளைஞர்களின் புதுப்பாணியில் அன்னா ஹசாரே

74 வயதுள்ள அன்னா ஹசாரே இப்போது இளைஞர்களின் முன்மாதிரியாக உருவாகி வருகிறார். அதோடு இல்லாமல் இளைஞர்கள் மாற்றிக் கொண்டே இருக்கும் புதுப்பாணியில் அன்னா ஹசாரே வந்துவிட்டார்.



அவருடைய படங்கள் பொரித்த சட்டைகள், தொப்பிகள் என பிரபலமாகி கொண்டே வருகிறது. போராட்டக் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட தொப்பிகள் மிக பிரபலமாகிவிட்டது.



மூவர்ணங்களில் பட்டை தலையிலும், கைகளிலும் கட்டிக் கொள்ள வந்துவிட்டது. இளைஞர்கள் நாட்டுப்பற்றினை வெளிப்படுத்தவும், அவரது ஆதரவினை வெளிப்படுத்தவும் இவை எல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுப்பாணி என்பதற்காக வாங்கி அணிவதோடு நின்றுவிடாமல், நாட்டுப்பற்றை முறையாக வெளிப்படுத்தினால் சரி.

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத முடிவு

ஊழலைத் தடுப்பதற்கான முயற்சியாக, ஹசாரேவின் வைத்த 3 முக்கிய கோரிக்கைகளையும் நாடாளுமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது. 12 நாட்களாக அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்  மேற்கொண்டிருந்தார். அதன் முடிவாக நேற்று  இரவு 8 மணியளவில் 3 முக்கிய நிபந்தனைகளையும் அரசு ஏற்கும் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். அவரது ஆதரவாளர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் இது ஒரு பெரிய வெற்றியே. நாடாளுமன்றத்தின் இந்த முடிவை அடுத்து, அன்னா ஹஸாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் பிரணாப் முகர்ஜி. மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், நாடாளுமன்ற தீர்மானத்தையும், அண்ணாவுக்கு பிரதமர் எழுதிய கடிதத்தையும் நேரடியாக வழங்கினார். அதனால் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 10 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.இது தனக்கு கிடைத்த பாதி வெற்றி என ஹசாரே கருத்து தெரிவித்தார். அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் கோஷமிட்டு இந்த முடிவை வரவேற்றார்கள்.

நேற்று  சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் ராம்லீலா மைதானத்தில் குவிந்தனர். மற்ற நாட்களில் இல்லாத அளவு கூட்டம் இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடிகர் ஆமீர்கான் நேற்று ஹசாரேவைச் சந்தித்து அவருக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். அடுத்ததாக மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக ஹஸாரே  சிகிச்சை எடுப்பார் எனத் தெரிகிறது.

ரஜினியின் உடல்நலத்தை கெடுத்தது என்ன?

ரஜினியின் உடல்நலத்தை கெடுத்தது அவரிடமிருந்த புகைப்பழக்கமும் ஒரு காரணம், இதனை மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். ர‌ஜினிக்கு இரைப்பை மற்றும் குடல் அழற்சி, நுரையீரல் பாதிப்பு, நிமோனியாவாலும் பாதிப்பு இருந்தது,  இப்போது அவர் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு பெற்று நலமாகி வருகிறார், இது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. இதன் மூலம் சொல்ல வந்தது, நுரையீரல் பாதிப்புக்கு காரணம் புகைப்பழக்கமே. அதற்காக ரஜினி ரசிகர்களை ஏமாற்றவில்லை முழுவதுமாக படித்துவிட்டுப் பாருங்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம். புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஒரு குறிப்பு. புகைப்பழக்கம் அதன் விளைவுகள் பற்றி எவ்வளவோ விழிப்புணர்வுகள் கொடுத்தாகிவிட்டது இருந்தும் அதன் மீது நடத்தப்படும் ஆராய்சிகள் குறைந்தபாடில்லை. காரணம் புகைப்பழக்கத்தின் அடிமைகள் பெருகிக் கொண்டே போவதுதான். அண்மையில் நடத்தப்ப ஆய்வில் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. புகைப்பழக்கம் எல்லா வயதினரையும் பாதிக்கிறது குறிப்பாக நடுத்தர வயது உடையவர்கள் மூளை சுருங்கும் தன்மைக்கு ஆளாகிறார்கள். 50 முதல் 60 வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அவர்களது மூளையின் வெள்ளைத்திசுவில் மாற்றம் அல்லது ரத்தக் குழாயில் சிறிய பாதிப்பு ஏற்படுவதும். திட்ட மிடுதல் மற்றும் முடிவெடுத்தல் போன்ற வற்றில் மிகவும் பின்தங்கியுள்ளதும் தெரியவந்தது.

இது என்னவோ நடுத்தர வயதுக்காரர்களுக்கு மட்டும்தானே நமக்கென்ன என்று நினைக்கும் மற்றவர்களுக்கு பொதுவான பாதிப்புகளை தெரிந்துகொள்ள மேலே படிக்கவும்.

எல்லோரும் புற்றுநோய் வரும், நுரையீரல் பாதிப்பு வரும்னு சொல்வாங்க இன்னும் தெரிஞ்சுக்க எவ்வளவோ இருக்கு. சிகரட்டில் பாக்டீரியா இருக்குன்னு கண்டுபிடிச்சுருக்காங்க அமெரிக்கர்கள் அதுவும் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி. ஆனா இந்தியாவுல இதபத்தி பெருசா விழிப்புணர்வு ஏற்படல.

ஆய்வில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பல நிறுவன சிகரெட்டுகளில் மனிதர்களை தாக்குகிற கொடிய பாக்டீரியாக்கள் இருந்தது ஓர் அதிர்ச்சி. அதுமட்டுமில்லாமல், இதில் இருக்கும் பாக்டீரியாக்கள் கொடிய நோய்கள் ஏற்படுத்துவதோடு, வருடக்கணக்கில் உடம்பில் தங்கி பல வகை நோய்களையும் உண்டாக்கும்  என்பது அதிர்ச்சி தகவல்.

அதில் கண்டெடுக்கப்பட்ட பாக்டீரியாக்களும் அதன் விளைவுகளும் :

பெசில்லஸ் (Bacillus) - உணவு சம்பந்தப்பட்ட நோய்கள்.
சூடோமோனாஸ் ஏருஜினோசா (Pseudomonas aeruginosa) - தொற்று நோய்களை ஏற்படுத்துபவை.
அசினோபாக்டர் (Acinetobactor) - நுரையீரல், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள்.
பர்கோல்டீரியா (Burkholderia) - சுவாசக் குழாய் சம்பந்தப்பட்ட  நோய்கள்.

இது போக இன்னும் சில பாக்டீரியாக்களும் இருப்தாக அந்த ஆய்வு தெரிவித்தது. ஒரே ஒரு சிகரெட் பிடித்தால் கூட அதன் விளைவு அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது நம் உடம்பில் உள்ள இரத்தநாளங்களை 25 சதவீதம் விரைத்துப்போகிறது. இதனால் சீரான ரத்த ஓட்டம் தடைபடுகிறது, இருதயம் கடுமையாக வேலை செய்தால் மட்டுமே ரத்த ஓட்டம் சீராகும் என்று தெரியவந்துளளது. இப்படி இரத்தநாளங்கள் விரைத்துப்போவது அதிகமானால் மாரடைப்பு வர அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இரத்தநாளங்கள் விரைத்துப்போவதினால் சாதாரணமாக ஓடுவது, படிக்கட்டுகளில் ஏறுவது மாதிரியான தினசரி செய்யும் செயல்கள் கூட நமக்கு மிகுந்த சிரமத்தை, அதிக மூச்சிறைப்பை ஏற்படுத்தும். புகைப்பழக்கம் இருக்கும் ஆண்களை விட பெண்களுக்கு 25 சதவீதம் கூடுதலாக இருதய நோய் ஆபத்து இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

புகையிலையில் நிக்கோடின் என்னும் நச்சுப்பொருள் இருப்பது தெரியும். அது காற்றில் கலந்துவிடுகிறது என்பதும் தெரியும். அதனால் அருகில் இருப்பவர்கள் கூட அதிக பாடதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பதும் தெரியும். தெரியாத மற்றொன்று, நிக்கோடின் காற்றில் கலந்தது போக மீதமுள்ள நிக்கோடின் புகையானது வீட்டின் சுவர்கள், தரை, தரைவிரிப்புகள், மேஜை, நாற்காலி போன்ற பொருட்களில் படிந்து விடுகின்றன. அப்படிப் படியும் நிக்கோடின் புகை நாட்கள், வாரங்கள், மாதக் கணக்கில் படிந்த பொருள்களின் மீதே தங்கிவிடுகின்றன. இதனால் பாதிப்பு பெரியவர்களை விட குழந்தைகளுக்குத்தான். இப்படி படியும் நிக்கோடின் காற்றில் இருக்கும் நைட்ரஸ் அமிலத்துடன் (Nitrous acid) கலப்பதால். கார்சினோஜென் (Carcinogen) எனும் நச்சுப்பொருளாக மாறுகிறது. இது புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை ஆகும். ஒரு சிகரெட்டில் சுமார் 100 நேனோகிராம் அளவு கார்சினோஜென் நச்சுப்பொருள் இருக்கிறது.

இதுக்கு மேலயும் புகைப்பழக்கத்தை குறைக்கிறதும் அப்புறம் விடறதும், உங்க கையிலதான் இருக்கு.
இதனை உங்கள் (புகைப்பிடிக்கும்) நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாமே

ரஜினியை தலைப்பில் போட்டுவிட்டு ஒன்றும் இல்லை என நினைக்க வேண்டாம் அறிய படங்கள் கீழே













வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content