தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

அரசு கேபிள் டிவி செப்‍-2ம் தேதி தொடக்கம் -- ஜெயலலிதா

"கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்" என்ற‌ முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், அரசு கேபிள் டிவி ஒளிபர‌ப்பு சேவை நாளை மறுநாள் (செப்டம்பர் 2)முதல் தொடங்குகிறது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ரூ 70க்கு 90 செனல்களை காணலாம் என்று சட்டசபையில் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். அப்போது அவர் பேசுகையில், கேபிள் டிவி இணைப்பின் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை உள்ளதாலும், இதனை சீர் படுத்துவதற்காகவும்,‌ மக்களிடம் அதிக கட்டணம் வசுலிப்பதை தவிர்க்கவும், கடந்த தி.மு.க அரசால் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனம் 2008 ஜூலை மாதம் தனது முதல் ஒளிபரப்பை தொடங்கியது, இந்நிறுவனம் முதலில் 50 ஆயிரம் இணைப்புகளை...

விநாயகர் சதுர்த்தி

இந்துக்களின் மூல முதற்பொருளாக விளங்குபவர் விநாயகப் பெருமான். அவரை துதித்தே அனத்தையும் ஆரம்பிக்கின்றோம்; செய்து முடிக்கின்றோம். குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானவர் விநாயகர். ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று நம் கையாலேயே பிடித்து வைத்து நாம் பூஜை செய்வதால் நமக்குப் பிடித்தமான தெய்வமாக இருக்கிறார். நம் வினைகளைத் தீர்த்து வைப்பதால் விநாயகர் என்று போற்றுகிறோம். சிவ கணங்களுக்குத் தலைவராதலால் கணபதி என்றும் கணேசர் என்றும் வணங்குகிறோம். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினமான விநாயகர் பிறந்த தினத்தை, ‘விநாயகர் சதுர்த்தி’ என்று விமரிசையாகக் கொண்டாடுவது இந்துக்களின் பழமை வாய்ந்த பாரம்பரியம். அவரவர் வீடுகளிலும் ஆங்காங்கேயுள்ள ஆலயங்களிலும்...

உபயோகமற்று இருக்கும் அரசு சேவை

ஏற்கனவே நாம் கூறிய ஒன்று தான், அரசு பேருந்தின் நிலையை "வசதிகளை தொலைத்த அரசு விரைவு பேருந்து!!!" எனும் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தோம். அதை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடரவும். நாம் அந்த பதிவில் குறிபிட்டிருந்ததை போல அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் வந்ததை அடுத்து ஆவலுடன் அதை திறந்தோம். ஆனால் அது பதில் இல்லை மின்னஞ்சல் போய் சேராமல் அதற்கு வந்த அறிவிப்பு. கொஞ்சம் இதன் மீது வைத்திருந்த நம்பிக்கையும் போய்விட்டது. எப்படியெல்லாம் நமது அரசின் சேவைகள் உபயோகமற்று இருக்கிறது. இந்த செய்தியை யாரேனும் அரசின் பார்வைக்கு கொண்டு சேர்த்தால் மக்களுக்கு போக்குவரத்து சீராக அமைய வாய்புள்ளது. அரசு அலுவலகர்கள் அனைவரும் தப்பாக இருப்பதில்லை, ஒரு சிலரின் தவறே இதனைப்...

10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு -- ‍‍விரைவில் வெளியீடு !!

மத்திய அமைச்சர் நமோ நாராயணன் மீனா, இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் நோட்டு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக 10 ரூபாய் நோட்டு 100 கோடி அளவிற்கு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் சிறப்பு காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியாகின்றன. ஆனால் காகித‌த்தாள் ஆன நோட்டுகள் அதிக நாள் புழக்கத்தில் இருப்பதில்லை. சீக்கிரம் அழியும் தன்மையுடயவன. இதற்காக தற்போதைய காகிதத்துக்கு பதிலாக பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது மத்திய‌ அரசு. இதனால் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவது தடுக்கப்படும் என்றும், 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடுவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு...

இளைஞர்களின் புதுப்பாணியில் அன்னா ஹசாரே

74 வயதுள்ள அன்னா ஹசாரே இப்போது இளைஞர்களின் முன்மாதிரியாக உருவாகி வருகிறார். அதோடு இல்லாமல் இளைஞர்கள் மாற்றிக் கொண்டே இருக்கும் புதுப்பாணியில் அன்னா ஹசாரே வந்துவிட்டார். அவருடைய படங்கள் பொரித்த சட்டைகள், தொப்பிகள் என பிரபலமாகி கொண்டே வருகிறது. போராட்டக் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட தொப்பிகள் மிக பிரபலமாகிவிட்டது. மூவர்ணங்களில் பட்டை தலையிலும், கைகளிலும் கட்டிக் கொள்ள வந்துவிட்டது. இளைஞர்கள் நாட்டுப்பற்றினை வெளிப்படுத்தவும், அவரது ஆதரவினை வெளிப்படுத்தவும் இவை எல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுப்பாணி என்பதற்காக வாங்கி அணிவதோடு நின்றுவிடாமல், நாட்டுப்பற்றை முறையாக வெளிப்படுத்தினால் சரி....

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத முடிவு

ஊழலைத் தடுப்பதற்கான முயற்சியாக, ஹசாரேவின் வைத்த 3 முக்கிய கோரிக்கைகளையும் நாடாளுமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது. 12 நாட்களாக அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்  மேற்கொண்டிருந்தார். அதன் முடிவாக நேற்று  இரவு 8 மணியளவில் 3 முக்கிய நிபந்தனைகளையும் அரசு ஏற்கும் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். அவரது ஆதரவாளர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் இது ஒரு பெரிய வெற்றியே. நாடாளுமன்றத்தின் இந்த முடிவை அடுத்து, அன்னா ஹஸாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் பிரணாப் முகர்ஜி. மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், நாடாளுமன்ற தீர்மானத்தையும், அண்ணாவுக்கு பிரதமர் எழுதிய கடிதத்தையும் நேரடியாக வழங்கினார்....

ரஜினியின் உடல்நலத்தை கெடுத்தது என்ன?

ரஜினியின் உடல்நலத்தை கெடுத்தது அவரிடமிருந்த புகைப்பழக்கமும் ஒரு காரணம், இதனை மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். ர‌ஜினிக்கு இரைப்பை மற்றும் குடல் அழற்சி, நுரையீரல் பாதிப்பு, நிமோனியாவாலும் பாதிப்பு இருந்தது,  இப்போது அவர் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு பெற்று நலமாகி வருகிறார், இது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. இதன் மூலம் சொல்ல வந்தது, நுரையீரல் பாதிப்புக்கு காரணம் புகைப்பழக்கமே. அதற்காக ரஜினி ரசிகர்களை ஏமாற்றவில்லை முழுவதுமாக படித்துவிட்டுப் பாருங்கள். சரி விஷயத்திற்கு வருவோம். புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஒரு குறிப்பு. புகைப்பழக்கம் அதன் விளைவுகள் பற்றி எவ்வளவோ விழிப்புணர்வுகள் கொடுத்தாகிவிட்டது இருந்தும் அதன் மீது நடத்தப்படும்...

Pages (17)1234567 Next

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

354625

Feeds

rank

Indiblogger Score

tamiltidings.blogspot.com
29/100

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content