மாணவ-மாணவிகளுக்கு மடிக் கணினி வருகிறது. ஆம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் இலவசக் கணினி வழங்கப்போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல் கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் இலவசக் கணினி வழங்கப்பட உள்ளது. இதற்காக டெண்டர் (ஒப்பந்தப் புள்ளி) அறிவிப்பை எல்காட் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
அதில் எச்.சி.எல்., விப்ரோ, எச்.வி. சோனி, லெனோவா, டெல், ஏசர், ஜெனித், சாம்சங், எல்.ஜி., இன்டெல் போன்ற 85-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. சில விதிமுறைகளின் கீழ் அனைத்து நிருவனங்களும் பங்கேற்றன.
அனைத்து நிருவனங்களும் வைப்புத் தொகையாக தலா 20 லட்சம் கட்டியிருக்க வேண்டும், மடிக் கணினியில் தமிழ், ஆங்கிலம் (மென்பொருள்) சாப்ட்வேர் இடம் பெற்றிருக்க வேண்டும். பேட்டரியுடன் (மின்கலம்) சேர்த்து கணினி எடை 2 கிலோ 700 கிராம் அளவிற்குள் இருக்கவேண்டும். பழுது ஏற்பட்டால் சர்வீஸ் செய்ய தாலுகா அளவில் சர்வீஸ் சென்டர் (பணியகம்) வைத்திருக்க வேண்டும். மடிக் கணினிக்கு 3 வருட உத்தரவாதம், பேட்டரிக்கு 1 வருட உத்தரவாதமும் தரவேண்டும், லேப்-டாப்புக்கு வழங்கும் பேட்டரி 6 எண்ணிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். கேமரா (புகைப்படக்கருவி), பவர் கேபிள் (மின் கம்பிவடம்), சார்ஜர் (மின்னேற்றி) ஆகியவையும் தரமானதாக வழங்க வேண்டும், 2 ஜி.பி. ரேம், 320 ஜி.பி. ஹார்டு டிஸ்க் இடம் பெற வேண்டும், வின்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் முறை அதில் இருக்க வேண்டும். கல்வி தொடர்பான சாப்ட்வேர்கள், டேட்டோ பேஸ் புரோகிராம் உள்பட பல வசதிகளும் அதில் இருக்கவேண்டும், கணினி மீது 'தமிழக அரசின் மடிக்கணினி திட்டம்-2011' என்று குறிப்பிட வேண்டும், என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தரமான கணினியை அரசு வழங்கும் என தெறிகிறது.
இந்த தரமனான கணினி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொழில்நுட்பத்தையும், கணினி பற்றிய விழிப்புணர்வையும் எல்லோருக்கும் ஏற்படுத்தும் என்று மகிழ்ச்சி அடைந்தாலும். இதில் ஒழிந்திருக்கும் அபாயத்தினை அரசு சிந்தித்து பார்த்திருக்குமா?
இன்றைய சூழலில் நம்மைச் சுற்றி இருக்கின்ற விஷயங்கள் அனைத்திலும் கெட்ட விஷயங்களை அதிகமாக பார்க்கிறோம். உதாரணமாக, திரைப்படங்களை எடுத்துக்கொள்வோம். அதில் காட்டப்படும் வன்முறை, ஆபாசம், காதலை பற்றிய தவறான பார்வை இவை அனைத்தும் பெரியவர்களை விட சிறியவர்களையும், பள்ளி மாணவ-மாணவிகளையுமே அதிகமாக பாதிக்கிறது.
கைபேசியின் மதிப்பு இறங்கி போனதால் தான் இன்று பள்ளி மாணவர்கள் கூட அதனை உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்கும் நோக்கில் அதை வாங்கி கொடுத்தாலும், அதன் மூலம் குறுந்தகவல், கண்டதை புகைப்படம் எடுத்தல், ஆபாச படங்கள் போன்றவை பறிமாற வசதியாகி விட்டது. இந்த வசதிகள் அனைத்தும் நல்ல வழியில் பயன்பட்டால் தப்பில்லை.
கைப்பேசியிலேயே இவ்வளவு பாதிப்பு உள்ளதென்றால், கணினியில் எவ்வளவு இருக்கும், அதுவும் நாம் அறிந்த ஒன்றே. இணையதளம் அதில் உள்ள நல்லவை கெட்டவை அதற்கு ஒரு நல்ல சான்று. கணினியை கூட நம் கண்காணிப்பில் வைத்து விடலாம், ஆனால் மடிக் கணினி அப்படி அல்ல. அதை எங்கு வைத்து என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர்கள் ஆராய்ந்து கொண்டே இருக்க முடியாது.
மடிக் கணினியும் இலவசமாக வருகிறது, அதன் மதிப்பும் இறங்கிவிடும். இதன் விழைவும் அதிகமாக இருக்கும். அரசு இதனை கருத்தில் கொண்டு கல்லூரிகளில் இருந்து மடிக் கணினியை வழங்கலாம். கல்லூரி மாணவர்கள் அனைத்து பிரிவினருக்கும் கூட இது உபயோகமானதாக இருக்கப் போவதில்லை, இருந்தும் அதை கூட பொருத்துக்கொண்டு சரி எனலாம்.
ஆனால் பக்குவமற்ற வயதுடைய பள்ளி மாணவ-மாணவியர்கள் இதனால் பாதிப்படைவது உறுதி. இதை இனி மாற்றி அமைக்கவோ, தடை செய்யவோ முடியாவிட்டாலும், பெற்றோர்கள் பள்ளி மாணாக்கர்களை தம் கவனத்திற்குள் வைத்துக் கொண்டே இருப்பது நல்லது.
இலவசம்! - இது நம்மை எவ்வளவு கவர்ந்த ஒன்று.
இன்று நம் நாட்டில் இலவசம் என்பது சாதாரன விஷயமாகி விட்டது. கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் இலவசம் ஒன்றே அதிகமாக இருந்தது. இலவசமாக பொருட்களை வழங்குவது கடந்த ஆட்சியிலிருந்தே நடந்து வருகிறது. இது இயலாதவர்களுக்கு நல்ல திட்டமாக கருதினாலும், முடிந்தவர்களுக்கு சந்தோசமாக இருந்தாலும், இவை மனிதனின் தன்மானத்தை சீண்டும் விஷயமே. இது சில தரப்பினரிடம் சோம்பேரித் தனத்தை வளர்த்து விடாதா?
எல்லோருக்கும் இல்லாதவர்களுக்கும் இலவசமாக சமமாக பொருட்கள் கிடைக்கிறது. இது சந்தோசத்திற்க்கும் பாராட்டுதலுக்கும் உரிய விஷயமே. இருந்தாலும் அதன் பயன்கள் சரியாகவும், சரியான இடத்திற்கு தகுந்தாற் போலவும் போய் சேர வேண்டும், இல்லையேல் விழைவுகள் சரியானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.
இதுபோக மிக்சி (மின்னம்மி), கிரைண்டர் (மின்னறவை), மின்விசிறி, கறவை மாடு போன்றவைகளும் இலவசமாக தருகிறது நம் அரசு. அண்மையில் கோவை நகர கிரைண்டர் தயாரிப்பாளர்களை புறக்கணித்து விட்டு வேறு எங்கோ கிரைண்டர் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் அறிந்த தயாரிப்பாளர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுமார் 700 க்கும் மேற்பட்ட கிரைண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றன. இதனால் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்விசிறி, மிக்ஸி போன்றவை தமிழகத்தில் பெருமளவு தயாரிக்கப்படாத காரணத்தினால், பிற மாநிலத்திருந்து அல்லது இறக்குமதி செய்வதில் எந்த தவறுமில்லை. ஆனால் டெண்டருக்குள் நிர்ணயிக்கப்பட்ட விலையில், பொருட்களை தர நினைத்து இப்படி தரம் குறைந்த சீன தயாரிப்புகளை இறக்குமதி செய்வது மட்டுமில்லாமல், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பிழைப்பை கெடுக்க வேண்டாமே. கிரைண்டருக்கு பெயர் பெற்ற நகரத்தை வைத்து கொண்டு தமிழக அரசு, சீன தயாரிப்புகளை நாட நினைப்பது தவறு.
இலவசத்திற்காக இவ்வளவு விஷயங்களை பொருக்க வேண்டுமா? அரசு எல்லாப் பிரச்சனைகளையும் சமாளிக்குமா?
அதில் எச்.சி.எல்., விப்ரோ, எச்.வி. சோனி, லெனோவா, டெல், ஏசர், ஜெனித், சாம்சங், எல்.ஜி., இன்டெல் போன்ற 85-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. சில விதிமுறைகளின் கீழ் அனைத்து நிருவனங்களும் பங்கேற்றன.
அனைத்து நிருவனங்களும் வைப்புத் தொகையாக தலா 20 லட்சம் கட்டியிருக்க வேண்டும், மடிக் கணினியில் தமிழ், ஆங்கிலம் (மென்பொருள்) சாப்ட்வேர் இடம் பெற்றிருக்க வேண்டும். பேட்டரியுடன் (மின்கலம்) சேர்த்து கணினி எடை 2 கிலோ 700 கிராம் அளவிற்குள் இருக்கவேண்டும். பழுது ஏற்பட்டால் சர்வீஸ் செய்ய தாலுகா அளவில் சர்வீஸ் சென்டர் (பணியகம்) வைத்திருக்க வேண்டும். மடிக் கணினிக்கு 3 வருட உத்தரவாதம், பேட்டரிக்கு 1 வருட உத்தரவாதமும் தரவேண்டும், லேப்-டாப்புக்கு வழங்கும் பேட்டரி 6 எண்ணிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். கேமரா (புகைப்படக்கருவி), பவர் கேபிள் (மின் கம்பிவடம்), சார்ஜர் (மின்னேற்றி) ஆகியவையும் தரமானதாக வழங்க வேண்டும், 2 ஜி.பி. ரேம், 320 ஜி.பி. ஹார்டு டிஸ்க் இடம் பெற வேண்டும், வின்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் முறை அதில் இருக்க வேண்டும். கல்வி தொடர்பான சாப்ட்வேர்கள், டேட்டோ பேஸ் புரோகிராம் உள்பட பல வசதிகளும் அதில் இருக்கவேண்டும், கணினி மீது 'தமிழக அரசின் மடிக்கணினி திட்டம்-2011' என்று குறிப்பிட வேண்டும், என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தரமான கணினியை அரசு வழங்கும் என தெறிகிறது.
இந்த தரமனான கணினி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொழில்நுட்பத்தையும், கணினி பற்றிய விழிப்புணர்வையும் எல்லோருக்கும் ஏற்படுத்தும் என்று மகிழ்ச்சி அடைந்தாலும். இதில் ஒழிந்திருக்கும் அபாயத்தினை அரசு சிந்தித்து பார்த்திருக்குமா?
இன்றைய சூழலில் நம்மைச் சுற்றி இருக்கின்ற விஷயங்கள் அனைத்திலும் கெட்ட விஷயங்களை அதிகமாக பார்க்கிறோம். உதாரணமாக, திரைப்படங்களை எடுத்துக்கொள்வோம். அதில் காட்டப்படும் வன்முறை, ஆபாசம், காதலை பற்றிய தவறான பார்வை இவை அனைத்தும் பெரியவர்களை விட சிறியவர்களையும், பள்ளி மாணவ-மாணவிகளையுமே அதிகமாக பாதிக்கிறது.
கைபேசியின் மதிப்பு இறங்கி போனதால் தான் இன்று பள்ளி மாணவர்கள் கூட அதனை உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்கும் நோக்கில் அதை வாங்கி கொடுத்தாலும், அதன் மூலம் குறுந்தகவல், கண்டதை புகைப்படம் எடுத்தல், ஆபாச படங்கள் போன்றவை பறிமாற வசதியாகி விட்டது. இந்த வசதிகள் அனைத்தும் நல்ல வழியில் பயன்பட்டால் தப்பில்லை.
கைப்பேசியிலேயே இவ்வளவு பாதிப்பு உள்ளதென்றால், கணினியில் எவ்வளவு இருக்கும், அதுவும் நாம் அறிந்த ஒன்றே. இணையதளம் அதில் உள்ள நல்லவை கெட்டவை அதற்கு ஒரு நல்ல சான்று. கணினியை கூட நம் கண்காணிப்பில் வைத்து விடலாம், ஆனால் மடிக் கணினி அப்படி அல்ல. அதை எங்கு வைத்து என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர்கள் ஆராய்ந்து கொண்டே இருக்க முடியாது.
மடிக் கணினியும் இலவசமாக வருகிறது, அதன் மதிப்பும் இறங்கிவிடும். இதன் விழைவும் அதிகமாக இருக்கும். அரசு இதனை கருத்தில் கொண்டு கல்லூரிகளில் இருந்து மடிக் கணினியை வழங்கலாம். கல்லூரி மாணவர்கள் அனைத்து பிரிவினருக்கும் கூட இது உபயோகமானதாக இருக்கப் போவதில்லை, இருந்தும் அதை கூட பொருத்துக்கொண்டு சரி எனலாம்.
ஆனால் பக்குவமற்ற வயதுடைய பள்ளி மாணவ-மாணவியர்கள் இதனால் பாதிப்படைவது உறுதி. இதை இனி மாற்றி அமைக்கவோ, தடை செய்யவோ முடியாவிட்டாலும், பெற்றோர்கள் பள்ளி மாணாக்கர்களை தம் கவனத்திற்குள் வைத்துக் கொண்டே இருப்பது நல்லது.
இலவசம்! - இது நம்மை எவ்வளவு கவர்ந்த ஒன்று.
இன்று நம் நாட்டில் இலவசம் என்பது சாதாரன விஷயமாகி விட்டது. கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் இலவசம் ஒன்றே அதிகமாக இருந்தது. இலவசமாக பொருட்களை வழங்குவது கடந்த ஆட்சியிலிருந்தே நடந்து வருகிறது. இது இயலாதவர்களுக்கு நல்ல திட்டமாக கருதினாலும், முடிந்தவர்களுக்கு சந்தோசமாக இருந்தாலும், இவை மனிதனின் தன்மானத்தை சீண்டும் விஷயமே. இது சில தரப்பினரிடம் சோம்பேரித் தனத்தை வளர்த்து விடாதா?
எல்லோருக்கும் இல்லாதவர்களுக்கும் இலவசமாக சமமாக பொருட்கள் கிடைக்கிறது. இது சந்தோசத்திற்க்கும் பாராட்டுதலுக்கும் உரிய விஷயமே. இருந்தாலும் அதன் பயன்கள் சரியாகவும், சரியான இடத்திற்கு தகுந்தாற் போலவும் போய் சேர வேண்டும், இல்லையேல் விழைவுகள் சரியானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.
இதுபோக மிக்சி (மின்னம்மி), கிரைண்டர் (மின்னறவை), மின்விசிறி, கறவை மாடு போன்றவைகளும் இலவசமாக தருகிறது நம் அரசு. அண்மையில் கோவை நகர கிரைண்டர் தயாரிப்பாளர்களை புறக்கணித்து விட்டு வேறு எங்கோ கிரைண்டர் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் அறிந்த தயாரிப்பாளர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுமார் 700 க்கும் மேற்பட்ட கிரைண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றன. இதனால் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்விசிறி, மிக்ஸி போன்றவை தமிழகத்தில் பெருமளவு தயாரிக்கப்படாத காரணத்தினால், பிற மாநிலத்திருந்து அல்லது இறக்குமதி செய்வதில் எந்த தவறுமில்லை. ஆனால் டெண்டருக்குள் நிர்ணயிக்கப்பட்ட விலையில், பொருட்களை தர நினைத்து இப்படி தரம் குறைந்த சீன தயாரிப்புகளை இறக்குமதி செய்வது மட்டுமில்லாமல், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பிழைப்பை கெடுக்க வேண்டாமே. கிரைண்டருக்கு பெயர் பெற்ற நகரத்தை வைத்து கொண்டு தமிழக அரசு, சீன தயாரிப்புகளை நாட நினைப்பது தவறு.
இலவசத்திற்காக இவ்வளவு விஷயங்களை பொருக்க வேண்டுமா? அரசு எல்லாப் பிரச்சனைகளையும் சமாளிக்குமா?
2 comments:
நல்லா சொன்னீங்க...முடிந்தால் என் வலைப்பக்கமும் வரவும்...
Post a Comment