ஆய்வில் கடைசியாக வந்த சென்னை

இந்தியாவில் 6 நகரங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சென்னைக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் புனே, ராஜ்கோட், புவனேஸ்வரம், இந்தூர், சூரத் மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் பாதசாரிகளுக்கான நடைபாதை வசதிகள் எங்கு நன்றாக உள்ளன என்று சிஏஐ - ஆசியா எனும் அமைப்பு நடத்திய ஆய்வில் சென்னை கடைசியாக வந்திருக்கிறது.

பாதசாரிகளின் நேரடிக் கருத்துக்கள், அரசு போக்குவரத்து மற்றும் நகர்வுக் கொள்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 54 மதிப்பெண்கள் பெற்று, புனே நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 40 மதிப்பெண்களை மட்டும் பெற்று சென்னை நகரம் கடைசி இடத்தை பிடித்தது. மற்ற நகரங்களை விட பாதசாரிகளுக்கு இங்குதான் வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மொத்தமாக 6 நகரங்களிலுமே  பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பாதசாரிகளுக்கான வசதிகள் மோசமான நிலைதான் இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்திய நகரங்களை மேம்படுத்த வேண்டியது அவசியம், நகரமைப்புத் திட்டங்களில் போதிய கவனம் வேண்டும் என்று சிஏஐ – ஆசியா இந்திய அமைப்பின் பிரதிநிதி பார்தா பாஸு தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content