சென்னை அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்!!!

திங்கட்கிழமை அன்று மாலை காதலர்கள் இருவர் அவர்களுடைய அலுவலகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டனர். சென்னை மாம்பலத்தில் உள்ள கோர்டன் டெக்னாலஜீஸ் எனும் நிறுவனத்தின் முதலாளியாகிய கார்த்திகேயன் (30) மற்றும் அவரது காதலி ஸ்ரீதேவி (30) இருவரும் காதலித்து வந்தனர். ஸ்ரீதேவி அவரது அலுவலகத்திற்கு தினமும் வந்து செல்வார். திருமணத்திற்கு பிறகு ஸ்ரீதேவியை மேலளாராக அமர்த்த கார்த்திகேயன் முடிவு செய்திருந்தார்.
இருவரது குடும்பத்திலும் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது,  பின்பு இருவீட்டினரும் சம்மதித்தனர். கூடிய விரைவில் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர். திங்கட்கிழமை அன்று மாலை அலுவகத்திற்கு  கார்த்திகேயனை சந்திக்க ஸ்ரீதேவி வந்தார், இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். சுமார் 6.30 மணியளவில் அவர் தூக்கு மாட்டிக்கொண்டார். அவரை மருத்துவமனைக்கு உடனே  கார்த்திகேயன் அழைத்து சென்றார். ஸ்ரீதேவி இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தனர், அதனை அறிந்த  கார்த்திகேயனும் அலுவகத்திற்கு  சென்று தூக்கு மாட்டிக்கொண்டார். அவர்களுக்கிடையே கருத்துவேறுபாடு காரணமாக சண்டைகள் எழுந்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கார்த்திகேயன் வில்லிவாக்கத்திலும் ஸ்ரீதேவி சூலைமேட்டிலும் வசித்து வந்தனர்.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content