சமூக வலைபின்னல் ஆபத்தானதா?? பயனுடையதா??


ஒரு காலத்தில் மக்கள் தொலைத்தொடர்பிற்காக ஒற்றன், புறா, கடிதம் போன்றவற்றை பயன்படுத்தினர். சற்று முந்திய தலைமுறை வரை தொலைபேசி மற்றும் கைப்பேசியினை பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போதய தலைமுறை இணைய தளத்தையும், சமூக வலைபின்னல் வலைதளத்தினை (Social Networking website) பயன்படுத்துகிறார்கள்,
இந்த வலைபின்னல் மூலம் ஒருவரின் கருத்துக்கள் மிக வேகமாக அனைவரையும் சென்று சேருகின்றன. இதன் பயன்பாடு சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களை ஆட்டி படைக்கின்றன.

இன்று இந்த சமூக வலைபின்னல் வசதி இல்லாத கைப்பேசிகளே இல்லை எனலாம். காரணம் அந்த அளவிற்கு இந்த இளைய சமுதாயம் அதில் மூழ்கி கிடக்கின்றனர். அப்படி என்னதான் அந்த வலைபின்னல் சேவையைய் தருகிறது.

சமூக வலைபின்னல் நாம் எங்கேயோ, எப்போதோ கண்மூடி திறக்கும் கணத்தில் தொலைத்த முகங்களையும், காலத்தின் கட்டாயத்தால் பிரிந்த முகத்தினையும், உலகத்தின் உறவை ஒருசேர ஒற்றை முகமாய் சிரித்தபடி நம்முன் கொண்டு வருகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

இவைகளில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளையும், ஆங்காங்கே நிகழும் நிகழ்வுகளையும் பதிவு செய்வதன் மூலம் அனைவருக்கும் மிக விரைவான கருத்து பரிமாற்றமும், அறிவியல் சிந்தனை வளரவும் வழிவகுக்கிறது.

லிபியா நாட்டின் புரட்சிக்கு இந்த சமூக வலைபின்னலின் 14 அங்கத்தினர் அனுப்பிய வேண்டுகோள் தான் காரணம். அந்த புரட்சிதான் அந்த நாட்டின் மக்களை இராணுவ ஆட்சியிலிருந்து விடுவித்தது. அது மட்டுமின்றி 2ஜி ஸ்பெக்ட்ரம் (2 ஆம் அலைவரிசை) ஊழல் வெளிப்படவும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட ஒரு 10 விழுக்காடு காரணமாக விளங்கியது என்றால் அது மிகை ஆகாது.

அண்ணா ஹசரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு திரண்டமைக்கு இந்த சமூக வலைபின்னலின் மிகவும் பங்கு வகித்தது.

ஒருபுறம் இதன் பயனை அடிக்கொண்டே போவதை போல இதனால் விளையும் சமூக சீர்க்கேடுகளையும் அடிக்கொண்டே போகலாம். தற்போதய ஆய்வரிக்கையின்படி பள்ளி மாணவர்களும், இளைய சமூகத்தினார்களும் சராசரியாக நாளோன்றுக்கு 2 முதல் 5 மணி நேரம் வரை சமூக வலைபின்ன செலவிடுகிறார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி கேள்விக்குறியாகிறது.

இளைய சமுதாயத்தினர் சாட் (chat) எனப்படும் தொகுப்பு உரையாடலில் நீண்ட நேரம் செல்விடுவதால் மன ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேருகின்றது. அது மட்டுமில்லாமல் சில நேரங்களில் அவர்கள் எல்லை மீறவும் தயங்குவதில்லை.

இது போன்ற சமூக வலைபின்னல் தளங்களில் பதிவு செய்யப்படும் விவரங்கள் மற்றும் புகைப்படம் (Personal Data and Photo), ஹாக்கர்ஸ் (Hackers) என்று அழைக்கபடும் கணினி தகவல் திருடன் இது போன்ற தகவல்களை திருடி தேச விரோத மற்றும் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

ஆகையால் அறிவியல் வளர்ச்சியும், தொழில் நுட்ப வளர்ச்சியும் இயல்பாண நிகழ்வுகளே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திணை கருத்தில் கொண்டு பிள்ளைகளின் செயல்பாட்டில் கவனம் கொள்ளவும்.

நன்மையும், தீமையும் பிறர் தர வாரா!!

3 comments:

சமூக வலைபின்னல்களை பயன்படுத்த வயதுவரம்பு நிர்ணையிக்க வேண்டும்.

தங்கள் வருகைக்கு நன்றி

உண்மையான தகவல்...

பயன்படுத்தும் நம்கையில்தான் உள்ளது..
அவற்றின் தரம்

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content