"சமச்சீர் கல்வித்திட்டம் செல்லுபடியாகும்"

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக திமுக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லுபடியாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தச் சட்டத்துக்கு தற்போதைய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தங்கள் செல்லுபடியாகாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.




கிராமப்புற பள்ளியில் சில மாணவர்கள்

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் இந்த ஆண்டு தொடர வேண்டும் எனவும், எதிர்வரும் 22 ஆம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்றைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டமானது மாணவர்களின் கல்வியறிவையும் தரத்தையும் உயர்த்துவதாக இல்லை என்றும் அதன் காரணமாக அந்தத் திட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்து அதன் செயலாக்கத்தை தற்போதைய அ இ அ தி மு க அரசு அதனை நிறுத்தி வைக்கும் வகையில் சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தது.

தமிழக அரசின் முடிவை எதிர்த்து சமச்சீர் கல்விக்கு ஆதரவானவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். சென்னை உச்சநீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்திருத்ததுக்கு தடை விதிக்க, தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது.

இந்திய உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினை குறித்து ஆராய ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், அந்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும் என தெரிவித்தது.

தமிழக அரசு தலைமைச் செயலர் தலைமையில் அமைத்த உயர்மட்டக் குழு வழங்கிய அறிக்கையை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் முந்தைய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் எனவும் அதன் அடிப்படையில் பாடத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டதிருத்தம் அவசரகோலத்தில் கொண்டுவரப்பட்டது என்றும், புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இந்தத் திட்டத்தை ரத்து செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசு சரியாக ஆராயாமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது என்றும் தமது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content