தமிழ் திரை உலகின் இயக்குனர்களில் அதிகமான மக்களை கவர்ந்தது ஷங்கர் ஒருவரே. எல்லா விதங்களிலும் அனைவரையும் அன்னார்ந்து பார்க்க வைக்கும் இயக்குனரும் இவரே. கதை, திரைக்கதை, வசனம், ஓலி/ஓளிப்பதிவு, கலை, என அனைத்து துறைகளிலும் ஒரு படி முன்னே நிற்பது ஷங்கரின் தனிச்சிறப்பு.
கண் முன்னே அரிதாக பார்க்கக் கூடிய விஷயங்களை, மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ஷங்கருக்கு தனி ஆர்வம். பிரம்மாண்டம் எனும் போர்வையில் அனைத்தையும் காட்டுவதில் கைதேர்ந்தவர். பிரம்மாண்டத்தை தனது முதல் படத்தில் இருந்தே புகுத்திக் கொண்டிருப்பவர். 1993 ஆம் ஆண்டிலேயே ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து சண்டை காட்சி அமைத்தது, எலியை கடிப்பது, வெடித்த இருதயம் துடிப்பது, கண்ணாடியிலான பேருந்து, உடைகள் மட்டும் நடனம் ஆடுவது, 70 வயது கமல், இரட்டை வேடத்தை முதன் முதலாக அழகாக எடுத்தது, ஏழு அதிசயங்களை ஒரே பாட்டில் காட்டியது, ஒரு லட்சம் பானைகளை அடுக்கி பாடல் எடுத்தது, ஸ்டாப் மோஷன் (Stop-Motion) எனும் தொழில்நுட்ப முறையில் பாடல், குப்பைகளை வைத்துப் பாடல், வருடத்தில் ஒரு முறை பூக்கும் பூக்களின் நடுவே பாடல், பாதை மற்றும் சுவர் முழுக்க வர்ணம், ரஜினியை வெள்ளையாக காட்டியது, பிரம்மாண்ட கண்ணாடி அரங்குகள், யாரும் கண்டிராத பாலைவனம், தமிழுக்கு புதிதாக காட்டிய எந்திரன், பார்த்திராத இடங்கள் என அனைத்தும், பிரம்மிப்பில் அனைவரையும் சிறிது மூழ்கடித்தவையே.
ஒவ்வொரு படமும் வெளிவந்த அந்த நேரத்தில் புதிதாகவும், வியப்பில் ஆழ்த்தவும் தவறியதில்லை. தனது முதல் படத்திலிருந்து (பாய்ஸ், எந்திரன் தவிர) சமூகச் சிந்தனையை கருத்தில் கொண்டு படத்தினை எடுப்பவர். அவர் சொல்லும் நோக்கம் ஒன்றே என்றாலும், ஒவ்வொரு படத்திலும் சொல்லும் விதத்தினை வேறுபடுத்தியும், சுவாரஸ்யமாகவும் எடுத்துக் கூறியுள்ளார். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும் வெறும் தமிழ் திரைப்படங்களை பார்பவர்களுக்கு இவரது படங்கள் அந்த திருப்தியை கொடுக்க தவறியதில்லை.
ஒவ்வொரு நாயகனுக்கும், இவரது படங்களில் நடிக்க ஒரு ஏக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அடுத்து இவரது படத்தில் யார் நாயகன், இவரது அடுத்த படத்தின் கதை, என அனைத்தும் எதிர்பார்புக்கு உள்ளவையே. மக்களும் தனது விருப்ப நாயகர்களை இவரது படத்தில் அழகு பார்க்க ஆசை இருந்து கொண்டேதான் இருக்கிறது. கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஜீவா, ஆர்யா, விஷால் இவர்களில் யார் ஷங்கரின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? உங்கள் வாக்கை பதிவு செய்ய கீழே உள்ள இடுக்கைக்கு செல்லவும்.
https://www.facebook.com/questions/134292803329384/?qa_ref=qd
ஒவ்வொரு படமும் வெளிவந்த அந்த நேரத்தில் புதிதாகவும், வியப்பில் ஆழ்த்தவும் தவறியதில்லை. தனது முதல் படத்திலிருந்து (பாய்ஸ், எந்திரன் தவிர) சமூகச் சிந்தனையை கருத்தில் கொண்டு படத்தினை எடுப்பவர். அவர் சொல்லும் நோக்கம் ஒன்றே என்றாலும், ஒவ்வொரு படத்திலும் சொல்லும் விதத்தினை வேறுபடுத்தியும், சுவாரஸ்யமாகவும் எடுத்துக் கூறியுள்ளார். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும் வெறும் தமிழ் திரைப்படங்களை பார்பவர்களுக்கு இவரது படங்கள் அந்த திருப்தியை கொடுக்க தவறியதில்லை.
ஒவ்வொரு நாயகனுக்கும், இவரது படங்களில் நடிக்க ஒரு ஏக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அடுத்து இவரது படத்தில் யார் நாயகன், இவரது அடுத்த படத்தின் கதை, என அனைத்தும் எதிர்பார்புக்கு உள்ளவையே. மக்களும் தனது விருப்ப நாயகர்களை இவரது படத்தில் அழகு பார்க்க ஆசை இருந்து கொண்டேதான் இருக்கிறது. கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஜீவா, ஆர்யா, விஷால் இவர்களில் யார் ஷங்கரின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? உங்கள் வாக்கை பதிவு செய்ய கீழே உள்ள இடுக்கைக்கு செல்லவும்.
https://www.facebook.com/questions/134292803329384/?qa_ref=qd
0 comments:
Post a Comment