தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

யுவன் சங்கர் ராஜாவின் 100வது படம்



யுவன் சங்கர் ராஜா தனது இசைப் பயணத்தை 1996ஆம் ஆண்டு ஆரம்பித்தார், அவரது முதல் படமாக சரத்குமார் நடித்த அரவிந்தன் அமைந்தது, முதல் படத்திலேயே நல்ல மெலடி மற்றும் துள்ளும் இசையை வழங்கினார். 15 வருடங்கள் கடந்தும் தனக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துள்ளார். சில ஒடாத மொக்கை படங்கள் கூட யுவனின் பாடல்களுக்காக எல்லோரின் மனதிலும் ஞாபகம் உள்ளது.

தற்போது அவர் தனது 100வது படத்தை இசை அமைக்கவிருக்கிறார், அதுவும் அவரது சகோதரரின் இயக்கத்தில், ஆம் வெங்கட்பிரபு கார்த்தி இணையும் பிரியாணி தான் யுவனின் 100 வது படம். சென்னை 600028 முதல் மங்காத்தா வரை யுவனின் இசை வெங்கட்பிரபுவிற்கு ஒரு பெரிய பலமாகவே இருந்து வந்துள்ளது, தற்போது 100 வது படமாக வேறு இது அமைவதால் யுவனின் கவனமும் பாடல்களும் மிகச் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வெங்கட்பிரபு "எனது தம்பியை பெருமையாகவும், அவரது 100வது படத்தை நான் இயக்குவதில் மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

வாழ்துக்கள் யுவன்!

லிங்குசாமியின் அடுத்த இயக்கத்தில் சூர்யா


லிங்குசாமி தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார், இன்னும் பெயர் முடிவாகாத அந்த படத்தில் சூர்யா நடிப்பார் எனத் தெரிகிறது. இப்படத்தை லிங்குசாமியே தனது சொந்த தயாரிப்பான திருப்பதி பிரதர்ஸ் மூலமாக எடுக்கவிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவிருக்கிறார்.

படத்தின் கதாநாயகியாக சமந்தா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சூர்யா தற்போது 4 படங்களில் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. இன்னும் திரைக்கதை முடிவாகாத நிலையில் லிங்குசாமி அதனை முடித்துவிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிகிறது.

நூறு முத்தங்களுடன் ஒரு பாடல்



தமிழ் சினிமாவில் புதிது புதிதாக சிந்தித்து பாடல்களும் எடுக்கின்றனர், அதன் உச்சகட்டத்தில் கிடைத்த யோசனையில் சீனுராமசாமி தான் இயக்கும் நீர்பறவை எனும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் 100 முத்தங்களை காட்சியைமக்க போகிறார்.

ரெட்  ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில், விஷ்னு மற்றும் சுனைனா நடிக்கின்றனர். கதைப்படி பிரிந்து இருக்கும் காதலர்கள், நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கின்றனர். அப்பொழுது இடம்பெறும் பாடல் காட்சியில் இரண்டு பேறும் முத்தமிட்டுக்கொள்வது போல பாடல் படமாக்கப்படுகிறது, அந்த ஐந்து நிமிடத்திற்குள் 100 முத்தங்கள் ஒருவருக்கொருவர் கொடுப்பார்கள், அது அருவருப்பாக இருக்காது என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!!!

பில்லா 2 விமர்சனங்கள்




மங்காத்தா என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தந்த அஜித்தின் அடுத்த படம் , 2007 இல் வெளியாகி சக்கை போடு போட்ட பில்லா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வரும் படம் . உன்னைப்போல் ஒருவன் என்ற வெற்றித் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த சக்ரி டலோடியின் இரண்டாவது படம் . இவ்வாறு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கொண்டு வெளிவந்திருக்கும் பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா??? நிச்சயமாக ஆம் என்று கூறலாம் 
படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் "தம்" அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும் ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்...உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா...என்று சொல்லுவது வரைக்கும் திரை அரங்கு விசில் சத்தத்தாலும் கூக்குரல்களாலும் நிரம்பி வழிந்தது...!
சக்கரவர்த்தி டொலட்டி"க்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல வேண்டும்.தனது ஆங்கில பாணியில் ஒரு படத்தை குயாலாக எடுத்து முடித்திருக்கின்றார்.எதுக்கும் பயப்படாமல் வெருமனையே ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு படத்தை கலக்கலாக எடுத்து விட்டிருக்கின்றார்
படத்தில் பாடல்கள் அனைத்தும் பொருந்த வேண்டிய இடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது..குறிப்பாக "மதுரை பொண்ணு..." பாடல் வாலிபர்கள் மனதில் கோடி பட்டாம் பூச்சி...சும்மா தாவணிய தூக்கி தூக்கி ஆடி இருக்காங்க...!(கலக்கலோ கலக்கல் தான்..இந்த பாட்டில எந்த பொண்ண பார்த்தாலும் சூப்பர் ஆக இருக்கு...மச்சீ என்று என் நண்பன் ஷான் சொல்ல கேட்டேன்..!)
படத்தி ஒரு பாடல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.அதுக்கும் புரியாத ஒரு மொழி பாடல்.அதில் வெளி நாட்டு அழகிகள் நடனம் ஆடுவது போல காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்.எந்த பாடலும் வெறுமனையே பாடலாக இல்லாமல் பாடலுடன் சேர்ந்து கதையும் நகர்வது படத்திற்க்கு இன்னும் ஒரு பிளஸ்..!அஜித்தை மட்டும் நம்பி முற்றும் முழுதாக எடுக்கப்பட்ட படம்..இது என்று சொன்னால் அது மிகையாகாது..!எந்த இடத்தை பார்த்தாலும்,எடுத்துகொண்டாலும் அஜித்தை பின்புலமாக கொண்டே கதைகள் நகர்வது இன்னும் சுவாரஸ்யம்...!
படத்தி இரண்டு கதாநாயகிகள் என்று இருந்தாலும் அவர்கள் எவளோதான் கவர்ச்சி காட்டினாலும் அஜித் மட்டும்தான் கண்ணுக்குள் நிற்கின்றார்..சொல்லப்போனால் இந்த படத்தினை தனி ஒருவராக காவிச்சென்றவர்..என்று சொல்லலாம்..!இப்ப கூட சொல்லணும் போல இருக்கு அடுத்த அடுத்த.....தலதான் என்று...!
படத்தின் எடிட்டர்க்கு பெரிய ஒரு நன்றி சொல்லியே ஆகணும் ஏன்னா இத்தனை கத்திரிக்கோல் போட்டு எந்த காட்சிகளிலும் அது தெரியாதது போல எடிட் செய்து இருக்கிறார்.படத்தின் சுவார்யஸ்திற்க்கும் இவர்தான் பொறுப்பு...தனது கடமையை முழுமையாக செய்து முடித்திருக்கின்றார்.படத்துக்கு மேலும் பலம் சேர்ந்தது இருக்கின்றார்..!
படத்தில் எந்த ஒரு காட்சியும் சலிப்பு தட்டுவது போல இல்லாமல்..அடுத்து என்ன நடக்க போகின்றது என்று தெரியாமல் ரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே அடிக்கடி இயக்குநர் அனுப்பி விடுகின்றார்..அவ்வளோ பிரமாதமான திரைக்கதை...படத்தில் பெரிய திருப்பம் "பில்லா தான்தான் இனி எல்லா ஆயுத பிஸ்னஸ் எல்லாவற்றையும் செய்வதாக சொல்லும்" கணத்தில் இருந்து படம் சூடு பிடிக்க தொடங்குகின்றது...இறுதிவரை தனது தனித்துவத்திற்க்காக போராடும் ஒரு தலைவனாக பில்லாவை காட்டி இருப்பது "சக்கரவர்த்தி டொலட்டி"க்கு ஒரு பெரிய வெற்றி...!
பில்லா-II முடியும் இடத்தில் இருந்து பில்லா-2007 தொங்குகின்றது என்பது படத்தின் சளைக்காத கதையின் வடிவமைப்பிற்க்கு கிடைத்த மாபெரும் கரவோசம்..!பில்லா-III இனை குறி வைத்து "சக்கரவர்த்தி டொலட்டி" கதையை நகர்த்தி இருபது தெளிவாக தெரின்கிறது..அந்த படமும் தயாராகும் போலதான் இருக்கு போற போக்கை பார்த்தால்...!
இறுதியில் படம் யுவனின் இனிய குரலுடன் தொடங்கும் "gang gang ganster..." பாடலுடன் முடிவுக்கு வருகின்றது..இறுதியாக எழுத்து ஓட்டத்துடன் அஜித்தின் சாகாசங்கள் காடப்படுகின்றது...!
வழக்கமையான படங்களை போல் அல்லாது வித்தியாசமான ஒரு புதிய முயற்சி ரசிகர்களின் பலத்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் இருந்த படம்...இப்போது வழமைக்கு மாறாக சாதனைகளின் குமியலாக வலம்வந்துகொண்டிருக்கின்றது...!
பில்லா பாகம் இரண்டு இனி தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொடக்கம்...நேரம் போறதே தெரியாமல் இருக்கின்றது படத்தின் முக்கிய ஒரு பிளஸ் பாயிண்ட்..
பில்லா 2 - அஜித்தின் கிரீடத்தில் இன்னொரு வைரக்கல்

நன்றி : தமிழ் 10


As expected the story about on How the Refugee turning out as a Don. The first few minutes of the movie touching the srilkan refugee issue which is really gonna create a impact among tamilians and gonna create a new market for Ajit in NRI Area
Its really gonna be a electrifying for fans whenever Ajith appearing in a screen. As usual Ajith carried himself superbly throughout the film. Especially the stunt sequences are rocking.
This film really gonna take Ajith to next level in his career. Once again this movie expected to break all the collections of Kollywood.
Like Mangatha for VP, For Chakri this gonna create a good place in Tamil Cinema
Technically the film is outstanding.
Finally this film is not only a treat for Ajith fans but also for Tamil Cinema Lovers. For the persons whoever booked the tickets in advance,it wont disappoint you for sure.


நன்றி : துபாயில்ருந்து டைம்ஸ் ஏ பி

!படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் "தம்" அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும் ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்...அதுக்கும் எழுத்து ஓட்டத்துடனேயே...


உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா...என்று சொல்லுவது வரைக்கும் திரை அரங்கு விசில் சத்தத்தாலும் கூக்குரல்களாலும் நிரம்பி வழிந்தது...!



சாரம் கட்டி இருக்கு அஜித்(டேவிட்) எப்டி "கோட் சூட்" போட்டார் என்பதை தத்துரூபமாக எடுத்து காட்டி உள்ளார்.(சுருக்கமாக சொல்லப்போனால் கதையின் மையம் இங்கு இருந்துதான் துடன்குகின்றது)
"சக்கரவர்த்தி டொலட்டி"க்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல வேண்டும்.தனது ஆங்கில பாணியில் ஒரு படத்தை குயாலாக எடுத்து முடித்திருக்கின்றார்.எதுக்கும் பயப்படாமல் வெருமனையே ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு படத்தை கலக்கலாக எடுத்து விட்டிருக்கின்றார்...

படத்தில் பாடல்கள் அனைத்தும் பொருந்த வேண்டிய இடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது..குறிப்பாக "மதுரை பொண்ணு..." பாடல் வாலிபர்கள் மனதில் கோடி பட்டாம் பூச்சி...

 ஒரு பாடல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.அதுக்கும் புரியாத ஒரு மொழி பாடல்.அதில் வெளி நாட்டு அழகிகள் நடனம் ஆடுவது போல காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்.எந்த பாடலும் வெறுமனையே பாடலாக இல்லாமல் பாடலுடன் சேர்ந்து கதையும் நகர்வது படத்திற்க்கு இன்னும் ஒரு பிளஸ்..!அஜித்தை மட்டும் நம்பி முற்றும் முழுதாக எடுக்கப்பட்ட படம்..

எந்த இடத்தை பார்த்தாலும்,எடுத்துகொண்டாலும் அஜித்தை பின்புலமாக கொண்டே கதைகள் நகர்வது இன்னும் சுவாரஸ்யம்...!

படத்தி இரண்டு கதாநாயகிகள் என்று இருந்தாலும் அவர்கள் எவளோதான் கவர்ச்சி காட்டினாலும் அஜித் மட்டும்தான் கண்ணுக்குள் நிற்கின்றார்..சொல்லப்போனால் இந்த படத்தினை தனி ஒருவராக காவிச்சென்றவர்..என்று சொல்லலாம்..!

"உனக்குள்ளே மிருகம் என்னும் பாடல்.." அஜித்தின் வரலாற்றில் இன்னும் ஒரு திருப்பு முனையான பாடல்...முழுக்க முழுக்க ஸ்டில்களை மட்டும் வைத்து மிகவும் தத்துரூபமாக எடுக்கப்பட்ட பாடல்...அஜித் அந்த பாடலில் ஒரு வித்தியாசமாக தெரிகின்றார்...!பாடல் புதியது அதன் வரிகள் மிகவும் கூர்மையானது..

பதினொரு வருடங்களுக்கு பின்பு அஜித் இரண்டு படங்கள் அடுத்து அடுத்து வென்று இருக்கின்றார்...பில்லா பாகம் இரண்டு ஒரு தமிழ் சினிமாவின் இன்னொரு அத்தியாயம் சொல்லப்போனால் இன்னொரு ஆரம்பம் என்றும் சொல்லலாம்...பில்லா பில்லாதான் அஜித் அஜித்தான்...இந்த படம் பதினாறு வயது தொடக்கம் நாற்பது வயது வரைக்கும் இருப்பவர்கள் பார்ப்பதற்க்கு உகந்தது...ரத்தமும் சதையும் கலந்த ஒரு படம்...பில்லா..டேவிட்...பில்லா... கதை சொல்லும் கதையின் கதாநாயகன்.தனி ஒருவராக நின்று படத்தினை தூக்கி நிறுத்தி இருக்கின்றார்...!


நன்றி : யாழ்பாடி

மாற்றான் ட்ரைலர் புத்தம் புதுசு!!

மாற்றான் ட்ரைலர் புத்தம் புதுசு!!




ஷ்ருதிஹாசனை பிடித்த பிரபுதேவா


பிரபுதேவா நயன்தாரா பிரிவிற்கு  பிறகு ஒருவரை ஒருவர் பற்றி மாற்று கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருந்தனர். அதன் பிறகு பிரபுதேவா தொடர்ந்து பாலிவுட் பக்கமே தனது கவனத்தை செலுத்தி வந்தார். அவர் கடைசியாக இயக்கிய சிறுத்தை படத்தின் ரீமேக்கான ரௌடி ரத்தோர் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.


ஹிந்தி பட வாய்புகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் பிரபு தேவா தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார், நீண்ட நாட்களாக கதாநாயகியை தேடிக்கொண்டிருந்தவர் தற்போது ஷ்ருதிஹாசனை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. ஷ்ருதிஹாசன் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார், இந்த படம் காதல் நிறைந்த கமர்சியல் படமாக இருக்கும் என பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

கட்டிப்பிடித்து முத்தமிட்ட த்ரிஷாவும் நயன்தாராவும்



த்ரிஷாவிற்கும் நயன்தாராவிற்கும் நீண்ட நாட்களாக பனிப்போர் நடந்து வந்ததாக பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. தற்போது அதை பொய்யாக்கியுள்ளனர் இருவரும். நயன்தாரா பிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சிகாக சென்னை வசம் வந்து போனார். அவர் சிறந்த நடிகைக்கான தெலுங்கு விருதினை பெற்றார். பிலிம்பேர் விருது விழா முடிந்த பிறகு, கடந்த வாரம் சென்னையில் நடந்த பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற நயனும் த்ரிஷாவும் ஒருவரைஒருவர் கட்டியணைத்து பல நாட்கள் பழகியது போல் நட்பு பாராட்டியுள்ளனர்.


அவர்கள் இருவரும் கட்டியணைத்து முத்தங்களும் பரிமாரிக்கொண்டுள்ளனர் இது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. குருவி பட வாய்ப்பினை திரிஷா நயனிடமிருந்து தட்டிப் பறித்ததாக ஒரு செய்தி வெளியானதிலிருந்து இருவருக்கும் பனிப்போர் என்ற செய்திகள் வந்துகொண்டிருந்தது, தற்போது அதை இருவரும் பொய்யாக்கியுள்ளனர். 'நடிகைகள்' ஆயிற்றே எந்த சூழலையும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.

2012 ஒலிம்பிக்கில் தமிழ் பாடல்கள் பாடும் தமிழ் இசைகுழு


சென்னையை சேர்ந்த இசைகுழு ஒன்று 2012ஆம் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறது, ஆம் 'ஸ்டக்காடோ' (Staccato) எனும் பெயர் கொண்ட அந்த இசைகுழு ஆசியாவின் சார்பாக பங்கேற்கிறது. ஆசியாவிலிருந்து 10,000திற்கும் மேற்பட்ட போட்டியாளர்களுக்கு மத்தியில் 2 குழுக்கள் மட்டுமே தேர்வாகியுள்ளது, ஒன்று சீனாவிலிருந்து மற்றொன்று நம் சென்னையிலிருந்து.


லண்டனில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விழாவில், ஜுலை 30 மற்றும் ஆகஸ்டு 2 ஆம் தேதிகளில் இவர்கள் பாட உள்ளனர். தற்போதுள்ள கர்நாடக சங்கீதப் பாடல்களில் நன்கு பெயர் பெற்ற இவர்கள் தற்போது லண்டன் செல்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இந்தியாவை பிரதிபலிக்க இவர்கள் மட்டுமே உள்ளனர், அதில் தமிழ் பாடல்களும் இடம் பெறப்போவது தனிச் சிறப்பு.அங்கு பலவிதமான பாடல்களை அவர்கள் வழங்க உள்ளனர்.
அதிலும் இவர்கள் சென்னை (டப்பாங்குத்து) பாடலையும் பாடி மகிழ்விக்க இருக்கின்றனர், இதனால் தமிழ் பாடல்களும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கப்போவது உறுதி. என்னதான் மற்ற ரகப் பாடல்களை பாடினாலும், இந்த பாடல் வெளிநாட்டவர்க்கு புது விருந்தாக அமையும்.

அவர்கள் ஒலிம்பிக்கில்  தேர்வாவது அவர்களுக்கே தெரியாமல் நடந்திருக்கிறது, அவர்களது குழுவில் உள்ள ரஃபிக் என்பவர் ஒலிம்பிக் தேர்விற்கு  அவர்கள் இசையமைத்த பாடல் ஒன்றை அனுப்பி  வைத்துள்ளார். இது தெரியாமல் இருந்த அந்த குழு தேர்வான மின்னஞ்சல் கிடைத்தபொழுது அதை பொய் என்று நினைத்துள்ளனர். பின்புதான் அவர்களுக்கு விஷயமே தெரியவந்துள்ளது.


ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் இயக்குனரான டேனி போயல் தான் ஒலிம்பிக்கின் தேர்வுக்குழுவில் இருந்து இந்த இசைகுழுவை தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து லண்டன் செல்லும் ஸ்டக்காடோவிற்கு வாழ்த்துக்கள், நீங்களும் வாழ்துக்களையும் விருப்பங்களையும் தெரிவிக்க அவர்களது பேஸ்புக் மற்றும் இணையதள முகவரியை கீழே சொடுக்கவும்.

https://www.facebook.com/Staccato1708

http://www.reverbnation.com/staccato

விஸ்வரூபம் ‍‍‍‍ட்ரைலர் மற்றும் உருவானவிதம்

விஸ்வரூபம் ‍‍‍‍ட்ரைலர் 





உருவானவிதம்



பாலின்பக் கல்வி (Sex Education) தேவையா? தேவையற்றதா?


இன்று நம் சமுதாயம் செக்ஸ் எனும் மயக்க உலகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது, பல செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. கணவன்/மனைவி கள்ளத்தொடர்பு, பெற்ற பிள்ளைகளுடன் தகாத உறவு, ஆசிரியர் மாணவ முறைகேடு எனக் கூறிக் கொண்டே போகலாம். 15 வருடங்களுக்கு முன்பு கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட விசயங்கள் இப்போது அடிக்கடி நடக்கும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் முறையற்ற பாலின்பக் கல்வி இல்லாததே. இப்போது உள்ள பெற்றோரிடம் பாலின்பக் கல்வி வேண்டும் என்றால் கண்டிப்பாக அதை எதிர்ப்போரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். ஏன்? என்றால் சிறு வயதிலேயே செக்ஸ் பற்றி சொல்லிக் கொடுத்தால் கெட்டுப்போய் விடுவார்கள் என்பதே அவர்கள் கருத்தாக இருக்கும்.


SEX என்ற ஆங்கிலச் சொல்லை 'ஒரே அர்த்தத்துடன்' பார்க்கின்றனர் நிறைய பேர், அதுதான் SEX EDUCATION என்ற விசயத்தையும் தடுக்கிறது. SEX என்ற ஆங்கிலச் சொல்பல அர்த்தங்களை கொண்டுள்ளது. பாவம் உலகை ஆளும் ஆங்கிலத்திற்கு வார்த்தை பற்றாக்குறை போலும். எல்லா இடங்களிலும் அந்த ஒரு வார்த்தையை மட்டும் வைத்தே பிழைப்பை நடத்துகிறது ஆங்கிலம். தமிழ் மொழியில் தான் 2 லச்சத்திற்கும் அதிகமான வார்த்தைகள் இருக்கிறது, என்ன செய்ய நாம் அதை தெரிந்து வைத்துக்கொள்வதில்லை. சரி விசயத்திற்கு வருவோம், SEX என்ற சொல்லுக்கு 'பால் , பால் வேறுபாடு, ஆண் பெண் பாகுபாடு , இனம்,  உடலுறவு , பாலியல் உறவு' என தமிழில் பல அர்த்தங்கள் உள்ளது. அதில் உடலுறவு , பாலியல் உறவு என்ற அர்த்தத்தை மட்டுமே நாம் மனதில் வைத்திருந்தால் அது நம் அறியாமை. அதனால் தான் தலைப்பில் 'பாலின்பக் கல்வி' என்று குறிப்பிட்டிருப்பேன்.

நமது கலாச்சாரம் போல் எந்த நாட்டிலும் இல்லை, ஆனால் அதை சரியாக சொல்லி புரியவைக்காமல், பல கட்டுப்பாடுகளை மட்டும் விதித்து இப்போது முறைகேடுகள் அதிகரித்துவிட்டது. எந்த ஒரு விசயத்தையும் அளவுக்கு அதிகமாக அடக்கினாலோ, இல்லை அடக்கு முறை மேற்கொண்டாலோ அது பெரிதாக ஒருநாள் வெடிக்கும். நம் நாட்டில் SEX என்பதில் அந்த முறையை தான் கையாளுகின்றனர். அதை வெறும் அந்தரங்கமான ஒன்றாக மட்டுமே சித்தரித்துவிட்டோம். அதை சரியான முறையில், சரியான வயதில் இருபாலருக்கும் கல்வியாக புரிய வைக்கவேண்டும். உடனே சில பேருக்குத் தோன்றும் 'சின்ன வயசிலேயே செக்ஸ் பத்தி சொல்லிகொடுப்பதா?', முட்டாள்தனமாக கூட தெரியும். அதை வெறும் உடலுறவு சார்ந்ததாக மட்டும் சொல்லி கொடுக்காமல் அதோடு நம் கலாச்சாரத்தையும், விழிப்புணர்வையும் கலந்து சொல்லிக் கொடுப்பதே நல்ல பாலின்பக் கல்வியாகும். அதை வெறும் உடலுறவு சார்ந்ததாக மட்டுமே பார்க்கும் முட்டாள்களுக்கு எதையும் சொல்லி புரியவைக்க முடியாது.

நமது கலாச்சாரத்தில் 'பெண்ணின் திருமண வயது 21'க்கு மேல் என்ற எண்ணம் உண்டு, அதை சாதரணமாக சொல்லிவிடவில்லை. அதை ஆட்டோக்களுக்கு பின்னால் மட்டுமே பார்த்துப் பழகிய நமக்கு ஏன் சொன்னார்கள் என்று முழுதாக தெரிந்து கொள்வதில்லை. ஒரு பெண் பருவம் அடைந்த உடன் திருமணம் என்று சொல்லாமல் ஏன் ஒரு வயதை நிர்ணயிக்க வேண்டும்? அந்த வயதிற்கு பிறகே ஒரு பெண் மனதாலும் உடலாலும் பக்குவமாகி தாம்பத்திய வாழ்க்கைக்கு தயாராகி விட்டாள் என்பதே அதன் அர்த்தம். பாலின்பக் கல்வியைதான் நமது கலாச்சாரதில் கலந்துவிட்டனர். பாலியல் குற்றங்கள், இளம் வயதில் கர்ப்பம், தகாத உறவு, தவறான உறவுகளால் வரும் பாலியல் நோய்கள், எய்ட்ஸ் ஆகியவற்றை தடுக்கவே நமது கலாச்சாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருந்து வருகிறது. அப்போது ஒளிவு மறைவாக அதை சொல்லிவைத்தனர், அதன் காரணம் ஒருவரின் முழு கவனமும் இதன் மீதே இருந்து கெட்டுப்போய்விடக்கூடாது என்பதே..அதே போன்று பால் உணர்வை தூண்டும் விசயங்கள் அந்த காலத்தில் அதிகமாக இல்லை. இப்போதோ ஊடகமும், சினிமாவும், இணையமும் போதும் கவர்ச்சி, ஆபாசம் காட்டி பாலுணர்வை தூண்ட . கட்டுப்பாடுகளை கொண்டுள்ள நாம் பாலுணர்வை தூண்டும் விசயங்களையும் கையில் வைத்துள்ளோம், இதனால்தான் மேலே கூறிய பிரச்சனைகளை சந்திக்கின்றோம். இதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முறையான பாலின்பக் கல்வி  அவசியம்.

பாலின்பக் கல்வி என்பது வெறும் உடலுறவு சார்ந்தது என்ற எண்ணத்தை முதலில் அகற்ற வேண்டும். அதன் குறிக்கோள் உடலுறவு சார்ந்த கெட்ட எண்ணங்களை, பழக்கங்களை நிறுத்தவேண்டும் என்ற நோக்கில் இருக்க வேண்டும். தகாத வயதில் அதை மேற்கொண்டால் அதன் விளைவு மனதளவிலும் உடலளவிலும் எவ்வாறு இருக்கும் என புரியவைத்தல் வேண்டும். அதை எந்த வயதில் எந்த நேரத்தில் எப்படி மேற்கொள்வது என சரியாக மற்றும் முறையாக விளக்க வேண்டும். அதோடு நம் கலாச்சாரத்தையும் நன்கு புகுத்த வேண்டும். எதனால் அது தவறு, எப்போது அது சரி என சொல்விளக்கம் வேண்டும்.


எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று, முதலில் இதை பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தால் நல்லது. அதுவும் அவர்கள் பருவ வயது அடையும் காலத்தில் அதன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் இதனை பாடமாக கொண்டுவரும் பட்சத்தில் சில கற்பிக்கும் முறைகளை கையாளவேண்டும். முதலில் பாடத்தில் வரும் விளக்கமோ படமோ பால் உணர்வை தூண்டாத விதத்தில் இருக்க வேண்டும், இதற்கு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் பரிசீலிப்பது நல்லது. சில பகுதிகளாக பிரித்து அந்த வயதிற்கற்ற கல்வியை கொடுக்க வேண்டும். ஆண்களுக்கு ஆண் ஆசிரியர்களும் பெண்களுக்கு பெண் ஆசிரியர்களும் எடுக்கலாம். பாலுணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்தால் அதற்கு சிறந்த மனோதத்துவ நிபுணரிடம்  மாணவர்களுக்கு தகுந்த புத்திமதிகளை கூற வேண்டும். 

கலாச்சார பின்னனியோடு இவ்வாறு பின்பற்றினால் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம், ஆனால் இதனை உடனே செயல்படுத்த முடியாது. ஏனெனில், பாலின்பக் கல்வி பெறாத ஆசிரியர்கள் தான் இப்போது உள்ளனர். இதனை பெற்றோர்கள் மூலமாக இப்போது கொடுப்பதே நல்லது. இதன் விளைவு, விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணர்த்தவேண்டும். 2 அல்லது 3 தலைமுறைக்கு பிறகு பாலின்பக் கல்வி பெற்ற, பக்குவமடைந்த நல்ல ஆசிரியர்களும் இதனை எடுத்துக்கூறலாம். வளரும் சமுதாயம் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமுமே உள்ளது, கவனமாக ஒழுக்கத்துடன் வளர்த்தால் கண்டிப்பாக நல்ல சமுதாயமும் கலாச்சாரமும் இருக்கும் (கிடைக்கும்).

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content