உத்திர பிரதேச துணை வரவு செலவுத் திட்டத்தில் (supplementary budget) ரூ.50 கோடியை முதலமைச்சர் மாயாவதிக்கு ஒதுக்கி உள்ளது. அறிக்கையின்படி ரூ.26 கோடி தனிப்பட்ட பாதுகாப்பிற்க்கும், ரூ.23 கோடி வீட்டின் பராமரிப்பிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் குண்டு துளையா அம்பாசிடர்கள், மற்றும் பிற வகை வண்டிகளும் அடங்கும்.
அண்மையில், 13ஆம் எண் ராசியின் காரணமாக தனது சொந்த வீட்டிற்கு குடியேறியுள்ளார், மூன்று வருடங்களாக அவரது வீடு கட்டப்பட்டு வருகிறது. 18 அடி உயரம் மணற்பாறை மதில், செம்பு கதவுகள், 18 அடியில் அவரது உருவச் சிலை அதை மேல் மார்பில் மேற்கட்டு, முழுவதும் குளிரூட்டப்பட்ட அறைகள், நிலக்கீழ் வாகனநிறுத்துதல், எதிர்மறை சவ்வூடுபரவல் இயந்திரகம் (Reverse Osmosis Plant), பாதுகாப்பிற்கு ஆட்கள் போன்ற வசதிகள் அங்கு உள்ளன. 2002 ஆம் ஆண்டு முதல் அவரது வீட்டிற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.51 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி மக்கள் பணத்தை தனது தேவைக்கும், அளவிற்கு அதிகமான ஆடம்பர செலவிற்கும் பயன்படுத்தும் முதலமைச்சர்கள்
எப்போது திருந்துவார்கள்? இந்த வரவு செலவுத் திட்டம் மூலமாக ஒதுக்கப்பட்ட பணத்தில், குறைந்தது 100 அல்லது 50 வீடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு கொடுத்திருக்கலாமே. நம் நாட்டில் ஏழைகளுக்கா பஞ்சம்?
அண்மையில், 13ஆம் எண் ராசியின் காரணமாக தனது சொந்த வீட்டிற்கு குடியேறியுள்ளார், மூன்று வருடங்களாக அவரது வீடு கட்டப்பட்டு வருகிறது. 18 அடி உயரம் மணற்பாறை மதில், செம்பு கதவுகள், 18 அடியில் அவரது உருவச் சிலை அதை மேல் மார்பில் மேற்கட்டு, முழுவதும் குளிரூட்டப்பட்ட அறைகள், நிலக்கீழ் வாகனநிறுத்துதல், எதிர்மறை சவ்வூடுபரவல் இயந்திரகம் (Reverse Osmosis Plant), பாதுகாப்பிற்கு ஆட்கள் போன்ற வசதிகள் அங்கு உள்ளன. 2002 ஆம் ஆண்டு முதல் அவரது வீட்டிற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.51 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி மக்கள் பணத்தை தனது தேவைக்கும், அளவிற்கு அதிகமான ஆடம்பர செலவிற்கும் பயன்படுத்தும் முதலமைச்சர்கள்
எப்போது திருந்துவார்கள்? இந்த வரவு செலவுத் திட்டம் மூலமாக ஒதுக்கப்பட்ட பணத்தில், குறைந்தது 100 அல்லது 50 வீடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு கொடுத்திருக்கலாமே. நம் நாட்டில் ஏழைகளுக்கா பஞ்சம்?
1 comments:
ஹாய்... மதுரையில் இருந்தால் நட்பு பாராட்டி தொடர்பு கொள்ளலாமே..
Post a Comment