தமிழ்நாட்டில் விரைவாக ஒரு ஊருக்கு செல்லவும், தொலைதூரப் பயணங்களுக்காகவும் அரசால் கொண்டுவரப்பட்டது 'தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்', ஆனால் அரசு கொண்டு வரும் சில திட்டங்களும், செயல்பாடுகளும் மக்களுக்கு நீண்ட நாட்கள் பயனற்று போவது ஏனோ? அண்மையில் சென்னைக்குச் செல்ல அரசுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்தபோது ஏற்பட்ட அனுபவத்தினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மிக மோசமான, அழுக்கான ஒன்று அது. அதன் புகைப்படங்களும், காணொளியும் கீழே உள்ளன.
இருந்தும் நாங்கள் புகார் செய்ய போக்குவரத்துக் கழகத்தின் இணையதளத்தில் (http://www.tnstc.in/suggestions.html) இருந்து புகார் செய்ய கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு (comr@tnstc.in) புகாரினை அனுப்பினோம்.
அரசு இந்த மின்னஞ்சலையாவது சரியாக பயன்படுத்துகிறதா என்று தெரியவில்லை, பார்த்தால் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருக்கிறது. இப்படிப்பட்ட புகார்களை யாரேனும் சரியாக இடத்திற்கு கொண்டு சேர்க்க வேறு வழி தெரிந்தால் அதை செய்து, அனைவருக்கும் பகிர்ந்த்து கொள்ளவும்.
பிய்ந்தும், அழுக்கும் நிறைந்த இருக்கைகள்
தொய்ந்து போன மீள்பட்டை (Elastic), காணாமற்போன கைப்பிடிகள் (Handles) மற்றும் பொருட்கள் வைக்கும் மரவை (Tray)
இருக்கைகள் இடையே உடைந்த கைகள்
காணாமற்போன மின்விசிறி, மற்றவை இயங்காமலும் அழுக்காகவும்
கைப்பிடி இல்லாச் சன்னல்
இதுவே அந்த (அழகான?) பேருந்தின் முன் தோற்றம்
சிறிது நேரம் பயணம் செய்தவுடன் பெய்த மழையில், அது உள்ளே பெய்கிறதா இல்லை வெளியே பெய்கிறதா என்று சந்தேகம் எழும் அளவிற்கு பேருந்தினுள் தண்ணீர் வந்தது, சன்னல் ஓரம் இருந்த அனைவரும் எழுந்து நின்றே பயணம் செய்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அனைவரும் அமைதியாக வந்ததே, அப்படியே நடத்துனரிடம் கேட்டாலும், 'நாங்க என்ன செய்ய முடியும்?' என்ற பதிலை தவிற வேறு எதுவும் வரப்போவதில்லை. ஒரு நபர் கேட்பதனால் இந்த அவலங்களை சரி செய்துவிட முடியாது. பேருந்தில் ஏறும் அனைவரும் முறையிட்டால், நடத்துனர் நடவடிக்கை எடுக்காமலா போய்விடுவார்?
இது மட்டுமா? இன்னும் எவ்வளவோ மோசமான பேருந்துகள் அரசால் இயக்கப்படுகிறது, மூட்டை பூச்சி, உடைந்த இருக்கை, மெதுவாக ஓட்டிச் செல்வது, பழுது நீக்காமல் இருப்பது, என நிறைய பேருந்துகள் இருக்கின்றன. இதையெல்லாம் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருக்கிறது அரசு. இப்படி மக்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு வசதி, பராமரிப்பு இல்லாத பேருந்துகளை இயக்கலாமா? இது போன்ற செயல்களினால் அடுத்த மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும், ஏன் நமக்கும் எப்படி நமது அரசின் மீது நல்ல மதிப்பு ஏற்படும். இதனால் மக்கள் விலை உயர்ந்த தனியார் பேருந்துகளையே நாடுகின்றனர்.
பேருந்தின் வெளித்தோற்றம் மட்டும் வெள்ளை பூச்சு அடிக்கப்பட்டால் போதுமா, உள்ளே இருக்க வேண்டிய வசதிகள் இருக்க வேண்டாமா? இதற்கு பெயர்தான் சொகுசுப் பேருந்தா? ஒரு ரூபாய் இல்லை என்றாலும் நடத்துனர் பயணிகளை பயணிக்க அனுமதிப்பாரா? மக்களிடம் தன்மையாக எல்லாப் நடத்துனரும் நடந்துக் கொள்கிறார்களா? இப்படிப்பட்ட பேருந்துகளில் இருக்கும் நடத்துனரோ, ஓட்டுனரோ தங்கள் குடும்பங்களை அழைத்துச் செல்வார்களா? நடத்துனருக்கு இந்த பேருந்தின் நிலை தெரியாமலா இருக்கும்? போக்குவரத்துக் கழகத்திடம் நடத்துனர் இதை தெரிவித்து சீர் செய்ய முடியாதா? அல்லது போக்குவரத்துக் கழகமே இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதா?
பயணிக்கும்பொழுது எடுத்த காணொளி
அரசு இந்த மின்னஞ்சலையாவது சரியாக பயன்படுத்துகிறதா என்று தெரியவில்லை, பார்த்தால் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருக்கிறது. இப்படிப்பட்ட புகார்களை யாரேனும் சரியாக இடத்திற்கு கொண்டு சேர்க்க வேறு வழி தெரிந்தால் அதை செய்து, அனைவருக்கும் பகிர்ந்த்து கொள்ளவும்.
0 comments:
Post a Comment