இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கம்! - மகிந்த ராஜபக்ஷே

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த அவசரகாலச் சட்டத்தை இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என ராஜபக்ஷே நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். முதன்முதலில் 1983 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டம் அமல் செய்யப்பட்டது, போர் முடிந்து இரண்டு ஆண்டுகளான நிலையில் இனிமேல் இச்சட்டம் அவசியமில்லை என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார், இச்சட்டத்தின் சில கடுமையான பிரிவுகள் ஓராண்டுக்கு முன்னர் தளர்த்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கே, இந்த அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்தார்.

இலங்கையில் புலியினரின் செயற்பாடுகள் ஒழிக்கப்பட்டதினால் அவசரகால சட்டத்தை நீக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு வலியுறுத்தி வந்தன. மனித உரிமை அமைப்பும் மற்றும் சர்வேதச மன்னிப்புச் சபையும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு இலங்கையை வலியுறுத்தி வந்தன.

இதனை ஒரு ஆரம்பமாகக் எடுத்துக் கொண்டு, இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்று ரணில் விக்கிரம சிங்கே வலியுறுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content