இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச அரங்கில் மொத்தம் 99 சதங்கள் (டெஸ்டில் 51, ஒருநாள் போட்டி 48 சதம்) அடித்துள்ளார்.
அவர் 100 -வது சதத்தை எப்போது அடிப்பார் என்று கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்சில் வரும் 21 -ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் இந்த சாதனையை டெண்டுல்கர் படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வெஸட் இண்டீஸ் தொடரில் விளையாடாமல் குடும்பத்துடன் லண்டனுக்கு சென்ற டெண்டுல்கர் அங்கு மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்து வருகிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் வகிக்கும் அவர், அங்கிருந்தபடியே இந்திய அணியுடன் இணைந்து கொள்கிறார்.
100 -வது சதம் பற்றி கேள்வி எழுப்பிய போது, சாதனைகள் குறித்து தான் சிந்திப்பதில்லை என்றும், இந்த கிரிக்கெட் தொடரை எப்படி உற்சாகமாக அனுபவித்து விளையாடுவது என்பது பற்றி மட்டும்தான் சிந்தித்து வருவதாகவும் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
போட்டியை நான் மிக உற்சாகமாக விளையாடுகிறேன் என்றால், அதன் பிறகு இயற்கையாகவே எனது விளையாட்டின் தரமும் உயர்ந்து விடும். அதுதான் முக்கியம் என்று அவர் கூறினார்.
21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் டெண்டுல்கரிடம் ஓய்வு குறித்து கேட்ட போது அது பற்றிய எண்ணமே தனக்கு இல்லை என்று தெரிவித்தார்.
அவர் 100 -வது சதத்தை எப்போது அடிப்பார் என்று கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்சில் வரும் 21 -ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் இந்த சாதனையை டெண்டுல்கர் படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வெஸட் இண்டீஸ் தொடரில் விளையாடாமல் குடும்பத்துடன் லண்டனுக்கு சென்ற டெண்டுல்கர் அங்கு மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்து வருகிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் வகிக்கும் அவர், அங்கிருந்தபடியே இந்திய அணியுடன் இணைந்து கொள்கிறார்.
100 -வது சதம் பற்றி கேள்வி எழுப்பிய போது, சாதனைகள் குறித்து தான் சிந்திப்பதில்லை என்றும், இந்த கிரிக்கெட் தொடரை எப்படி உற்சாகமாக அனுபவித்து விளையாடுவது என்பது பற்றி மட்டும்தான் சிந்தித்து வருவதாகவும் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
போட்டியை நான் மிக உற்சாகமாக விளையாடுகிறேன் என்றால், அதன் பிறகு இயற்கையாகவே எனது விளையாட்டின் தரமும் உயர்ந்து விடும். அதுதான் முக்கியம் என்று அவர் கூறினார்.
21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் டெண்டுல்கரிடம் ஓய்வு குறித்து கேட்ட போது அது பற்றிய எண்ணமே தனக்கு இல்லை என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment