மத்திய அமைச்சர் நமோ நாராயணன் மீனா, இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் நோட்டு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக 10 ரூபாய் நோட்டு 100 கோடி அளவிற்கு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் சிறப்பு காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியாகின்றன.
ஆனால் காகிதத்தாள் ஆன நோட்டுகள் அதிக நாள் புழக்கத்தில் இருப்பதில்லை. சீக்கிரம் அழியும் தன்மையுடயவன. இதற்காக தற்போதைய காகிதத்துக்கு பதிலாக பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதனால் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவது தடுக்கப்படும் என்றும், 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடுவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு சர்வதேச அளவில் டெண்டர்கள் கோரப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து மதிப்புகளிலும் அச்சடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
இந்த பாலிமரால் செய்யப்பட்ட (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகள் முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து நியூசிலாந்து, புருனே, நியூசிரியா, ருமேனியா, பர்முடா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவிலும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகமாகிறது.
சோதனை ரீதியாக நாட்டின் 5 நகரங்களில் முதலில் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயணன் மீனா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முதல்கட்டமாக 10 ரூபாய் நோட்டு 100 கோடி அளவிற்கு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் சிறப்பு காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியாகின்றன.
ஆனால் காகிதத்தாள் ஆன நோட்டுகள் அதிக நாள் புழக்கத்தில் இருப்பதில்லை. சீக்கிரம் அழியும் தன்மையுடயவன. இதற்காக தற்போதைய காகிதத்துக்கு பதிலாக பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதனால் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவது தடுக்கப்படும் என்றும், 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடுவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு சர்வதேச அளவில் டெண்டர்கள் கோரப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து மதிப்புகளிலும் அச்சடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
இந்த பாலிமரால் செய்யப்பட்ட (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகள் முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து நியூசிலாந்து, புருனே, நியூசிரியா, ருமேனியா, பர்முடா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவிலும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகமாகிறது.
சோதனை ரீதியாக நாட்டின் 5 நகரங்களில் முதலில் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயணன் மீனா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment