
நமக்கு சர்க்கரை நோய் வருவது போல், நாம் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நாய், பூனைகளுக்கு கூட சர்க்கரை நோய் வரும். இது எத்தனை பேருக்கு தெரியும்.
மனிதர்களை போலவே மிருகங்களுக்கும் சர்க்கரை நோய் கண்டறியபடுகிறது. இரத்தத்தில் குளுகோஸின் அளவை பொறுத்தே சர்க்கரை நோயின் அறிகுறிகள் சொல்லப்பப்படுகிறது. இன்சுலின் (கணையநீர்) எனப்படும் சுரப்பிதான் குளுகோஸின் அளவையும், குளுகோஸினை உறியும் உயிர் அணுகளையும் கட்டுபடுத்துகின்றது. இன்சுலின் குறையும் போதோ, உயிர் அணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காமல் போகும் போதோ சர்க்கரை நோய் அதிகமாகிறது.
பிராணிகளை பொருத்தவரை சர்க்கரை நோய் வருவது நடுத்தர வயதில்தான் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அதிகமாக இது பெண் நாய்களிடம், அதுவும் ஒரு சில வகைகளுக்கு மட்டும் வருகிறது. பூனைகளை பொருத்தவரை ஆண் பெண் இரண்டுக்கும் இது பொருந்தும்.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
அதிகமாக தண்ணீர் அருந்துவது
வழக்கத்திற்கு அதிகமாக சிறுநீர் கழித்தல்
வழக்கத்திற்கு அதிகமாக சாப்பிடுதல்
உடல் எடை குறைதல்
தோல் பாதிப்பு
இவைகளில் ஒன்று தோன்றினாலும் மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுங்கள், அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்வது நல்லது.
சிறிதளவு பாதிப்பு இருந்தால் அதனை எளிதில் குணப்படுத்தி விடலாம். கட்டுப்பாடான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி இருந்தால் போதும். இருப்பினும் குளுகோஸின் அளவை சீறாக கொண்டுவர இன்சுலின் ஊசிகளை பின்பற்ற வேண்டும். தவறாத பரிசோதனை, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி இவை அனைத்தும் உங்கள் பிராணியை ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கைக்கு உதவும்.
எந்த பிராணியாக இருந்தாலும் நம் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்கள் அவைகளுக்கு நச்சு/விஷத்தன்மையை ஏற்படுத்துகின்றன. கீழே குறிப்பிட்டுள்ள அப்பொருட்களை விலக்கி வைத்திருப்பது நல்லது.
வெங்காயம், பூண்டு, திராட்சை, போதை பொருள், பருப்பு வகைகள், இனிப்புள்ள பொருட்கள், கடல் உணவு, லில்லி செடிகள்.
0 comments:
Post a Comment