தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 2

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 1 முதல் பாகம்


முதல் பாகத்தில் முடியை பற்றி அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களை பார்த்தோம், இப்போது முடி உதிர்வின் காரணங்களை பார்ப்போம்.

ஒரு கேசத்தின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அது உதிர்ந்து விடும், அடுத்து பிற வேர்களிலிருந்து புதிய கேசம் வளரும். இவ்வாறு பழைய கேசம் உதிர்வதும் வளர்வதும் அன்றாடம் நடக்கும். உதிரும் அளவும் வளரும் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை. மாறாக உதிர்வது அதிகாமாக இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இயல்பாகவே 70 முதல் 100 கேசங்கள் வரை உதிர்ந்து விடும். பெண்கள் தலை வாரும் போது 10-20 கேசங்கள் வருவது இயல்பான ஒன்று. கொத்துக் கொத்தாக உதிர்வது இயல்பை மீறிய ஒன்று, அதன் காரணங்களை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும்.



காரணங்கள்


கேசம் அதிகமாக உதிர சில முக்கிய காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன,

  1. சரியான பராமரிப்பின்மை
  2. மருந்துகள்
  3. போதைப் பொருட்கள்
  4. இயக்கநீர் மாற்றங்கள்
  5. ஊட்டச்சத்து குறைபாடுகள்
  6. உடலை தாக்கும் நோய்கள்
  7. தலையின் தோலை தாக்கும் நோய்கள்
  8. மரபு வழிக் காரணம்
  9. மன அழுத்தம்
  10. வயது
  11. கதிர்வீச்சுகள்
  12. வேதியியல் பொருட்கள்


ஒருவருக்கு அதிகமாக முடி உதிர்வது மேற்கண்ட ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணமாக கூட இருக்கலாம், சரியான காரணத்தை தெரிந்து கொள்ளுதல் சரி செய்ய உதவும்.

1 சரியான பராமரிப்பின்மை

மிக முக்கியமான காரணம் இதுவே ஆகும்.
தலையில் எண்ணெய் பிசுக்குடன், தூசி ஆகியவற்றை சுத்தம் செய்யாதிருத்தல்.
குளித்தபின் ஈரத்தலையை வாருதல்.
தலையை சுத்தம் செய்ய வீரியம் மிகுந்த தரக் குறைவான ஷாம்பூகளை உபயோகித்தல்.
ப்ளீச்சிங்க்,  பெர்மிங்க், கர்லிங் ஆகியவற்றை அடிக்கடி செய்தல்.
அடிக்கடி கேசச் சாயம் பூசுதல், தரமில்லாத சாயம் உபயோகித்தல்.
தரமற்ற சீப்புகளை பயன்படுத்துதல், அவற்றை சுத்தமில்லமல் உபயோகித்தல்.
ஹேர் டிரையரை சரியான முறையில் உபயோகிக்காமல் இருப்பது.
கேசத்தை இருக்கமாக கட்டுதல்.

2. மருந்துகள்

வீரியம் மிகுந்த மாத்திரை மருந்துஅள் தொடர்ந்து உண்பது.
புற்று நோயை குணப்படுத்தும் மருந்துகள்.
இரத்த உறைவை தடுக்கும் மருந்துகள்.
ஸ்டெராய்ட் வகை மருந்துகள்.
சில நோய்க் கொல்லி மருந்துகள்.

 3. போதைப் பொருட்கள்


புகையிலை அதிகாமாக உபயோகப்படுத்துதல், புகையிலையில் உள்ள நிகோட்டின் முடியின் வேரை சுற்றியுள்ள இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்துவிடும், இதனால் இரத்த ஓட்டம் குறையும். தேவையான ஊட்டச்சத்துக்கள் முடிக்கு கிடைகாமல் போய்விடும்.

4. இயக்க நீர் மாற்றங்கள்

உடலில் ஏற்படும் பலவகை மாற்றங்கள் முடி வள்ர்ச்சியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும், இரண்டிற்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கே இந்த மாற்றங்கள் அதிகமாக இருக்கிறது.

பருவம் அடையும் வயதில்
மாதவிடாய் காலத்தில்
கருவுறும் போது
பிரசவத்திற்கு பின்
மாதவிடாய் நின்றபின்

ஒவ்வொரு நிலையிலும் பலவித இயக்கநீர் மாற்றங்கள் தொடர்ந்து பெண்களுக்கு ஏற்படுவதால், கேச வளர்ச்சி பாதிப்பு , உதிர்தல் ஏற்படுகிறது. பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற இயக்க நீர் கேச வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 15 - 30 வயதில் இந்த இயக்க நீர் அதிகமாக இருக்கும், அப்பருவத்தில் கேசம் அதிகமாக வளரும். மாதவிடாய் நின்ற பின்னர் இந்த ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் கேச உதிர்வு அதிகமாக இருக்கும்.

5. ஊட்டச்சத்துக் குறைபாடுகள்


கேசம் நன்கு வளரவும், வேர்கள் உறுதியாக இருக்கவும் உடலில் தேவையான அளவில் கீழ்காணும் சத்துகள் இருப்பது அவசியம்
புரதம்
பி. காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள்
இரும்புச் சத்து
தாமிரம்
துத்தநாகம்
அயோடின்
வைட்டமின் சி

இதில் ஏதேனும் ஒன்று குறைவாக இருந்தாலும் கேசம் அதிகமாக உதிரும்.

6.  உடலை தாக்கும் நோய்கள்


டைபாய்டு, மஞ்சள் காமாலை, அம்மை, புற்றுநோய், காசநோய் போன்ற நாள்பட்ட நோய்களால் உடல் பாதிப்பதோடு மட்டுமில்லாமல் கேசம் அதிகமாக உதிரும்.

நோயின் கடுமையால் சரியான் உணவு உண்ணமுடியாத நிலையில் முடி வலுவிழந்து விடுகின்றன.
தொடர்ந்து மருந்துகள் சாப்பிடுவதாலும் கேசம் உதிரும்.
அதிக நாட்கள் காய்ச்சலினாலும் உடல் சூட்டினால் கேசம் அதிகமாக உதிரும்.

தொடரும்...


அடுத்த பாகத்தில் மற்ற காரணங்களை பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content