ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமை செயலாளருக்கு வந்துள்ள ஆணையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த ஆணை உள்துறை செயலாளர் மூலம் சிறைத்துறைக்கு அனுப்பப்படும், சிறை அதிகாரிக்கு ஆணை கிடைத்த 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். இதனால் வேலூர் சிறை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் பலியானார். வழக்கின் விசாரணைக்குப் பிறகு 1998 -ம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் 26 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர். மற்றவர்களின் தண்டனை குறைக்கப்பட்டது.
அதன்பின் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினி தனக்கு மகள் இருப்பதால் கருணை மனு கொடுத்தார், மனு ஏற்கப்பட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி இருந்தனர். அந்த கருணை மனுக்கள் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன. சமீபத்தில் அந்த கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்து விட்டார்.
வேலூர் சிறை ஜெயில் சூப்பிரண்டு அறிவுடை நம்பிக்கு தூக்கு தண்டணையை நிறைவேற்ற ஆணை போய் சேர்ந்துவிடும் என கூறப்படுகிறது. ஆணை வந்த நாளில் இருந்து 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று சிறைதுறை ஏடி.ஜி.பி. டோக்ரா கூறியுள்ளார். அதன்படி இன்று முதல் 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஜெயிலில் ஏற்பாடுகள் நடக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் பலியானார். வழக்கின் விசாரணைக்குப் பிறகு 1998 -ம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் 26 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர். மற்றவர்களின் தண்டனை குறைக்கப்பட்டது.
அதன்பின் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினி தனக்கு மகள் இருப்பதால் கருணை மனு கொடுத்தார், மனு ஏற்கப்பட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி இருந்தனர். அந்த கருணை மனுக்கள் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன. சமீபத்தில் அந்த கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்து விட்டார்.
வேலூர் சிறை ஜெயில் சூப்பிரண்டு அறிவுடை நம்பிக்கு தூக்கு தண்டணையை நிறைவேற்ற ஆணை போய் சேர்ந்துவிடும் என கூறப்படுகிறது. ஆணை வந்த நாளில் இருந்து 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று சிறைதுறை ஏடி.ஜி.பி. டோக்ரா கூறியுள்ளார். அதன்படி இன்று முதல் 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஜெயிலில் ஏற்பாடுகள் நடக்கிறது.
0 comments:
Post a Comment