பேரழிவை ஏற்படுத்த இருக்கும் மஞ்சள் காமாலை!!

 ஆசியாவின் தென்பகுதி மற்றும் தென்கிழக்கு நாடுகளில் அடுத்த 10 ஆண்டுகளில் 50 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மஞ்சள் காமாலை (அ) கல்லீரல் அழற்சி நோயினால் கொல்லப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் (ஜெனீவா, சுவிட்சர்லாந்து) தெரிவித்துள்ளது.

இவை மனிதனின் உடம்பில் உள்ள கல்லீரல் பாதிக்கப்படும் போது இந்த நோய் உருவாகிறது. நீர் மற்றும் தொற்று இந்த நோய் மூலமாக பருவுகிறது.

இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தை இந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு நாடும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாக கருத வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில், மலேரியா, டெங்கு அல்லது எயிட்ஸ் நோயினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இந்த மஞ்சள் காமாலை நோயினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று தெரியவந்துள்ளது.

மஞ்சள் காமாலை நோய்க்கு எதிரான தடுப்பு ஊசி ஏற்றும் திட்டம் முன்னேற்றம் கண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வைரஸ் தொற்று காரணமாக பரவும் இந்த மஞ்சள் காமாலை நோயினால் ஆண்டு தோறும் பெருமளவானோர் கொல்லப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content