விலை போகும் ஆண்கள் ! விடையில்லா பெண்கள்!


ஆணுக்கு பெண் இளைப்பில்லை; ஆணுக்கு பெண் சம‌நிகர் சமானம், என்பதெல்லாம் வெறும் வாய்கூற்றாகவே போய்விட்டது இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட. திருமணம் என்னும் வியாபார ச்ந்தையில், வரதட்சனை என்னும் விலை பேசிதான் மணமகனுக்கு திருமணம் செய்யப்படுகிறது.

இந்த வரதட்சனை கொடுமை என்னும் பெண் கொடுமை தமிழகத்திலும், இந்தியாவின் இதர மாநிலங்களிலும் ஒழிந்தபாடில்லை. கடந்த மாதம் நாளிதழ் ஒன்றில் வெளியான் தலைப்பு செய்தியே இதற்கு நற்சான்று.

செய்தி யாவெனில், வரதட்சனை தரமறுத்ததால் மணப்பெண் உயிருடன் எரித்துக்கொலை! நாட்டில் கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணிடம் மட்டுமே வரதட்சனை கேட்கப்பட்டதா என்றால் இல்லை, இது அனைத்து தரப்பு மக்களிடமும், ஜாதி, மதம், கல்வி, வசதி, வேலைவாய்ப்பு என்ற பாகுப்பாட்டிற்கு ஏற்ப வரதட்சனை பெறப்படுகிறது.

வரதட்சனை என்பது திருமணத்துடன் முடிந்துவிடுவதில்லை அழைப்பு, பிறப்பு  என அனைத்து விழாக்களிலும் தொடர்கிறது. இத்தனை வரதட்சனை கொடுத்தும் மகிழ்ச்சியும், நல்வாழ்வும் என்பது மணப்பெண்ணிற்கு உறுதியில்லை.


இதன் விளைவுதான், நாட்டில் பெண் பிள்ளையை பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மட்டும் தமிழ் நாட்டில் வரதட்சனை கொடுமையின் பெயரில் 8931 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புகார் தரமால் புழுங்குவோர் கணக்கில் அடங்கா.

சென்னையில் கடந்த் ஞாயிறுயன்று வெளியான மண்ப்பெண் தேவை விளம்பரத்தில், வயது, ஜாதி, மதம் முக்கியமில்லை எனக் குறிப்பிட்டிருந்தோர் பலர், வெறும் இருவரே வரதட்சனை தேவையில்லை  எனக் குறிப்பிட்டிருந்தனர். சென்னை போன்ற பெரு நகரங்களிலே இது ஒழியவில்லையெனில் கிராமங்களை பற்றி கூறத்தேவையில்லை. ஆகையால் வியாபார திருமணத்திற்கு  விலைபோகும் ஆண்களும், பெண் கொடுமைகளுக்கு ஆளாகும் ஆண்களும் ஒழிய வேண்டும்.


0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content