நண்பர்கள் தினம்

நண்பர்கள் தினச் சிறப்பு கட்டுரை

"உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன்."

"நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்."

"ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்க்கையை ஐம்பத்து ஆண்டுகள் கழித்து இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் பார்த்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர்."

"உலகில் பெற்றோர், காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும் அனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்கமுடியாது."

"பனைமரம்: தானாக முளைத்து ,தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பையும்,ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்குதருகிறது. நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன்.
தென்னைமரம்: தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது.
அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.
வாழைமரம்: தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.
இந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும்
. - கண்ணதாசன்"




இப்படி நண்பர்களை பற்றி கூறியவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.

நட்பு என்பது ஒரு மந்திர உறவு, முழுமையான மகிழ்ச்சி மற்றும் கேளிக்கைகள் கொண்டது. ஜாய்ஸ் ஹால் என்பவர் 1919 ஆம் ஆண்டு இதனாய் நடைமுறைபடுத்தினார். அன்று முதல் இது கொண்டாடடப்ட்டு வருகிறது. வயதானாலும் நட்புக்கு என்றும் வயது இல்லை. அன்று உயிருக்கு உயிராக நண்பர்களாக பழகி வருபவர்கள் கூட தங்கள் நட்பை பலப்படுத்திக்கொள்ள, தங்கள் அன்பை வெளிப்படுத்த நண்பர்கள் கையில் நட்பு கயிற்றை கட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள். குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஆண்-பெண், ஏழை-பணக்காரர் போன்ற வேறுபாடுகளை கடந்தது நட்பு.கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் கோபம், கொஞ்சம் பொய், கொஞ்சம் சண்டை ஆனால் நிறைய சந்தோஷம் நிறைய நிறைய அன்பு, பகிர்வு, அக்கறை இதுவே நட்பு.

நண்பர்கள் இல்லாதவர் என யாருமில்லை.சந்திக்க முடியாவிட்டாலும், வாழ்த்து அட்டை, இ-மெயில், ஏன் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதன் மூலம் கூட அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியும். புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வது வரவேற்கத்தக்கது. பழைய நண்பர்களை நினைவுபடுத்தும் தினமாகவும் நண்பர்கள் தினம் இருக்கிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை, நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாயன்புக்குப் பிறகு உலகில் உள்ள எல்லா உறவுகளை விடவும் நட்பு தான் உயர்ந்ததாக மதிக்கப்பட்டு வருகிறது. உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது.





நண்பர்களிடையே வரக்கூடாத விஷயம் "முறிவு'. தவிர்க்க முடியாத காரணங்களினால் முறிந்து விட்ட நட்புக்கு வைத்தியம் பார்க்கும் நாளாகவும் இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளலாம். நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதால் எந்த இழிவும் இல்லை என்பதை உணர வேண்டும்.

எல்லோருக்கும் வலையுலக நட்புக்களுக்கும் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்து உரித்தாகட்டும்.

(இந்த கட்டுரை எனது நண்பர்களுக்கும் நண்பர்கள் தினம் கொண்டாடும் அனைவருக்கும் சமர்ப்பணம். எல்லோரும் தங்களது நண்பர்களுக்கு இத்தனை பகிர்ந்து கொள்ளவும்.)

3 comments:

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் நண்பரே...

மிக்க நன்றி Reverie நண்பரே

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content