எஸ்.எம்.எஸ் தொல்லை தரும் பொது நிறுவனங்கள்!!

ஒரு காலத்தில் மக்கள் தகவல் பரிமாற்றத்திற்காக கடிதம் மற்றும் தந்தி என்றழைக்கப்பட்ட விரைவு குறுந்தகவல் போன்றவற்றை பயன்படுத்தினர். பிற்காலத்தில் தொலைபேசி மற்றும் செல்போன்களின் வரவால் கடிதம், தந்தி மதிப்பிழந்து போனது.

தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட தொலைபேசி, தற்போது விளம்பரச் சேவை என்கிற பெயரில் தொல்லை தர ஆரம்பித்துள்ளன இந்த செல்போன் நிறுவனம் மற்றும் பொது நிறுவனங்கள்.

பொது நிறுவனங்கள் விளம்பரச் சேவைக்காக ஒரு குருந்தகவல் ஒன்றை ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து அனைத்து செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்புகிறது. இது போன்ற பலதரப்பட்ட பொது  நிறுவனங்களின் குருந்தகவல்களால், வேலையில் அல்லது கல்லூரியில் இருக்கும் நமக்கு, மிகவும் தொல்லையாக அமைகின்றது.

இதை தவிர்க்கத்தான் இந்தியா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையும் சமிபத்தில் ஒரு கட்டுப்பாட்டை செல்போன் நிறுவனங்களுக்கு விதித்தது. அதன்படி ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் அதன் பயன்பாட்டாளர்களுக்கும் நாளொன்றுக்கு 100 குருந்தகவல்கள் அணுமதிக்க வேண்டும்.

இதையும் மீறி சில நிறுவனங்கள் இணையத்திலிருந்து குருந்தகவல்களை அணுப்ப ஆரம்பித்துவிட்டனர். இதுபற்றி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், இதனை கட்டுபடுத்த வேண்டியது செல்போன் நிறுவனங்களே.

இணையத்திலிருந்து அனுப்பப்படும் குறுந்தக‌வல்களை இடைமறித்து பயன்பாட்டாளரின் நலனை காப்பது அந்நிறுவனங்களின் கடமை என்றார் அவர். செல்போன் நிறுவனங்கள் கண்கானிக்குமா?

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content