சீனாவின் கிழக்கு மாகணமான ஸேஜியாங் நகரத்தில், நேற்று இரவு இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. முதலில் சென்று கொண்டிருந்த ரயில் மின்னல் தாக்குதல் காரணமாக மின்சார இணைப்பை இழந்து நின்று கொண்டிருக்கையில் பின் தொடர்ந்து வந்த அதிவேக புல்லட் ரயில் நின்ற ரயிலின் மீது மோதியது. இந்த விபத்து 20 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் நடந்ததால் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு கீழே விழுந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்தோர் எண்ணிக்கை 200 ஆகவும், 35க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருக்க கூடும் என அந்நாட்டின் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த விபத்து அந்த நாட்டின் மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்து நிகழ்ந்த ரயில்கள் டி பிரிவினை சேர்ந்தவை ஆகும். அதாவது இந்த வகையான ரயில் மணிக்கு 150 கி.மீ வேகம் செல்லக் கூடியது. ஆனால் தற்போது சீனாவிடம் .மணிக்கு 250 கி.மீ செல்லக் கூடிய ரயில்கள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.
சில மாதத்திற்கு முன்புதான் அதி வேக புல்லட் ரயிலின் எண்ணிக்கையை அதிகமாக்குவாதக சீன அறிவித்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment