தண்ணீர் நமக்கு எவ்வளவு தேவை, அதன் முக்கியத்துவம், அனைத்தும் தெரியும். இருந்தும் நிறைய கேள்விகள் நமக்கு தோன்றின. தண்ணீர் எப்போது ஆபத்தானவை? நாம் தினமும் பருகும் தண்ணீர் சுத்தமாக சுகாதாரமாக உள்ளதா? இதில் நாம் எந்த அளவு அக்கறை கொண்டுள்ளோம்? குழாய் தண்ணீரை விட போத்தல்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் சுத்தமானதா? வீட்டில் தண்ணீரை எப்படி பாதுகாப்பானதாக மாற்றுவோம்? இதற்கெல்லாம் பதில் நம்மிடம் உள்ளதா???
நமக்கு கிடைக்கின்ற தண்ணீர் ஆழ்துளைக் கிணறு (Borewell), மாநகாரட்சி வழியாக வழங்கப்படுவது, அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged Drinking Water), கனிம நீர் (Mineral Water), கிணறு, குளம், மழை ஆகிய வழிகளில் இருந்தே வருகிறது.இந்த வகைகளில் வரும் தண்ணீரை மக்கள் தங்கள் வசதி மற்றும் தகு நிலைக்கு தகுந்தாற்போல் குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
இதில் நாம் பருகும் தண்ணீர் எவ்வளவு சுத்தமாக உள்ளது என நாம் அறிய வேண்டும். ஆழ்துளைக் கிணறு வழியாக வரும் தண்ணீர் கண்டிப்பாக பாதுகாப்பற்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை நேரடியாக பருகுவது எப்போது வேண்டுமானாலும் ஆபத்தாக அமையும். அடுத்து குளோரின் (பாசிகை) கலக்கப்பட்ட தண்ணீர், தண்ணீரில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்கதான் குளோரின் கலக்கப்படுகிறது. ஒரு புறம் இது நன்மைக்காக என்றாலும், இதனாலும் பக்க விழைவுகள் உள்ளன. ஸ்பானிய நாட்டைச் சார்ந்த சீஆர்இஏஎல் எனும் ஆராய்ச்சி மையம் அண்மையில் நடத்திய ஆய்வில், அளவுக்கு அதிகமாக குளோரின் கலந்த தண்ணீரை பருகுவதோ, அதில் குளிப்பதோ சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் அதிகமாகின்றன அறிவித்துள்ளது.குளோரின் கலந்த நீரை அதிகமாக பருகியவர்களிடம் புற்றுநோய்கான அறிகுறிகள் தெரிவதாக பல மருத்துவர்கள் தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். குளோரின் நுண்ணுயிர்காளை அழிக்க உதவினாலும், மிகவும் ஆபத்தான கோலிஃபோர்ம் எனும் கிருமி அதில் அழியாமல் இருப்பதாக கூட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளோரின் கலந்த நீரில் வளர்ப்பு மீன்கள் இறந்து விடுகின்றன, இது சிந்திக்க வேண்டிய ஒன்றே.
போத்தல் தண்ணீர் இரண்டு வகைகளில் நமக்கு கிடைக்கின்றது, ஒன்று அடைக்கப்பட்ட குடிநீர் மற்றொன்று கனிம நீர். இதில் அடைக்கப்பட்ட நீர் என்பது சுத்திகரிக்கபட்ட நீர். நீரை தூய்மை செய்ய பல வழிகள் உள்ளன, அதைனை பயன்படுத்தி அருந்துவதற்கு ஏற்ற நீராக மாற்றப்படுகிறது. கனிம நீர் என்பது கனிமங்கள் (Minerals) நிறைந்த நீராகும். இயற்கயாகவே கனிமங்கள் சேர்ந்திருக்கும், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கூடுதல் பலன்களை நீங்கள் இதன் மூலம் பெறலாம். செயற்கயாக கனிமங்கள் சேர்க்கப்படும் நீரும் விற்கப்படுகிறது. இந்த இரண்டு வகை நீரும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
இது போக குளம், கிணறு ஆகியவற்றில் இருக்கும் நீர் சுத்தமானதாக இருக்கும் என்பது அதனை பாராமறிப்பதை பொறுத்து இருக்கிறது, இருந்தாலும் நம்பகத்தன்மை என்பது குறைவே.
நமக்கு சுத்தமான தண்ணீர் தேவை, இப்போது இருக்கும் சற்றுப்புறத் தூய்மைக் கேடுகளில் தண்ணீர் எவ்வளவு தூய்மையாக கிடைக்கிறது என்பது சந்தேகமே. எனவே வீட்டில் நாம் சுத்திகரீக்கப்பட்ட தண்ணீரை அருந்தவும், பயன்படுத்தவும் வேண்டும். எல்லோரும் பணம் செலவு செய்து சுத்தமான நீரை வாங்க முடியாது, வசதிக்கு ஏற்றார் போல் இதனை நடைமுறைப்படுத்தலாம்.
நாம் தண்ணீரை சுத்தப்படுத்த வீட்டில் மாசுநீக்கி - Purifierகளை பயன்படுத்தலாம். இவை வசதிக்கு ஏற்றார் போன்ற விலைகளில் கிடைக்கிறது, நிறைய ரகங்களும் இருக்கிறது. தொழில்நுட்பம் பல நிறைந்த சுத்திகரிப்பு முறையும் இதில் உள்ளன. Reverse Osmosis - எதிர்மறை சவ்வூடுபரவல், Ultrafiltration - நுண் வடித்தல், Ultraviolet - புற ஊதா போன்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சுத்தமான குடிநீர் நமக்கு கிடைக்கின்றது.
இதுவும் நடைமுறைப் படுத்த முடியாதவர்கள், குறைந்தபட்சமாக நன்கு கொதிக்க வைத்த நீரை பருகலாம். கொதிக்க வைக்கும் வெப்ப அளவு நூறாக இருந்தால் மிக நன்று.
மற்றவர்களுக்கும் இதனை வலியுறுத்துவோம்.
1 comments:
அருமையான பதிவு...
பகிர்வுக்கு நன்றி நண்பரே...
Post a Comment