ரூ. 1,200.க்கு உலகின் விலை மலிவான கையடக்க கணினி இந்தியாவில்!!

உலகின் விலை மலிவான கையடக்க கணினி (tablet PC), இந்தியாவில் தற்போது தகவல் தொழில்நுட்பம் மூலம் கல்வியை விரிவாக்க, மத்திய அரசு மாணவர்களுக்கு ரூ. 1,200.க்கு அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் வழங்கவிருக்கிறது.
இந்த கணினிக்கு ஆகாஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனை அறிமுகப் படுத்தி பேசிய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், இதற்கான விலை வரி மற்றும் போக்குவரத்து செலவையும் சேர்த்து மொத்தம் ரூ. 2276 ஆகும். ஆனால் மத்திய அரசு இதனை மாணிய விலையில் மாணவர்களுக்கு ரூ. 1200க்கு வழங்கவிருக்கிறது.

இந்த கையடக்க கணினி சிம் கார்டு வசதியுடன் இயங்கவல்லது. இதன் பேட்டரி சுமார் 3 1/2 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் தன்மை கொண்டது.

டேட்டவைன்டு என்கிற நிறுவனம் இதனை தயாரித்து வழங்கயுள்ளது. முதலில் 1 லட்சம் கணினி ஆர்டர் தரப்பட்டுள்ளது என்றும் பின்னர் மாணவர்களின் வரவேர்ப்பை பொருத்து 10 லட்சம் வரை ஆர்டர் தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதில் வேடிக்கை என்னவெனில் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசமாகவே வழங்கப்படுகிறது.

2 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content