தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

பாலின்பக் கல்வி (Sex Education) தேவையா? தேவையற்றதா?


இன்று நம் சமுதாயம் செக்ஸ் எனும் மயக்க உலகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது, பல செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. கணவன்/மனைவி கள்ளத்தொடர்பு, பெற்ற பிள்ளைகளுடன் தகாத உறவு, ஆசிரியர் மாணவ முறைகேடு எனக் கூறிக் கொண்டே போகலாம். 15 வருடங்களுக்கு முன்பு கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட விசயங்கள் இப்போது அடிக்கடி நடக்கும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் முறையற்ற பாலின்பக் கல்வி இல்லாததே. இப்போது உள்ள பெற்றோரிடம் பாலின்பக் கல்வி வேண்டும் என்றால் கண்டிப்பாக அதை எதிர்ப்போரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். ஏன்? என்றால் சிறு வயதிலேயே செக்ஸ் பற்றி சொல்லிக் கொடுத்தால் கெட்டுப்போய் விடுவார்கள் என்பதே அவர்கள் கருத்தாக இருக்கும்.


SEX என்ற ஆங்கிலச் சொல்லை 'ஒரே அர்த்தத்துடன்' பார்க்கின்றனர் நிறைய பேர், அதுதான் SEX EDUCATION என்ற விசயத்தையும் தடுக்கிறது. SEX என்ற ஆங்கிலச் சொல்பல அர்த்தங்களை கொண்டுள்ளது. பாவம் உலகை ஆளும் ஆங்கிலத்திற்கு வார்த்தை பற்றாக்குறை போலும். எல்லா இடங்களிலும் அந்த ஒரு வார்த்தையை மட்டும் வைத்தே பிழைப்பை நடத்துகிறது ஆங்கிலம். தமிழ் மொழியில் தான் 2 லச்சத்திற்கும் அதிகமான வார்த்தைகள் இருக்கிறது, என்ன செய்ய நாம் அதை தெரிந்து வைத்துக்கொள்வதில்லை. சரி விசயத்திற்கு வருவோம், SEX என்ற சொல்லுக்கு 'பால் , பால் வேறுபாடு, ஆண் பெண் பாகுபாடு , இனம்,  உடலுறவு , பாலியல் உறவு' என தமிழில் பல அர்த்தங்கள் உள்ளது. அதில் உடலுறவு , பாலியல் உறவு என்ற அர்த்தத்தை மட்டுமே நாம் மனதில் வைத்திருந்தால் அது நம் அறியாமை. அதனால் தான் தலைப்பில் 'பாலின்பக் கல்வி' என்று குறிப்பிட்டிருப்பேன்.

நமது கலாச்சாரம் போல் எந்த நாட்டிலும் இல்லை, ஆனால் அதை சரியாக சொல்லி புரியவைக்காமல், பல கட்டுப்பாடுகளை மட்டும் விதித்து இப்போது முறைகேடுகள் அதிகரித்துவிட்டது. எந்த ஒரு விசயத்தையும் அளவுக்கு அதிகமாக அடக்கினாலோ, இல்லை அடக்கு முறை மேற்கொண்டாலோ அது பெரிதாக ஒருநாள் வெடிக்கும். நம் நாட்டில் SEX என்பதில் அந்த முறையை தான் கையாளுகின்றனர். அதை வெறும் அந்தரங்கமான ஒன்றாக மட்டுமே சித்தரித்துவிட்டோம். அதை சரியான முறையில், சரியான வயதில் இருபாலருக்கும் கல்வியாக புரிய வைக்கவேண்டும். உடனே சில பேருக்குத் தோன்றும் 'சின்ன வயசிலேயே செக்ஸ் பத்தி சொல்லிகொடுப்பதா?', முட்டாள்தனமாக கூட தெரியும். அதை வெறும் உடலுறவு சார்ந்ததாக மட்டும் சொல்லி கொடுக்காமல் அதோடு நம் கலாச்சாரத்தையும், விழிப்புணர்வையும் கலந்து சொல்லிக் கொடுப்பதே நல்ல பாலின்பக் கல்வியாகும். அதை வெறும் உடலுறவு சார்ந்ததாக மட்டுமே பார்க்கும் முட்டாள்களுக்கு எதையும் சொல்லி புரியவைக்க முடியாது.

நமது கலாச்சாரத்தில் 'பெண்ணின் திருமண வயது 21'க்கு மேல் என்ற எண்ணம் உண்டு, அதை சாதரணமாக சொல்லிவிடவில்லை. அதை ஆட்டோக்களுக்கு பின்னால் மட்டுமே பார்த்துப் பழகிய நமக்கு ஏன் சொன்னார்கள் என்று முழுதாக தெரிந்து கொள்வதில்லை. ஒரு பெண் பருவம் அடைந்த உடன் திருமணம் என்று சொல்லாமல் ஏன் ஒரு வயதை நிர்ணயிக்க வேண்டும்? அந்த வயதிற்கு பிறகே ஒரு பெண் மனதாலும் உடலாலும் பக்குவமாகி தாம்பத்திய வாழ்க்கைக்கு தயாராகி விட்டாள் என்பதே அதன் அர்த்தம். பாலின்பக் கல்வியைதான் நமது கலாச்சாரதில் கலந்துவிட்டனர். பாலியல் குற்றங்கள், இளம் வயதில் கர்ப்பம், தகாத உறவு, தவறான உறவுகளால் வரும் பாலியல் நோய்கள், எய்ட்ஸ் ஆகியவற்றை தடுக்கவே நமது கலாச்சாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருந்து வருகிறது. அப்போது ஒளிவு மறைவாக அதை சொல்லிவைத்தனர், அதன் காரணம் ஒருவரின் முழு கவனமும் இதன் மீதே இருந்து கெட்டுப்போய்விடக்கூடாது என்பதே..அதே போன்று பால் உணர்வை தூண்டும் விசயங்கள் அந்த காலத்தில் அதிகமாக இல்லை. இப்போதோ ஊடகமும், சினிமாவும், இணையமும் போதும் கவர்ச்சி, ஆபாசம் காட்டி பாலுணர்வை தூண்ட . கட்டுப்பாடுகளை கொண்டுள்ள நாம் பாலுணர்வை தூண்டும் விசயங்களையும் கையில் வைத்துள்ளோம், இதனால்தான் மேலே கூறிய பிரச்சனைகளை சந்திக்கின்றோம். இதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முறையான பாலின்பக் கல்வி  அவசியம்.

பாலின்பக் கல்வி என்பது வெறும் உடலுறவு சார்ந்தது என்ற எண்ணத்தை முதலில் அகற்ற வேண்டும். அதன் குறிக்கோள் உடலுறவு சார்ந்த கெட்ட எண்ணங்களை, பழக்கங்களை நிறுத்தவேண்டும் என்ற நோக்கில் இருக்க வேண்டும். தகாத வயதில் அதை மேற்கொண்டால் அதன் விளைவு மனதளவிலும் உடலளவிலும் எவ்வாறு இருக்கும் என புரியவைத்தல் வேண்டும். அதை எந்த வயதில் எந்த நேரத்தில் எப்படி மேற்கொள்வது என சரியாக மற்றும் முறையாக விளக்க வேண்டும். அதோடு நம் கலாச்சாரத்தையும் நன்கு புகுத்த வேண்டும். எதனால் அது தவறு, எப்போது அது சரி என சொல்விளக்கம் வேண்டும்.


எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று, முதலில் இதை பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தால் நல்லது. அதுவும் அவர்கள் பருவ வயது அடையும் காலத்தில் அதன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் இதனை பாடமாக கொண்டுவரும் பட்சத்தில் சில கற்பிக்கும் முறைகளை கையாளவேண்டும். முதலில் பாடத்தில் வரும் விளக்கமோ படமோ பால் உணர்வை தூண்டாத விதத்தில் இருக்க வேண்டும், இதற்கு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் பரிசீலிப்பது நல்லது. சில பகுதிகளாக பிரித்து அந்த வயதிற்கற்ற கல்வியை கொடுக்க வேண்டும். ஆண்களுக்கு ஆண் ஆசிரியர்களும் பெண்களுக்கு பெண் ஆசிரியர்களும் எடுக்கலாம். பாலுணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்தால் அதற்கு சிறந்த மனோதத்துவ நிபுணரிடம்  மாணவர்களுக்கு தகுந்த புத்திமதிகளை கூற வேண்டும். 

கலாச்சார பின்னனியோடு இவ்வாறு பின்பற்றினால் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம், ஆனால் இதனை உடனே செயல்படுத்த முடியாது. ஏனெனில், பாலின்பக் கல்வி பெறாத ஆசிரியர்கள் தான் இப்போது உள்ளனர். இதனை பெற்றோர்கள் மூலமாக இப்போது கொடுப்பதே நல்லது. இதன் விளைவு, விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணர்த்தவேண்டும். 2 அல்லது 3 தலைமுறைக்கு பிறகு பாலின்பக் கல்வி பெற்ற, பக்குவமடைந்த நல்ல ஆசிரியர்களும் இதனை எடுத்துக்கூறலாம். வளரும் சமுதாயம் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமுமே உள்ளது, கவனமாக ஒழுக்கத்துடன் வளர்த்தால் கண்டிப்பாக நல்ல சமுதாயமும் கலாச்சாரமும் இருக்கும் (கிடைக்கும்).

ரூ 300 கோடி கருப்பு பணம் பறிமுதல்!!

டெல்லி மேல் சபையில், மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியிடம் கேட்கப்பட்ட  கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த கூறுகையில்:

மாநில வாரியாக கறுப்பு பணம் கைப்பற்றப்பட்ட விவரங்களை வருமான வரித்துறை பராமரிப்பதில்லை. ஆனால் நாட்டில் நடப்பு நிதியாண்டான  (2011௧2), அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் வரை 7 மாதங்களில் ரூ.299.63 கோடி கறுப்பு பணத்தை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் பணம் மற்றும் நகைகள் அடங்கும். ரூ.179.59 கோடியில் பணமும், ரூ.95.67 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.24.36 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 2010-11-ம் ஆண்டில் ரூ.774.98 கோடி கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ.440.28 கோடி பணமும், ரூ.184.15 கோடியில் நகைகளும் அடங்கும் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

மூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்


ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித சமுதாயம் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை வாய்மொழித் தரவுகளாக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மனித குலத்திற்கு கடத்தி இருக்கிறது.
வேளாண்மை சார்ந்த நாட்டார் தொழில்நுட்பங்கள் பல நீண்ட நெடிய அனுபவத்தின் விளைவாக மனித குலத்திற்குக் கிடைத்தது.

இந்து சமுதாய மக்களின் சடங்கு சம்பிரதாயங்களுக்குள் ஒருவித அறிவியல் சார்ந்த அர்த்தம் இருக்கிறது என்பதைத் தன் அனுபவத்தின் வாயிலாக கவியரசர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி விளக்கினார்.

நாட்டார் நம்பிக்கைகள் சிலவற்றை மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவை வெறும் மூட நம்பிக்கைகள் என்று தோன்றும். ஆனால் அவை மனித குலம் வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் சாரம் என்ற சிந்தனையுடன் அணுகினால், அந்த நம்பிக்கைகளின் உள் அர்த்தம் நமக்குப் புரியும்.
நாட்டுப்புற நம்பிக்கைகளில் அறிவியல் சார்ந்த நம்பிக்கைகள் சிலவற்றை பற்றி மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

* தென்கோடியில் வெள்ளி தோன்றினால் அந்த ஆண்டு பஞ்சம் வரும் (நாள், நட்சத்திரங்களைப் பற்றிய நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகு, வானவியல் துறைசார்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய நம்பிக்கையாகும் இது.)
* கர்ப்பிணிப் பெண்கள் மலைஏறக் கூடாது. (கர்ப்பிணிப் பெண் மலை ஏறினால் அவளின் கருக் கலைந்து விடும் என்பதால் இந்த நம்பிக்கை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.)
* ஈர ஆடைகளை அணிந்து கொண்டு மங்கலமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. (ஈரமான ஆடைகளை அதிக நேரம் உடுத்திக் கொண்டிருப்பதால் உடம்பின் தட்ப வெப்ப நிலை சீர்குலையும். அதனால் பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.)
* விக்கலை நிறுத்த விக்கிக் கொண்டிருப்பவரிடம் அதிர்ச்சி தரும் பொய்த்தகவல்களைச் சொல்வார்கள்.(இது ஒரு விதமான அதிர்ச்சி வைத்தியமாகும்.)
* அன்னத்தை (சோற்றை) வீசி எறியக் கூடாது. (தண்ணீரையும், சோற்றையும் சிக்கனமாகவும், கவனமாகவும் பயன்படுத்த வேண்டும். உண்ணுங்கள், பருகுங்கள், வீண்விரயம் செய்யாதீர்கள்.’ என்றார் நபிகள் நாயகம். உணவுப்பஞ்சம் உலகின் பலபகுதியில் உள்ள நிலையில் ஆக்கிய சோற்றில் தான் உண்டது போக மீதியை ஏழைகளுக்குக் கொடுத்து உதவ வேண்டும், வீசி எறிந்து வீணாக்கக் கூடாது.)
* நட்சத்திரங்கள் எரிந்து பூமியில் விழுவதைப் பார்க்கக் கூடாது. (நட்சத்திரங்கள் எரியும்போது தோன்றும் ஒளியில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நட்சத்திரங்கள் எரிவதைப் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.)
* புதுப்பெண்ணை ஆடி மாதம் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்க மாட்டார்கள் ("ஆடிக்கு (மாதம்) அழைக்காத (விருந்துக்கு கூப்பிடாத) மாமியாரைத் தேடிப்பிடித்து அடி!" என்கிறது ஒரு சொலவம்.
ஆடிமாதம் கணவன் வீட்டில் இருந்து, கணவனுடன் இல்லற சுகத்தை அனுபவித்தால், அதன் மூலம் அப்பெண் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஆடி மாதம் பெண்கள் கருத்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதால் இத்தகைய நம்பிக்கையும், பழமொழியும் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.)
* உச்சி வெயில் நேரத்தில் எண்ணை தேய்த்துக் குளிக்கக் கூடாது (காலையில் அல்லது மாலையில் தான் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். மத்தியான உச்சிப் பொழுதில் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். மத்தியான உச்சிப் பொழுதில் எண்ணை தேய்த்துக் குளித்தால், சூரியனின் ஒளிக் கதிர்கள் உடம்பின் நரம்புகளைத் தாக்கும், அதனால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.
* ஈரத்துணியைப் பிழியாமல் கதவுகளின் மேல் போடக்கூடாது (ஈரத்துணியைப் பிழிந்து வெயிலில் காய வைத்தால்தான் துணியில் சுருக்கங்கள் ஏற்படாது.)
* மூஞ்சூரைக் கொன்றால் தலைவலி வரும். (மூஞ்சூர் என்பது எலி இனத்தைச் சேர்ந்த அரிய உயிர் இனம். இது பிள்ளையாரின் வாகனமாகவும் உள்ளது. ‘மூஞ்சூர்’ என்ற அரிய உயிர் இனம் அழியாமல் காக்கும் நல்லெண்ணத்தில்தான் இத்தகைய நம்பிக்கைகளை நம் முன்னோர்கள் உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்கள்.)
* கர்ப்பிணிப் பெண்கள் வெறும் வயிற்றுடன் தூங்கக் கூடாது (கர்ப்பிணிப் பெண்களைக் கிராமத்து மக்கள் ஈருயிர்க்காரி (இரண்டு உயிர் உள்ளவள். தாய்க்கு ஒரு உயிர், தாயின் வயிற்றில் வளரும் சேய்க்கு ஒரு உயிர்; ஆக ஈருயிர்) என்று சொல்வார்கள். தாய் பட்டினி கிடந்தால் தாய்க்கு வயிற்றுப்புண் (அல்சர்) போன்ற குடல் நோய் வரும். கருவில் இருக்கும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச் சத்துக் கிடைக்காமல் குழந்தை ‘சோணிக்’ குழந்தையாகப் பிறக்கும்.)
* வீட்டில் நூலாம் படை அதிகமானால், தரித்திரம் வரும் (சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த நம்பிக்கையாகும் இது. வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை இந்த நாட்டார் நம்பிக்கை வலியுறுத்துகின்றது.)
* படுத்துக் கொண்டு சாப்பிடவும் கூடாது; நீர் அருந்தவும் கூடாது (படுத்துக் கொண்டு சாப்பிட்டால், உணவுக்குழாயில் நாம் சாப்பிடும் உணவு அடைத்துக் கொள்ளும் அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.)
* சுடுகாட்டுப் பிணம் எரியும் புகையைச் சுவாசிக்கக் கூடாது. (அப்புகையில் அதிகப்படியான கார்பன் உள்ளது. எனவே அப்புகையைச் சுவாசிக்காமல் இருப்பது நல்லது. சுடுகாட்டுப் புகையைச் சுவாசிப்பதால் மனதில் ஏதேனும் கிலேசம் (பயம்) தோன்றவும் உளவியல் பூர்வமான வாய்ப்பு உள்ளது.)
* பகல் நேரத்தில் வயதுக்கு வந்த பெண்கள் வெட்ட வெளியில் மல்லாந்து படுத்து உறங்கக் கூடாது (வயதுக்கு வந்த கன்னிப் பெண்கள் பகல் நேரத்தில் மட்ட மல்லாக்கப் படுத்து உறங்குவதால், அவளை அறியாமல் அவள் உடுத்தி இருந்த மாராப்பு சேலை விலகிவிட வாய்ப்பு உள்ளது. பகலில், வெட்ட வெளியில் மாராப்புச் சேலை, விலகிய நிலையில் கவர்ச்சியைக் காட்டியபடி படுத்து உறங்கும் கன்னிப் பெண்களை, அவ்வழியே செல்லும் ஆண் பார்க்க நேர்ந்தால் அவனுக்கு பால் உணர்வு ஏற்பட்டு, விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது)
* விளக்கு தானாகவே கருகி அணைந்து விடக் கூடாது. (விளக்கில் எண்ணை இருக்கும் வரை, எண்ணை எரியும். எண்ணை தீர்ந்து விட்டால் விளக்கின் திரியே எரிய ஆரம்பித்துவிடும். திரியும் எரியும் மட்டும் எரிந்து பின் விளக்கு தானே அணைந்துவிடும். விளக்கை ஏற்றும் முன் தேவையான அளவு எண்ணை விளக்கில் இருக்கிறதா..? என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்ற கருத்தையே இந்த நம்பிக்கை வலியுறுத்துகிறது)
* வெறும் உரலை ஆட்டக் கூடாது. (வெறும் உரலை ஆட்டினால், உரல்குழி ஆழமாகும் உரலின் உட்புறம் உள்ள கல் கரையும் அதிகமான சத்தம் ஏற்படும்)
* சங்கிலிகளையும், வீட்டுக்கதவில் இருக்கும் இரும்பில் ஆளை நாராஸ்திகளையும் வீணே ஆட்டக்கூடாது (ஒலிசார்ந்த மாசு ஏற்படுவதை தவிர்க்கவே இந்த நம்பிக்கை படைக்கப்பட்டுள்ளது.)
* இடது கையால் கால் விரல்களைப் பிடித்தபடி சாப்பிடக் கூடாது (கால் நரம்புகளும், இடது கை நரம்புகளும் விரைப்பாக இருக்கும் போது சாப்பிடக் கூடாது.)
* உள்ளங்கையில் சோறுபடாமல் சாப்பிடுவது உறவுகளுக்கு (சொந்தக்காரர்களுக்கு) நல்லது. (உள்ளங்கையில் உள்ள அழுக்கு சாப்பாட்டுடன் வயிற்றினுள் செல்லாமல் இருக்கும். குறைவாகச் சாதத்தை அள்ளி மெதுவாக ரசித்துச் சாப்பிட்டால், உள்ளங்கையில் சாதம் படாது)
* மணப்பெண்ணுக்கு மாத விலக்கு ஏற்படும் நாளில் திருமணம் செய்யக் கூடாது. (இத்தனை நாள் உடல் உறவுக்காக காத்திருந்த புதுமாப்பிள்ளை, திருமணம் ஆன அன்று இரவும் உடல்சுகத்திற்கு ஏமாந்து விட கூடாது என்பதால் இந்த நம்பிக்கையைப் படைத்து உலவ விட்டிருக்கிறார்கள்)
* சிவப்பு எறும்பு சாரி, சாரியாக (சாரை, சாரையாக) வீட்டிற்குள் வரக் கூடாது (அதிகமாக வீட்டினுள் குப்பை கூழங்கள் கிடந்தால்தான் சிவப்பு எறும்பு சாரை, சாரையாக வீட்டினுள் செல்லும், சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த நம்பிக்கையாகும் இது!)
* சாப்பிடும்போது வாழை இலையின் நடுநரம்பிற்கு மேற்பகுதியில் சமைத்த காய், கூட்டு முதலியவைகளைப் பரிமாறுவது நல்லது. (வாழை இலையின் நரம்பிற்கு மேற்பகுதி மெல்லியதாக இருக்கும், அதில் சோற்றைக் குழம்புடன் சேர்த்துப் பிசையும் போது தளிரான அந்த இலைப்பகுதி கிழிந்து விடும் எனவே அதில் கூட்டைப் பரிமாற வேண்டும். வாழை இலையின் நரம்பிற்கு கீழே உள்ள பகுதி சற்று முரடாக இருக்கும். அதில் சோற்றைப் பரிமாற வேண்டும்)
* நகத்தைக் கடிப்பதால் தரித்திரம் வரும். (நகத்தைக் கடிக்கும் போது நகத்தின் உட்புறம் உள்ள அழுக்குகள் வயிற்றினுள் சென்றுவிடும். அதனால் நோய்வரும். நகத்தைக் கடிக்கும்போது, வெட்டுப்படும் நகத்துண்டுகளும் வயிற்றினுள் சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது.)
* அந்தி நேரத்தில் உணவு உண்ணலாகாது. (அந்தி என்பது இரவும் அல்லாத பகலும் அல்லாத நடுப்பொழுது. அந்நேரத்தில் உணவு உண்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல.)
* நின்று கொண்டு சிறுநீர் கழிக்க கூடாது. (இஸ்லாமியர்கள் இதை ஒரு கொள்கையாகவே கொண்டு வாழ்கின்றார்கள். நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும்போது, அதன் துளிகள் தெறித்து காலில் பட வாய்ப்புள்ளது. அதனால் நோய்கள் தோன்றும்.)
* படுக்கும்போது முகத்தை மூடிக் கொண்டு படுக்கக் கூடாது. (முகத்தை மூடிக்கொண்டு படுத்துக் கிடந்ததால் பெற்ற தாயையே அடையாளம் தெரியாமல் ஒருவன் கொன்றதாக ஒரு நாட்டுப் புறக்கதை-(உங்காத்தாளும் எங்காத்தாளும் விடிந்தால் தெரியும்) உள்ளது.
* விளக்கின்றி (இருட்டில்) சாப்பிடக் கூடாது. (இருட்டில் சாப்பிட்டால், சாப்பாட்டுடன் பூச்சி, பொட்டைகளையும் சேர்த்துச் சாப்பிட்டு விடும் அபாயம் உள்ளது.)
* கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது எந்தவித உணவையும் உட்க்கொள்ளக் கூடாது (சூரிய கிரகணத்தின்போது ஏற்படும் வேதியல் மற்றும் ரசாயன மாற்றத்தால், உண்ணும் உணவு மெல்லிய விஷமாகி தாயின் வயிற்றில் இருக்கும். கருவை பாதித்து விடும் அபாயம் உள்ளது.)

இப்படி கிராமத்து மக்களின் நம்பிக்கைகளுக்குப் பின்னால் அறிவியல் பூர்வமான செய்திகளும் உள்ளன. மேலோட்டமாக இவைகளைப் பார்த்து, இவைகள் யாவும் படிக்காத, பாமர மக்களின் மூட நம்பிக்கைகள் என்று பெரும் போக்காக புறங்கையில் தள்ளி ஒதுக்கி விடக் கூடாது. இது போன்ற நம்பிக்கைகள், உலகம் எங்கும் உள்ள பழமையான சமூகங்களில் காணக்கிடக்கிறது. இன்றும் மலைவாழ் மக்களும், பழங்குடியினரும், இதுபோன்ற நம்பிக்கைகளைக் கடைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

"உலகம் எங்கும் (பழங்குடி மக்கள் உட்பட) உள்ள நம்பிக்கைகளை எல்லாம் திரட்டி, ஒருகளப்படுத்திக் கொண்டு (ஓரிடத்தில் வைத்துக் கொண்டு) ஆய்வு செய்தால் பல்வேறு புதிய செய்திகள் ஆய்வுலகத்திற்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ஆன்மீகம், உளவியல், சுற்றுச் சூழலியல் சார்ந்த பல்வேறு நம்பிக்கைகளும் ஓரு விதத்தில் அறிவியல் சார்ந்ததாகவே உள்ளன.

மானுட அனுபவமும், அறிவும் உருவாக்கிய தொழில்நுட்பங்கள், பழந் தமிழர்களால் விஞ்ஞான பூர்வமாகப் பதிவுசெய்யப்படாததால் நாம் இழந்த செல்வங்கள் பலவாகும். நாட்டார் தரவுகளை மூடியிட்ட மனத் தடைகளுடன் அணுகாமல், திறந்த மனதுடன் ஆய்வறிஞர்கள் ஆராய முன்வர வேண்டும்.

 நன்றி : கழனியூரன் ('கிராமங்களை கடந்து செல்லும் கால்கள்' புத்தகத்திலிருந்து)

அதிகாலையில் தண்ணீர் பருகினால் வியாதிகளை விரட்டலாம்



தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed tea) அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம்மெல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.

நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,

மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை

1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, or lunch and dinner do not eat or drink anything for 2 hours)
5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.
இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது மேலும் கடுமையாகாது மட்டுப் படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள்
வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள்
சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி – 30 நாட்கள்
மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) – 10 நாட்கள்
புற்றுநோய் – 180 நாட்கள்
காச நோய் – 90 நாட்கள்.

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். ”நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.

நன்றி:எழுதமிழா

தோள்பட்டை வலி அதிகரித்தால் கவனம் தேவை


தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது. தோள்பட்டை வலிக்கும், இதய நோயின் அறிகுறியான இடது புறத்தில் பரவும் வலிக்கும் உள்ள வித்தியாசத்தை சாதாரண மக்களால், துல்லியமாக கண்டுபிடிக்க இயலாது என்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் வலி ஏற்பட்ட உடனே, பயந்து அது இதய நோயின் அறிகுறி என்று நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம் 

இரு சக்கர வாகனங்களில் அதிகம் பயணம் செய்பவர்கள், கம்ப்யூட்டர்களில் அமர்ந்து அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், இருக்கைகளில் சரியான முறையில் அமராதவர்கள், எக்கி பொருட்களை தூக்குகிறவர்கள் கையைத் தலைக்கு கீழே மடக்கி வைத்து தூங்குகிறவர்கள், உடற்பயிற்சியில் தோள் மூட்டுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள் இப்படி யாருக்கு வேண்டுமானாலும், தோள்பட்டை வலி, புஜப் பகுதி வலி, கழுத்து எலும்புப் பகுதி வலி போன்றவை ஏற்படலாம்.

சில சமயங்களில் ஊசியால் குத்துவது போன்று வலிக்கும். கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து, கைவிரல் நுனி வரை இழுத்துப் பிடிப்பது போன்று வலி வரும்.

தோள்பட்டை மூட்டு பாதிப்பால் ஏற்படும் வலி என்றால், அது முழங்கை மூட்டுக்கும், தோள்பட்டைக்கும் நடுவில்  வலிக்கும். இரவில் படுக்கும் போது சிலருக்கு, இந்த வலி அதிகரிக்கும். கழுத்து எலும்புகளின் இடையே உள்ள ஜவ்வுகள் போன்றவை தேய்ந்தாலும், தோள்பட்டை வலி தெரியும்.

மூட்டு அசைவு குறைந்து, வலி ஓரளவுக்கு மேல் அதிகமாகி, அதனால் இரவில் தனது தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு சிறப்பு வைத்தியம் அவசியமாகிறது. குறிப்பாக, தோள்பட்டை மூட்டிலுள்ள வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, சின்ன வேலை செய்யக்கூட கையை சற்று தூக்கினாலே வலிக்கும்.

தோள்மூட்டை உள்பக்கமும், வெளிப்பக்கமும் அசைக்கும் தசைநாரில் கால்சியம் உப்பு படிந்தாலும், வலி உருவாகும். இப்படி வலி ஏற்பட்டால், பயமில்லாமல், டாக்டரை அணுக வேண்டும். அது கழுத்து வலியா? தோள்பட்டை வலியா? `ரொட்டேட்டர் கப்’ தசை அழுத்தத்தால் ஏற்பட்ட வலியா? மூட்டு இணைப்பில் காச நோய் உருவானதால் ஏற்படும் வலியா? தோள் மூட்டின் மேல் உள்ள தசைகளில் கால்சியம் படிந்ததால், ஏற்படும் வலியா? என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து விடலாம்.

மிக நுண்ணிய அளவில், தசை சிதைந்து போயிருந்தால், அதனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.

பிசியோதெரபி, மருந்து மாத்திரைகளால் பெரும் பாலான தோள்பட்டை வலிக்கு நிவாரணம் கிடைத்து விடும்.

இது போன்றவர்களுக்கு தொடர்ந்து தேவையான மருந்து மாத்திரைகள், பிசியோதெரப்பி கொடுத்த பின்னும் வலி இருந்தால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் தோள்பட்டை மூட்டு எலும்பில் பிரச்சினையா?, சுழல் தசைகளின் கோர்வையில் உள்ள தசை நார்கள் நைந்து, பிய்ந்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் அறுந்து போகாதபடி அறுவைச் சிகிச்சை செய்வது அவசியமாகிறது.

இதனால் தோள்பட்டை வலி நன்றாக குறைந்து, தொலைந்து போன அசைவை மீண்டும் வலியின்றி பெறலாம்.

 நமது உடலில் எலும்பும் தசையும் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகிறது. நாம் தசைக்கு முறையான உடற்பயிற்சி கொடுத்தால், அது எலும்புக்கு வலு கொடுத்து, வலியின்றி வாழ வழிவகுக்கும்.

மூளையின் திறனை பாதிக்கும் பத்து விஷயங்கள் !!




மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இருப்பினும், உடலில் மூளையின் பங்கு மிக முக்கிய இடத்தை  வகிக்கிறது. காரணம் சிந்திக்கும் திறன் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் இவை அனைத்தும் மனிதனின் மூளையை பொருத்தே அமைகின்றன. அத்தகைய மூளையை பாதிக்கும் மிக முக்கியமான பத்து விஷயங்களை பற்றி பார்ப்போம்.


1.  காலை உணவை தவிர்த்தல்
2.  அதிக உணவை உட்கொள்ளுதல்
3.  புகைபழக்கம்
4.  மாசுபட்ட காற்றை சுவாசித்தல்
5.  இரவில் உறங்காமல் இருத்தல்  
6.  உறங்கும் போது தலையை மூடிக்கொள்ளுதல்
7.  மன அழுத்தம்
8.  உணவில் அதிகம் இனிப்பு அ சர்க்கரை சேர்த்து கொள்ளுதல்
9.  உடல்நிலை சரியில்லாத நிலையில் அதிகம் சிந்தித்த்ல்
10. அதிகம் பேசாமல் இருத்த்ல்

மேலே குறிப்பிட்டுள்ள பழக்கங்கள் ஏதாவது உங்களுக்கு இருக்குமாயின், இப்போதே அதை சரிசெய்து, உங்களின் மூளையின் திறனை பாதுகாத்துகொள்ளுங்கள்.

தலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3

தலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2  பாகம் 2




7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள்
தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உதிரும்.
தலையின் சருமத்தில் வரும் படைகள், கட்டிகள், புண்கள், தோலைத் தாக்கும் பிற நோய்களும் கேசம் உதிரக் காரணமாக அமையலாம்.

8. மரபு வழிக் காரணங்கள்
சிலருக்குப் பரம்பரையாகக் கேசம் உதிருதல், வழுக்கை விழுதல் போன்றவை ஏற்படலாம் பெண்களை விட ஆண்களுக்கு இவ்வாறு மரபு வழிக் காரணங்களால் கேசம் அதிகாமாக உதிர்கிறது.


9. மன அழுத்தம்
மன அழுத்தம், மன இறுக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கும் கேசம் அதிகமாக உதிரலாம். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

மன அழுத்தம் அதிகமாக இருந்தால் தைமஸ் எனும் நாளமில்லாச் சுரப்பியிலிருந்து சுரக்கும் தைமொலின் என்ற இயக்க நீரின் அளவு வெகுவாக குறைந்து விடும் எனவே கேசம் அதிகமாக உதிரலாம்.

மன அழுத்தத்தோடு அல்லது இறுக்கத்தோடு இருக்கும்போது நமது முகம், தாடைப்பகுதி, நெற்றி மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள தசைகள் மிகவும் இருக்கமாகிறது.

இந்த இருக்கத்தால் தலையின் தோலுக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள் அழுத்தப்பட்டு அவற்றில் இரத்த ஒட்டம் குறைபடுகிறது, இதனால் கேசவேர்கள் ஊட்டச்சத்து கிடைக்காமல் வலுவிழக்கின்றன.

10. வயது

40 வயதுக்கு மேல் கேசம் உதிவது சற்று அதிகரிக்கலாம், அது இய்ற்கையான ஒன்று.
அந்த வயதிலிருந்து உடலின் அனைத்து இயக்கங்களிலும் சிறிய மந்தத் தன்மை ஏற்படும். புதிய கேசம் வளரும் வேகமும் குறையும்.

பெரும்பாலானோருக்கு, கேசம் அதிகப்படியாக உதிராவிட்டாலும், 40 வயதிற்கு மேல் கேசத்தின் பருமன் குறையத் தொடங்கும்.

இவ்வாறு கேசம் மெலிவதால், அடர்த்தி குறைந்தது போன்ற தோற்றம் ஏற்படும்.

11. கதிர் வீச்சுகள்

எக்ஸ் கதிகள், காமாக் கதிர்கள், மின் காந்த அலைகள் போன்ற பலவகையான கதிர்வீச்சுகளின் பாதிப்புகளினாலும் கூட கேசம் அதிகாமாக உதிரும்.

எக்ஸ்ரே லேப், மின் அணு நிகையங்கள், புற்று நோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை தரும் மையங்களில் வேலை செய்யும் கவனமுடன் இருக்க வேண்டும். வெளியில் அதிகம் சுற்றுபவர்கள் புற ஊதாக் கதிர்களினால் பாதிக்கப்பட்டு கேசம் உதிரலாம்.

12. வேதிப்பொருட்கள் (கெமிக்கல்ஸ்)

பல வகையான வேதிப்பொருட்கள் கேசம் உதிரக் காரணமாகலாம், பெயிண்டிங், நகைகளுக்கு மெருகேற்றுதல், கவரிங் பூசுதல், சோப்பு தொழிற்சாலைகளில், பிற வேதிப் பொருட்கள் தயார் செய்யும் இடங்களில் பணிபுரிபவர்களுக்கு சிறிது சிறிதாக உடலில் வேதிப்பொருள் சேரும் வாய்ப்பு உள்ளது. இதனால் கேசம் அதிகமாக உதிர வாய்ப்புள்ளது.

இதுவரை கேசம் உதிரும் காரணங்களை பார்த்தோம், இனி உதிர்வதை தடுக்கும் முறைகளை பார்க்கலாம்.

கேசம் உதிருவதை தடுக்கும் முறைகள்
1.   மருத்துவ ஆலோசனை
2.   உணவு முறை மாற்றங்கள்
3.   வாழ்க்கை முறை மாற்றங்கள்
4.   கேசப் பராமரிப்பு
5.   எளிய சிகிச்சைகள்

மருத்துவ ஆலோசனை

திடீரென கேசம் கொத்து கொத்தாக உதிரத் துவங்கினால், உடலில் தொன்றியுள்ள ஏதேனும் தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகவேண்டும். கேசம் மட்டுமே பிரச்சனை என்றால் தோல் நோய் நிபுணரை (Dermatologist) அணுகுவது அவசியம்.

தலையில் பேன், ஈறு, பொடுகு, புண், கட்டி, தோல் நோய் இருந்தால் அவற்றை தகுந்த சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ள வேண்டும்.

இயக்க நீர் குறைபாடுகள் (Hormonal Imbalances) உள்ளதா, ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

உணவு முறை மாற்றங்கள்

கேசம் நன்கு வளரவும், உறுதியாக இருக்கவும் நாம் உண்ணும் உணவு புரதம் நிரைந்ததாகவும், சரிவிகித உணவாகவும் இருத்தல் அவசியம்.
புரதம் (Protein)

நாம் உண்ணும் உணவுகள் அடிப்படையிலேயே மாவுச்சத்து, புரதம், கொழுப்பு ஆகிய மூன்றுமே உள்ளன. கேச வேர்கள் உறுதி பெறவும், கேசம் நன்கு வளரவும் புரதச் சத்தே மிக அவசியமானதாக உள்ளது.

புரதம் அதிகம் உள்ள உணவுகள்
கோழிக் கறி
கொழுப்பு குறைவான மாமிசங்கள்
முட்டை, மீன், உலர்ந்த பருப்புகள் (பாதாம், பிஸ்தா, முந்திரி), பட்டாணி, வேர்கடலை
பீன்ஸ், சோயா, பால், தயிர், யோகர்ட், சீஸ்

இரும்புச் சத்து

உங்களது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு உள்ளது என பரிசோதித்து பாருங்கள், இந்த அளவு 12.5 கிராமுக்கு மேல் இருப்பது அவசியம். 11 கிராமுக்கு கீழே இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று இரும்புச் சத்து மாத்திரைகள், டானிக்குகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கல்லீரல், பூசணி விதை, பாதாம் பருப்பு, முட்டை மஞ்சள் கரு, உலர்ந்த திராட்சை, பேரிச்சம் பழம், பப்பாளி, மாதுளை, பசலைக் கீரை, காலிஃப்ளவர், முருங்கைக்கீரை போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.

பி.காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள்
எல்லா பி.காம்ப்ளெக்ஸ் சத்துக்களுமே கேச வளர்ச்சிக்கு அவசியம், இருந்தும் பயாடின் (Biotin) மற்றும் அயனோசிட்டால் (Ionocitol) ஆகிய இரண்டும் மிக மிக அவசியமானவை.

பயாடின் அதிகமுள்ள உணவுகள்
கைக்குத்தல் அரிசி, பார்லி, ஓட்ஸ், சோயாபீன்ஸ், காலிஃப்ளவர், காளாங்கள், வேர்கடலை, பாதாம் பருப்பு.

அயனோசிட்டால் அதிகமுள்ள உணவுகள்
கல்லீரல், ஈஸ்ட், உலர்ந்த திராட்சை, முளைவிட்ட தானியங்கள், முட்டைகோஸ், வேர்கடலை.

அயோடின்
உடலில் அயோடின் சத்து குறைபடுவதாலும் கேசம் உதிர்வது அதிகரிக்கும். அயோடின் தலையின் தோலுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, கேச வேர்களை வலுவடைய செய்கிறது.

அயோடின் கலந்த உப்பு, கடல் உண்வுகள், பசலைக் கீரை. இவற்றுள் கடல் உண்வுகளில் அதிக அளவில் அயோடின் சத்து உள்ளது.

தாமிரம் அதிகம் உள்ள உணவுகள்
கல்லீரல், கடல் நண்டு (Lobster), சிப்பி, உலர்ந்த பருப்பு, கீரைகள்.

வைட்டமின் சி
நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, அன்னாசி, பப்பாளி, முருங்கை கீரை, முட்டைகோஸ் போன்ற உணவுகளில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

தண்ணீர்
கேச வேர்கள் உறுதியாக இருக்க அதிக அளவில் நீர் அருந்துவது அவசியம்.தினசரி குறைந்தது 3.5 லிட்டர்கள் வரை அருந்துவது அவசியம்.

வைட்டமின் ஏ சத்து தேவைக்கு அதிகமாக இருந்தாலும் கேசம் உதிரத் துவங்கும், மீன் எண்ணெய் மாத்திரைகள், வைட்டமின் ஏ மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு கேசம் அதிகமாக உதிரத் துவங்கினால் மருத்துவரை அணுகுவது நல்லது.

தொடரும்...

டிசம்பர் 2 - போபால் பேரழிவு: நீதி?

1984 டிசம்பர் 2 நள்ளிரவு 12.00 மணி
. மத்திய பிரதேச மாநிலம். போபால் நகரம். எல்லாப் பொழுதுகளையும் போலவே அன்றைய பொழுதும் கழியும் என்று வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பியிருந்தனர் மக்கள். அன்றைய பொழுதின் வேலைகளை முடித்த திருப்தியோடு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். விளையாடி முடித்த களைப்பில் பெற்றோரின் அரவணைப்பில் இனிமையான கனவுகளோடு குழந்தைகள் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். தொலைக்காட்சி பரவியிருக்காத நேரம், ஊரே நிசப்தமாக தூங்கிக் கொண்டிருந்தது. சில இடங்களில் மட்டும், டிரான்சிஸ்டரில் கிஷோர் குமாரும், லதா மங்கேஷ்கரும் காலங்களைக் கடந்த தங்கள் இனிய குரல்களில் இரவின் அமைதியை தாலாட்டிக் கொண்டிருந்தனர்.

போபால் மாநகரின் ஜெயபிரகாஷ் நகரில் ஹசீரா பீவி தனது கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாரோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அந்த அமைதியை சட்டென்று குலைத்துப் போடும் வகையில், திடீரென்று அவரது கணவர் கடுமையாக இருமத் தொடங்கினார். "யாரோ மிளகாயை எரிக்கிறாங்க போல இருக்கு" என்றார். ஹசீரா பீவிக்கும் இருமல் கடுமையாக வந்தது. மிளகாயை எரிப்பதால் இப்படி மூச்சை முட்டும் புகை வராது. வெளியே பரபரவென்று ஏதோ பெரும் இரைச்சல் கேட்டது. மக்கள் ஓலமிட்டுக் கொண்டு ஓடியது போலிருந்தது. அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஹசீராவுக்கு தனது 11 மாத பச்சிளங் குழந்தையின் மீதே எல்லா கவனமும் சென்றது. ஏதோ பெரிய ஆபத்து என்று உணர்ந்து கொண்ட அவர், ஒரு போர்வையில் குழந்தையைச் சுற்றி கையில் எடுத்துக் கொள்ள, அவரது கணவர் இன்னொரு குழந்தையை எடுத்துக் கொள்ள, தனது மாமியாரோடு வீட்டை விட்டு வெளியில் வந்தார் ஹசீரா.

தெருவெங்கும் மக்கள் அலறிக் கொண்டு பல்வேறு திசைகளில் ஓடிக் கொண்டிருந்தனர். எங்கும் ஒரே குழப்பம். அலறல். கூச்சல். கூட்டத்தோடு ஓடிய ஹசீரா மக்களோடு மக்களாக அருகில் இருந்த ஒரு கல்லூரிக்குள் அடைக்கலம் புகுந்தார். அங்கு சென்ற பிறகுதான் அவசரத்தில் தனது 4 வயது மகனை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. தலைதெறிக்க மீண்டும் வீட்டுக்கு ஒடினார். இறந்து விட்டான் என்று நினைத்து தனது மகனை பிணங்களோடு வண்டியில் கிடத்தி வைத்திருந்ததை கண்டார்.

இது ஹசீராவின் கதை மட்டுமல்ல...போபால் நகரில் அன்று இரவு வாழ்ந்த அனைவருக்கும் இப்படித்தான் நேர்ந்தது. என்ன நடந்தது என்று உணர்வதற்குள்ளாக அன்று இரவே 4000 மக்கள் ஈக்களைப் போல் செத்து விழுந்தனர். யூனியன் கார்பைட் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த ஜெயப்பிரகாஷ் நகர், காஜி கேம்ப், சோளா கஞ்ச் மற்றும் ரயில்வே காலனி பகுதியில் வசித்த அனைவரும் கடும் பாதிப்புக்குள்ளாயினர். மூன்று நாட்களுக்குள் 8000 பேர் செத்து மடிந்தனர். அடுத்த சில ஆண்டுகளுக்குள் 15000க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மொத்தத்தில் இந்த விஷ வாயு பேரழிவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டுகிறது.
இவ்வளவுக்கும் காரணமாக இருந்த பூச்சி மருந்து தயாரிக்கும் யூனியன் கார்பைட் ஆலை 1969ம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் போபால் மாநகரத்தில் உருவாக்கப்பட்டது. மோசமான பூச்சிக்கொல்லியாக உருவெடுத்திருந்த, சர்ச்சைக்குரிய டி.டி.ட்டி எனப்படும் டைக்ளோரோபினைல் ட்ரைக்ளோரோ ஈதேன் என்ற வேதிப்பொருளுக்கு மாற்றாக "செவின்" என்ற பூச்சிக்கொல்லியை தயாரிப்பதற்காக அது நிறுவப்பட்டிருந்தது. அந்தப் பூச்சிக் கொல்லி தயாரிக்க தேவையான முக்கிய வேதிப்பொருள் "மீதைல் ஐசோ சயனேட்" என்ற கொடிய விஷம்.

தொழிற்சாலையின் மூன்று தொட்டிகளில் 60 டன் மீதைல் ஐசோ சயனேட் அப்போது இருப்பு வைக்கப்பட்டிருந்தது. ஒரு தொட்டியில் மட்டும், பாதுகாப்பு அளவைவிட மிக அதிகமாக 40 டன் வாயு சேமிக்கப்பட்டிருந்தது. மீதைல் ஐசோ சயனேட்டின் கொதி நிலை 31.1 டிகிரி. அறை வெப்பநிலையிலேயே காற்றில் பரவும் தன்மை கொண்டது. இந்த வேதிப்பொருள் மணம் இல்லாத தன்மை கொண்டதால், காற்றில் பரவினாலும் உடனடியாக தெரிய வாய்ப்பில்லை. கண் மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலால் மட்டுமே அறிய முடியும்.

அந்த வேதிப்பொருள் குளிர் நிலை தொட்டியில் வைக்கப்பட வேண்டும். 11 டிகிரி வெப்பத்தைத் தாண்டினால் அபாய ஒலி எழுப்பப்பட வேண்டும். ஆனால் சம்பவம் நடந்தபோது தொட்டி வெப்பநிலை 20 டிகிரியாக வைக்கப்பட்டிருந்தது. 1984 டிசம்பர் 2 அன்று இரவு தொழிலாளர்கள் குழாய்களை சுத்தம் செய்து முடிக்கும் தருவாயில் 610 எண் கொண்ட தொட்டியில் ஏராளமாக தண்ணீர் புகுந்தது. மீதைல் ஐசோ சயனேட் உடன் தண்ணீர் கலந்தவுடன், அது சேமிக்கப்பட்டிருந்த இரும்புத் தொட்டி கிரியாஊக்கியாக செயல்பட, வேதி மாற்றம் நடைபெற்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய விஷவாயுவாக மாறி அது காற்றில் பரவ ஆரம்பித்தது.

காற்றும் வீச, அருகிலிருந்த மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் இவ்விஷ வாயு புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை மீளாத் துயிலில் ஆழ்த்தியது. இக்காற்று பரவத் தொடங்கியதும் சுவாசித்த மக்கள் கண் எரிச்சலும், நுரையீரல் எரிச்சலும் அடைந்து சுருண்டு விழுந்தனர். இதில் இருந்து தப்பிக்க வேகமாக ஒடியவர்கள், இவ்விஷக் காற்றை வேகமாக சுவாசித்து, அதிவேகமாக மாண்டனர்.

1985ல் மத்திய சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விஷ வாயுவை சுவாசித்த 36 கர்ப்பிணி பெண்களுக்கு உடனடியாக கருச்சிதைவு ஏற்பட்டது, 21 குழந்தைகள் குறையுடன் பிறந்தன, 27 குழந்தைகள் இறந்து பிறந்தன என்று தெரிவித்தார். இச்சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குப் பிறகு பெண்களிடம் ஆய்வு நடத்தியதில் 90 சதவிகித பெண்கள் கருப்பை சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகியுள்ளதும், 79 சதவிகித பெண்களுக்கு இடுப்பு எலும்பு வீக்கமடைந்த நோயும், 75 சதவிகித பெண்களுக்கு கழுத்து எலும்பு தொடர்பான நோய்களும், 35 சதவிகித பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அதிகப்படியான ரத்தப்போக்கும், 59 சதவிகித பெண்களுக்கு பல்வேறு நோய்களும் வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய அனைவரையுமே மூச்சுத் திணறல், சுவாச நோய்கள் பாதித்திருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

போபால் விஷ வாயு பேரழிவு நடந்து 25 ஆண்டுகள் கழித்து, அந்தச் சம்பவம் சுற்றுச்சூழலுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் மையம் (சி.எஸ்.இ.) ஓர் ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இந்த ஆய்வுக்காக, யூனியன் கார்பைட் தொழிற்சாலை, அங்கிருந்து மூன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தண்ணீர், மண் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட 561 மடங்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நச்சு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொழிற்சாலை, அருகில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக மாசுப்பட்டிருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த கொடிய நச்சுகள், உடலில் நரம்பு பிரச்சினைகள், புற்றுநோய், ஈரல், எலும்பு, ரத்த அணுக்கள் உட்பட அம்சங்களை பாதித்து நோய்களை உருவாக்கும் தன்மை படைத்தவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பேரழிவு நடந்து 25 ஆண்டுகள் ஆகியும் இந்திய அரசு சார்பில் எந்த ஆய்வும் தொடர்ச்சியாக நடக்கவில்லை. 1994ல் இந்திய மருத்துவ ஆராய்சிக் கழகம் ஓர் ஆய்வை அரைகுறையாக கைவிட்டுள்ளது. இந்தப் பேரழிவுக்கு பெரிய பின்னணி இருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

செவின் பூச்சிக் கொல்லிக்கு சந்தையில் வரவேற்பு குறையத் தொடங்கியதால் 1984 டிசம்பர் முதல் யூனியன் கார்பைடு தொழிற்சாலையை மூடி விடலாம் என்று அந்நிறுவனம் ஆலோசித்து வந்தது. இந்த அம்சம் மிக முக்கியமானது. மூடப்பட உத்தேசித்திருந்த ஓர் ஆலையில் இருந்து விஷவாயு கசிவு நடந்திருக்கிறது. எப்படியோ இந்த ஆலையை மூடப் போகிறோம். இந்த விஷவாயு மக்களிடையே என்ன பாதிப்புகளை நிகழ்த்தும் என்று பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று அமெரிக்க முதலாளிகளுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் என்ன எதிர்மருந்து கொடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள விஷவாயுவின் பெயரை ஆலை நிர்வாகத்திடம் மருத்துவர்கள் கேட்டபோது, உடனடியாகச் சொல்ல மறுத்திருக்கிறார்கள். யூனியன் கார்பைடின் இந்தியத் தலைவர் ஆண்டர்சன் இன்று வரை கைது செய்யப்படாமல், சௌகரியமாக வாழ்ந்து வருகிறார். யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ள டவ் நிறுவனம்தான் இப்பொழுதும் எவரெடி பேட்டரிகளை உற்பத்தி செய்கிறது.

இப்படி அன்று ஒரு நாள் நடந்த விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட பாதிப்பு, போபால் நகர மக்களை 25 ஆண்டுகளைக் கடந்தும் வதைத்துக் கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரையும், சுற்றுச் சூழலையும் சீரமைக்க முடியாத அளவுக்கு கடுமையாக மாசுபடுத்தியுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் இன்றுவரை முழுமையாக கிடைக்கவில்லை. கால் நூற்றாண்டு கழிந்த பின்னரும், நிவாரணத் தொகைக்காக போராடும் மக்களை, அரசு அமைப்புகள் வழக்கம் போல இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிக் கொண்டுள்ளன. மக்களுக்கு முழுமையான நஷ்டஈடும் பெற்றுத் தரவில்லை, நீதியும் பெற்றுத் தரவில்லை, ஆய்வும் நடத்தவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் உயிரிழந்த மக்களுக்கு ரூ. 100 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்போவதாக மத்திய அரசு சொல்கிறது.

இந்தப் பேரழிவில் இருந்து அரசு எந்த பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்று வரை இதுபோன்ற விபத்துகளை எதிர்கொள்வது குறித்து எந்த திட்டமிடலும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டின் கடலூரில் உள்ள சிப்காட், தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகள், ராணிப்பேட்டையில் உள்ள தோல் பதனிடும் ஆலைகள், சேலம் மேட்டூரில் உள்ள தொழிற்சாலைகள் மீதைல் ஐசோ சயனேட் போன்ற பல நச்சுப்பொருட்களை இன்றும் பயன்படுத்தி வருகின்றன. இங்கு அவ்வப்போது நடைபெறும் சிறுவிபத்துகளும் உரிய முறையில் கவனம் செலுத்தப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன. எத்தனை போபால்கள் நடந்தாலும், அரசு திருந்தப்போவதில்லை. பரிசோதனைக்கூட எலிகளாக நம்மை பயன்படுத்தும் இந்தப் போக்கை எப்படி தடுத்து நிறுத்துவது?

போபால் பேரழிவு - முக்கிய தகவல்கள்
நிறுவனம் - யூனியன் கார்பைடு (தற்போது டவ்) எவரெடி பேட்டரி தயாரிக்கும் நிறுவனம் தயாரித்த பொருள் - நாம் அன்றாடம் சாப்பிடும் தானியப் பயிர்களின் மீது தெளிக்கப்படும் செவின் பூச்சிக்கொல்லி. இதுதான் உடனடியாக 5,000 பேரைக் கொன்றது வெளியான வாயு - மீதைல் ஐசோ சயனேட். கண் எரிச்சல், நுரையீரல் அடைப்பு ஏற்படுத்தி பார்வையை பறிக்கும், இறப்பை ஏற்படுத்தும் மணமற்ற வாயு.

பேரழிவு நடந்த நாள் - டிசம்பர் 2 நள்ளிரவுக்கு மேல், 1984
இறந்தவர்கள் எண்ணிக்கை - உடனடியாக 5,000 பேர் இறந்தனர். சில மாதங்களில் 15,000 பேர் இறந்தனர். 5,70,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கு தண்டிக்கப்பட்டவர்கள் - யாருமில்லை. கைதுகூட செய்யப்படவில்லை. இந்தியப் பிரிவுத் தலைவர் வாரன் ஆண்டர்சன், அமெரிக்க தீவில் உல்லாசமாக இருக்கிறார்.
நஷ்ட ஈடு கேட்கப்பட்டது - ரூ. 1500 கோடி
நஷ்ட ஈடு தரப்பட்டது - ரூ. 250 கோடி
(உச்ச நீதிமன்றம் மூலம்)

நன்றி : அ.சங்கர்,  வலை: கீற்று.


யாரும் மறந்துவிடக்கூடாது இந்த பேரழிவை...

நம் சமுதாயம்: சமுதாய அக்கறை உள்ளவரா நீங்கள்! உங்கள் குரல் ஒலிக்க!



நம் சமுதாயம் - இந்த பகுதி சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்தவே, எந்த பிரச்சனையாக இருந்தாலும் இந்த வாயிலின் வழியாக தெரியப்படுத்தலாம். இதன் மூலம் உங்களுடைய எண்ணங்கள், கேள்விகள் மற்றும் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இது வெறும் வெளிப்படுத்தும் இடம் மட்டும் அல்ல, அதற்கான தீர்வு, சரி செய்யும் வழிமுறைகள், சரியான இடத்திற்கு பிரச்சனையை எடுத்துச் செல்லும் வழிகள் என எதுவாக இருந்தாலும் விவாதிக்கலாம். இது ஒரு தொடக்கமே, சிறு துளியாக நாங்கள் தொடங்குகிறோம் அதை வெள்ளமாக மாற்ற வேண்டியது நீங்கள்தான்.

2 ஜி ஊழல், மின் வெட்டு, விலைவாசி உயர்வு, குண்டும் குழியுமான‌ சாலை எனச் சமுதாயப் பிரச்சனை எதுவாயினும், கிராம‌மோ (அ) நகரமோ உங்கள் பிரச்சனையோ, பொதுப்பிரச்சனையோ (அ) அரசாங்கத்தில் சந்திக்க நேரிடும் இடர்பாடுகளோ எதுவாயினும், அதனை ஒரு கட்டுரையாக (அ) ஒரு தொகுப்பாக,  ஆங்கிலத்திலோ அ தமிழிலோ, புகைப்படத்துடனோ தட்டச்சு செய்து நம் சமுதாயம் என்ற தலைப்பில் எங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

சமுதாய பிரச்சனைகளுக்காக ஒன்று பட்டு குரல் கொடுப்போம் 


தமிழ் டைடிங்ஸின் ஆசிரியரின் அனுமதிக்கு பிறகு உடனே இந்த வலைப்பூவில் உங்கள் பெயருடன் பிரசுரிக்க (அ) வெளியிடப்படும் . (பிரச்சனைகளை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பினால் அதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.)

மின்னஞ்சல் முகவரி:  tamiltidings@gmail.com

ஒன்றாக நடிக்கும் ரஜினிகாந்தும் ஆமிர்கானும்



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது  அதிகமாக பாலிவுட்டோடு நெருக்கமாகி வருகிறார், ரோபோ (எந்திரன்) திரைப்படம் வெளியானது முதல், ரஜினியின் பாலிவுட் பிரவேசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ரா ஒன் படத்திலும் ஷாருக்கானுடன் சிறு காட்சியில் நடித்தார். அடுத்து ஆமிர்கானுடன் ஒன்றாக நடிக்க விருக்கிறார்.

ரஜினி ஆமிர்கான் இணைந்து நடிப்பது திரைப்படத்தில் அல்ல விளம்பரத்திற்காக,  குழந்தைகளின் நலத்திற்காக எடுக்கப்படும் ஒரு விழிப்புணர்வு விளம்பரத்தில் இருவரும் இணைகின்றனர். ஊட்டச்சத்துக்குறைவு காரணமாக வரும் விளைவுகளை அதில் கூறுகின்றனர்.

எஸ்.எம்.எஸ் தொல்லை தரும் பொது நிறுவனங்கள்!!

ஒரு காலத்தில் மக்கள் தகவல் பரிமாற்றத்திற்காக கடிதம் மற்றும் தந்தி என்றழைக்கப்பட்ட விரைவு குறுந்தகவல் போன்றவற்றை பயன்படுத்தினர். பிற்காலத்தில் தொலைபேசி மற்றும் செல்போன்களின் வரவால் கடிதம், தந்தி மதிப்பிழந்து போனது.

தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட தொலைபேசி, தற்போது விளம்பரச் சேவை என்கிற பெயரில் தொல்லை தர ஆரம்பித்துள்ளன இந்த செல்போன் நிறுவனம் மற்றும் பொது நிறுவனங்கள்.

பொது நிறுவனங்கள் விளம்பரச் சேவைக்காக ஒரு குருந்தகவல் ஒன்றை ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து அனைத்து செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்புகிறது. இது போன்ற பலதரப்பட்ட பொது  நிறுவனங்களின் குருந்தகவல்களால், வேலையில் அல்லது கல்லூரியில் இருக்கும் நமக்கு, மிகவும் தொல்லையாக அமைகின்றது.

இதை தவிர்க்கத்தான் இந்தியா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையும் சமிபத்தில் ஒரு கட்டுப்பாட்டை செல்போன் நிறுவனங்களுக்கு விதித்தது. அதன்படி ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் அதன் பயன்பாட்டாளர்களுக்கும் நாளொன்றுக்கு 100 குருந்தகவல்கள் அணுமதிக்க வேண்டும்.

இதையும் மீறி சில நிறுவனங்கள் இணையத்திலிருந்து குருந்தகவல்களை அணுப்ப ஆரம்பித்துவிட்டனர். இதுபற்றி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், இதனை கட்டுபடுத்த வேண்டியது செல்போன் நிறுவனங்களே.

இணையத்திலிருந்து அனுப்பப்படும் குறுந்தக‌வல்களை இடைமறித்து பயன்பாட்டாளரின் நலனை காப்பது அந்நிறுவனங்களின் கடமை என்றார் அவர். செல்போன் நிறுவனங்கள் கண்கானிக்குமா?

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 2

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 1 முதல் பாகம்


முதல் பாகத்தில் முடியை பற்றி அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களை பார்த்தோம், இப்போது முடி உதிர்வின் காரணங்களை பார்ப்போம்.

ஒரு கேசத்தின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அது உதிர்ந்து விடும், அடுத்து பிற வேர்களிலிருந்து புதிய கேசம் வளரும். இவ்வாறு பழைய கேசம் உதிர்வதும் வளர்வதும் அன்றாடம் நடக்கும். உதிரும் அளவும் வளரும் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை. மாறாக உதிர்வது அதிகாமாக இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இயல்பாகவே 70 முதல் 100 கேசங்கள் வரை உதிர்ந்து விடும். பெண்கள் தலை வாரும் போது 10-20 கேசங்கள் வருவது இயல்பான ஒன்று. கொத்துக் கொத்தாக உதிர்வது இயல்பை மீறிய ஒன்று, அதன் காரணங்களை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும்.



காரணங்கள்


கேசம் அதிகமாக உதிர சில முக்கிய காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன,

  1. சரியான பராமரிப்பின்மை
  2. மருந்துகள்
  3. போதைப் பொருட்கள்
  4. இயக்கநீர் மாற்றங்கள்
  5. ஊட்டச்சத்து குறைபாடுகள்
  6. உடலை தாக்கும் நோய்கள்
  7. தலையின் தோலை தாக்கும் நோய்கள்
  8. மரபு வழிக் காரணம்
  9. மன அழுத்தம்
  10. வயது
  11. கதிர்வீச்சுகள்
  12. வேதியியல் பொருட்கள்


ஒருவருக்கு அதிகமாக முடி உதிர்வது மேற்கண்ட ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணமாக கூட இருக்கலாம், சரியான காரணத்தை தெரிந்து கொள்ளுதல் சரி செய்ய உதவும்.

1 சரியான பராமரிப்பின்மை

மிக முக்கியமான காரணம் இதுவே ஆகும்.
தலையில் எண்ணெய் பிசுக்குடன், தூசி ஆகியவற்றை சுத்தம் செய்யாதிருத்தல்.
குளித்தபின் ஈரத்தலையை வாருதல்.
தலையை சுத்தம் செய்ய வீரியம் மிகுந்த தரக் குறைவான ஷாம்பூகளை உபயோகித்தல்.
ப்ளீச்சிங்க்,  பெர்மிங்க், கர்லிங் ஆகியவற்றை அடிக்கடி செய்தல்.
அடிக்கடி கேசச் சாயம் பூசுதல், தரமில்லாத சாயம் உபயோகித்தல்.
தரமற்ற சீப்புகளை பயன்படுத்துதல், அவற்றை சுத்தமில்லமல் உபயோகித்தல்.
ஹேர் டிரையரை சரியான முறையில் உபயோகிக்காமல் இருப்பது.
கேசத்தை இருக்கமாக கட்டுதல்.

2. மருந்துகள்

வீரியம் மிகுந்த மாத்திரை மருந்துஅள் தொடர்ந்து உண்பது.
புற்று நோயை குணப்படுத்தும் மருந்துகள்.
இரத்த உறைவை தடுக்கும் மருந்துகள்.
ஸ்டெராய்ட் வகை மருந்துகள்.
சில நோய்க் கொல்லி மருந்துகள்.

 3. போதைப் பொருட்கள்


புகையிலை அதிகாமாக உபயோகப்படுத்துதல், புகையிலையில் உள்ள நிகோட்டின் முடியின் வேரை சுற்றியுள்ள இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்துவிடும், இதனால் இரத்த ஓட்டம் குறையும். தேவையான ஊட்டச்சத்துக்கள் முடிக்கு கிடைகாமல் போய்விடும்.

4. இயக்க நீர் மாற்றங்கள்

உடலில் ஏற்படும் பலவகை மாற்றங்கள் முடி வள்ர்ச்சியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும், இரண்டிற்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கே இந்த மாற்றங்கள் அதிகமாக இருக்கிறது.

பருவம் அடையும் வயதில்
மாதவிடாய் காலத்தில்
கருவுறும் போது
பிரசவத்திற்கு பின்
மாதவிடாய் நின்றபின்

ஒவ்வொரு நிலையிலும் பலவித இயக்கநீர் மாற்றங்கள் தொடர்ந்து பெண்களுக்கு ஏற்படுவதால், கேச வளர்ச்சி பாதிப்பு , உதிர்தல் ஏற்படுகிறது. பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற இயக்க நீர் கேச வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 15 - 30 வயதில் இந்த இயக்க நீர் அதிகமாக இருக்கும், அப்பருவத்தில் கேசம் அதிகமாக வளரும். மாதவிடாய் நின்ற பின்னர் இந்த ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் கேச உதிர்வு அதிகமாக இருக்கும்.

5. ஊட்டச்சத்துக் குறைபாடுகள்


கேசம் நன்கு வளரவும், வேர்கள் உறுதியாக இருக்கவும் உடலில் தேவையான அளவில் கீழ்காணும் சத்துகள் இருப்பது அவசியம்
புரதம்
பி. காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள்
இரும்புச் சத்து
தாமிரம்
துத்தநாகம்
அயோடின்
வைட்டமின் சி

இதில் ஏதேனும் ஒன்று குறைவாக இருந்தாலும் கேசம் அதிகமாக உதிரும்.

6.  உடலை தாக்கும் நோய்கள்


டைபாய்டு, மஞ்சள் காமாலை, அம்மை, புற்றுநோய், காசநோய் போன்ற நாள்பட்ட நோய்களால் உடல் பாதிப்பதோடு மட்டுமில்லாமல் கேசம் அதிகமாக உதிரும்.

நோயின் கடுமையால் சரியான் உணவு உண்ணமுடியாத நிலையில் முடி வலுவிழந்து விடுகின்றன.
தொடர்ந்து மருந்துகள் சாப்பிடுவதாலும் கேசம் உதிரும்.
அதிக நாட்கள் காய்ச்சலினாலும் உடல் சூட்டினால் கேசம் அதிகமாக உதிரும்.

தொடரும்...


அடுத்த பாகத்தில் மற்ற காரணங்களை பார்க்கலாம்.

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 1


கேசத்தின் அடிப்படை

கேசம் ஏன் உதிருகிறது என்பதை தெரிந்து கொள்ள கேசம் குறித்த சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். நமது கேசம் இறந்த திசுக்களால் ஆன மெல்லிய ஆனால் உறுதியான ஒரு பாகம். இவை கெராட்டின் என்ற ஒரு வகை புரதத்தால் உருவானவை.

உள்ளமைப்பு

கேசத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்

1. தோலுக்கு வெளியே
2. தோலுக்கு உள்ளே

தோலுக்கு வெளியே இருக்கும் பகுதியின் பெயர் கேசத் தண்டு (Hair Shaft) ,  தோலுக்கு உள்ளே இருக்கும் பகுதியின் பெயர் கேச வேர் (Hair Root). கேசத் தண்டில் மெடுலா (Medula)எனும் உட்பகுதி, கார்டெக்ஸ் (Cortex) எனும் வெளிப்பகுதி உள்ளது. கேச வேர்களில் அடிப்பகுதி பெரிதா இருக்கும் அதை கேசக் குமிழ் (Hair Bulb) என்கிறோம், அது  பாலிக்கிள் (Hair Follicle) என்ற பகுதியோடு இணைந்திருக்கும். பாலிக்கிள் பகுதியில் உள்ள ரத்த குழாய்கள் வழியாக வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை பெற்றுக்கொள்கிறது.

கேசவேரோடு எண்ணெய் சுரப்பிகள் உள்ளன, (Sebaceous Glands) இந்த எண்னெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் திரவம் கேசத்திற்கு மினுமினுப்பை தருகிறது, சுரப்பிகள் சரியாக இயங்காவிடில் எண்ணெய் பசையின்றி வறண்டு போய் விடும். அதிகமாக இயங்கினால் எண்னெய் பிசுக்குடன் இருக்கும்.

கேசத்தின் நிறம் அதிலுள்ள மெலனின் என்ற வேதிப் பொருள் அளவை பொறுத்து மாறுபடும்.  வயதாகும் போது இது குறைவதால் நரை ஏற்படுகிறது. கேசத்தின் வளர்ச்சியில் மூன்று நிலைகள் உள்ளன அவை வளரும் பருவம், இடைப்பருவம், ஓய்வுப் பருவம் ஆகும். வளரும் பருவத்தில் புதிய கேசம் உருவாகி வளர்ந்து வரும், அடுத்த பருவத்தில் வளரும் வேகம் குறையும். மூன்றாம் பருவத்தில் வளர்ச்சி நின்று உதிர்ந்து விடும். சில மாதங்கள் கழித்து மீண்டும் புதிய கேசம் வளரும்.

அடுத்த பாகத்தில் முடி உதிர்வுக்கான காரணங்களை பார்க்கலாம்

ரூ.20 கோடி அபாரதம் வசூலிக்கும் போக்குவரத்து காவல்துறை!!


சென்னையை பொருத்தவரை என்னதான் அரசு கிடுக்குப்பிடியான சட்டங்களை வகுத்தாலும், போக்குவரத்து விதிமுறையை மீறுவோர் எண்ணிக்கையும் விபத்துகளும் குறைந்தபாடில்லை. அப்படி விதியை மீறுவோர்கள் போக்குவரத்து காவல்துறை அதிகாரி வசம் பிடிபட்டால், அவர்களில் சிலர் அதிகாரியை 50 (அ) 100  க்கு கவனித்துவிட்டு சென்றுவிடுவது வழக்கம். ஆனால் அதில் பலர் அபாரத்திற்கு உள்ளாவார்கள், அப்படி  வசூலிக்கப்படும் தொகை மூலம் ஆண்டுக்கு 20 கோடி அரசுக்கு வருமானம் வருகிறது என்கிறது போக்குவரத்து காவல்துறை.

இது பற்றி போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா குறிப்பிடுகையில், இந்த விதிமுறை மீறல்களால் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 86 கோடி வரை அபாரம் விதிக்கபட்டு பெறப்பட்டுள்ளது. இந்த வகையில் பெருமளவில் அபாரதம் வசூலிக்கப்படுவது இருசக்கர வாகன ஓட்டிகள் ‌ஹெல்மட் அணியாமல் ஓட்டுவதற்குதான்.

இந்த ஆண்டில் இதன் மூல‌ம் சுமார் 6 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதே போன்று சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவோர்க்கு விதிக்கப்படும் அபாரதம் மூலம் ரூ 77 லட்சமும், முறையான லைசன்ஸ் இல்லாம்ல் வாகன்ம் ஓட்டும் ஒட்டுனர்களுக்கு ‌விதிக்கப்படும் அபாரதம் மூலம் 75 லட்சம்  வசூலிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயண‌ம் செய்பவர்கள் கவனிக்க!!



ரயிலில் முதன் முதலாக மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களாக இருந்தால், நீங்கள் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியவைக‌ள் !

1. உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளுதல் மிக நன்று.

2. ஒரு கைக்குவளை(mug) பயணத்தின் போது கொண்டு செல்வது கழிப்பறை உபயோகத்தின் போது பயன்படும்.

3. முடிந்த வரை ரயிலில் விற்கப்படும் தின்பண்டங்களை மற்றும் உணவு வகைகளை வாங்கி உண்பதை தவிர்க்கவும். தண்ணி பாட்டில்களை தவிர.

4. வீட்டிலிருந்து புளியோதரை மற்றும் ரொட்டிதுண்டுகள் கொண்டு செல்லலாம்.

5. பொழுதை போக்க கையில் ஒரு நாவல் அல்லது ஒரு புத்தகம் கொண்டு செல்வது நன்று.

6. வயிற்று உபாதைக்கான மாத்திரை கொண்டு செல்வது அவசரத்திற்கு உதவும்.

7. முன்பின் தெரியாத நபரிடம் எதையும் வாங்கி உண்ண வேண்டாம். அது உங்களுக்கு சிக்கலில் முடியலாம்.

8. செல்போன் உபயோகிப்பவராக இருந்தால், சார்ஜிங் பாயின்ட் எங்கு உள்ளது என்பதை ரயில் புறப்படும் முன்னரே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

 பயணம் இனிதாக முடிய வாழ்த்துகள் ......

மிக மோசமான நகரம் பெங்களூர் !!!

சமீபத்தில் நடத்தப்பட்ட  நான்காவது ஆண்டு ஐ.பி.எம் கம்யூட்டர் பெயின் கணக்கெடுப்பு படி, உலகளாவிய சராசரி நேரம் 20 நிமிடங்களில்  ஏற்படும் போக்குவரத்து நெரிசலை 6 கண்டங்களில் உள்ள 20 நகரங்களில் 8042 பயணிகளிடம்   ஆய்வு நடத்தப்பட்டது.அதில் பெங்களூர் (44%) என குறிபிடப்பட்டுள்ளது. அந்த புள்ளி விவர அடிப்படையில் மிக மோசமான நகரப் பட்டியலில் பெங்களூர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த  ஆண்டின் எட்டு மாத இடைவெளியில் ஆகஸ்ட் 2011 வரை, கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் சட்டவிரோத/ தவறுதலான  பார்க்கிங் என  4 லட்சம் வழக்குகள் பெங்களூர் போலீசாரால்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெங்களூர் நகர போக்குவரத்து போலீஸ் பதிவுகளின்படி, ஒவ்வொரு மாதமும் 50,000 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்  தவறான நிறுத்தம், இட பற்றாக்குறை காரணமாக கிட்டத்தட்ட 20 முதல் 35 நிமிடங்களில்  தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளனர்.

700 கோடி ஆகும் உலக மக்கள் தொகை

இந்த மாதத்தில், உலகின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை, 700 கோடியாகி விடும். 2100ம் ஆண்டிற்குள், இத்தொகை, ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்' என, ஐ.நா.,வின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 1804ம் ஆண்டு வரை, உலகின் மொத்த மக்கள் தொகை 100 கோடியாக இருந்தது. 1960களில், 300 கோடியாக அதிகரித்தது. இன்னும் ஒரு நூற்றாண்டில், ஆயிரம் கோடியாக உயர்ந்து விடும்.மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் நாடுகளில் தான் காணப்படுகிறது. உலகில், மக்கள் தொகை அதிகரிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 நாடுகளில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய, மூன்று வளர்ந்த நாடுகள் மட்டும் தான் இடம் பெற்றுள்ளன.

இந்த அதிகரிப்புக்கு பொருளாதார வளர்ச்சி, பிறப்பு விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு ஆகிய காரணங்களை, நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதேநேரம், கருத்தடை வசதிகளை அதிகளவில் மக்கள் உபயோகப்படுத்தும் போது தான், பிறப்பு விகிதம் குறைய வாய்ப்பு என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

டிஎன்எஸ்

பிளாஸ்டிக் பைகளை தடை செய்த அரசு

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. 1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி, இதற்கான வரைவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை, பயன்படுத்துவது, வைத்திருத்தல் உள்ளிட்டவை முற்றிலுமாக தடை செய்யப்பட உள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது ரூ.1 லட்சம் வரையிலான அபராதமோ அல்லது இவை இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்எஸ்

சிகரெட்: புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவரா? ஜாக்கிரதை!!!

புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஒரு சிறு குறிப்பு. புகைப்பழக்கம், அதன் விளைவுகள் பற்றி எவ்வளவோ விழிப்புணர்வுகள் கொடுத்தாகிவிட்டது இருந்தும் அதன் மீது நடத்தப்படும் ஆராய்சிகள் குறைந்தபாடில்லை. காரணம் புகைப்பழக்கத்தின் அடிமைகள் பெருகிக் கொண்டே போவதுதான். அண்மையில் நடத்தப்ப ஆய்வில் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. புகைப்பழக்கம் எல்லா வயதினரையும் பாதிக்கிறது குறிப்பாக நடுத்தர வயது உடையவர்கள் மூளை சுருங்கும் தன்மைக்கு ஆளாகிறார்கள். 50 முதல் 60 வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அவர்களது மூளையின் வெள்ளைத்திசுவில் மாற்றம் அல்லது ரத்தக் குழாயில் சிறிய பாதிப்பு ஏற்படுவதும். திட்ட மிடுதல் மற்றும் முடிவெடுத்தல் போன்ற வற்றில் மிகவும் பின்தங்கியுள்ளதும் தெரியவந்தது.

இது என்னவோ நடுத்தர வயதுக்காரர்களுக்கு மட்டும்தானே நமக்கென்ன என்று நினைக்கும் மற்றவர்களுக்கு பொதுவான பாதிப்புகளை தெரிந்துகொள்ள மேலே படிக்கவும்.



எல்லோரும் புற்றுநோய் வரும், நுரையீரல் பாதிப்பு வரும்னு சொல்வாங்க இன்னும் தெரிஞ்சுக்க எவ்வளவோ இருக்கு. சிகரட்டில் பாக்டீரியா இருக்குன்னு கண்டுபிடிச்சுருக்காங்க அமெரிக்கர்கள் அதுவும் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி. ஆனா இந்தியாவுல இதபத்தி பெருசா விழிப்புணர்வு ஏற்படல.

ஆய்வில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பல நிறுவன சிகரெட்டுகளில் மனிதர்களை தாக்குகிற கொடிய பாக்டீரியாக்கள் இருந்தது ஓர் அதிர்ச்சி. அதுமட்டுமில்லாமல், இதில் இருக்கும் பாக்டீரியாக்கள் கொடிய நோய்கள் ஏற்படுத்துவதோடு, வருடக்கணக்கில் உடம்பில் தங்கி பல வகை நோய்களையும் உண்டாக்கும்  என்பது அதிர்ச்சி தகவல்.

அதில் கண்டெடுக்கப்பட்ட பாக்டீரியாக்களும் அதன் விளைவுகளும் :

பெசில்லஸ் (Bacillus) - உணவு சம்பந்தப்பட்ட நோய்கள்.
சூடோமோனாஸ் ஏருஜினோசா (Pseudomonas aeruginosa) - தொற்று நோய்களை ஏற்படுத்துபவை.
அசினோபாக்டர் (Acinetobactor) - நுரையீரல், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள்.
பர்கோல்டீரியா (Burkholderia) - சுவாசக் குழாய் சம்பந்தப்பட்ட  நோய்கள்.

இது போக இன்னும் சில பாக்டீரியாக்களும் இருப்தாக அந்த ஆய்வு தெரிவித்தது. ஒரே ஒரு சிகரெட் பிடித்தால் கூட அதன் விளைவு அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது நம் உடம்பில் உள்ள இரத்தநாளங்களை 25 சதவீதம் விரைத்துப்போகிறது. இதனால் சீரான ரத்த ஓட்டம் தடைபடுகிறது, இருதயம் கடுமையாக வேலை செய்தால் மட்டுமே ரத்த ஓட்டம் சீராகும் என்று தெரியவந்துளளது. இப்படி இரத்தநாளங்கள் விரைத்துப்போவது அதிகமானால் மாரடைப்பு வர அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இரத்தநாளங்கள் விரைத்துப்போவதினால் சாதாரணமாக ஓடுவது, படிக்கட்டுகளில் ஏறுவது மாதிரியான தினசரி செய்யும் செயல்கள் கூட நமக்கு மிகுந்த சிரமத்தை, அதிக மூச்சிறைப்பை ஏற்படுத்தும். புகைப்பழக்கம் இருக்கும் ஆண்களை விட பெண்களுக்கு 25 சதவீதம் கூடுதலாக இருதய நோய் ஆபத்து இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

புகையிலையில் நிக்கோடின் என்னும் நச்சுப்பொருள் இருப்பது தெரியும். அது காற்றில் கலந்துவிடுகிறது என்பதும் தெரியும். அதனால் அருகில் இருப்பவர்கள் கூட அதிக பாடதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பதும் தெரியும். தெரியாத மற்றொன்று, நிக்கோடின் காற்றில் கலந்தது போக மீதமுள்ள நிக்கோடின் புகையானது வீட்டின் சுவர்கள், தரை, தரைவிரிப்புகள், மேஜை, நாற்காலி போன்ற பொருட்களில் படிந்து விடுகின்றன. அப்படிப் படியும் நிக்கோடின் புகை நாட்கள், வாரங்கள், மாதக் கணக்கில் படிந்த பொருள்களின் மீதே தங்கிவிடுகின்றன. இதனால் பாதிப்பு பெரியவர்களை விட குழந்தைகளுக்குத்தான். இப்படி படியும் நிக்கோடின் காற்றில் இருக்கும் நைட்ரஸ் அமிலத்துடன் (Nitrous acid) கலப்பதால். கார்சினோஜென் (Carcinogen) எனும் நச்சுப்பொருளாக மாறுகிறது. இது புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை ஆகும். ஒரு சிகரெட்டில் சுமார் 100 நேனோகிராம் அளவு கார்சினோஜென் நச்சுப்பொருள் இருக்கிறது.

இதுக்கு மேலயும் புகைப்பழக்கத்தை குறைக்கிறதும் (கொஞ்சம் கொஞ்சமாக) விடறதும், உங்க கையிலதான் இருக்கு.

இதனை உங்கள் (புகைப்பிடிக்கும்) நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாமே.

சென்னை புறநகர் இரயில்களில் பயணமா? ஜாக்கிரதை!

நாளுக்கு நாள் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே போகிறது, ஜனங்களும் பெருகுவதோடு மட்டுமில்லாமல் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் முக்கியமான இடங்கள் எங்கு நோக்கினும் கூட்டமே.

இதன் விளைவு திருடர்களுக்கு கொண்டாட்டமே. கடந்த 2ம் தேதி தாம்பரத்தில் இருந்து பீச் நோக்கி சென்ற இரயிலில், செல்போன் திருடர்கள் 3 பேர் சிக்கியுள்ளனர். தொண்டையார்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் மற்றும் ஆனந்தன் இருவரும், இரயிலில் தனியாக வந்து கொண்டிருந்த கணபதி என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி  செல்போனை பிடுங்கியுள்ளனர். பின்பு மற்ற ஆபரணங்களை கேட்டுள்ளனர், கணபதியிடம் வேறு ஏதும் இல்லாததால், அத்துடன் அவரை அடித்து கீழே தள்ளிவிட்டு தாமஸ் மௌன்ட் ரயில் நிலையத்தில் குதித்துள்ளனர். கணபதி போட்ட கூச்சலில்  ரயில் நிலையத்தின் நடைபாதையில் இருந்த மக்கள் சுற்றி வளைத்து இருவரையும் பிடித்துள்ளனர். இவர்களுடன் மூன்றாவதாக வந்த அண்ணாநகரை சேர்ந்த கார்த்திக் தப்பி ஒடிவிட்டான்.

மக்கள் இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர், இருவரையும் விசாரித்த பின்பு தப்பி ஒடிய கார்த்திகையும் போலீசார் கைது செய்தனர். இது போன்ற திருட்டுக்கள் தினமும் நடப்பதாகவும், மக்கள் எங்கு தனியாக இருக்கின்றனர் என்று பார்த்து வழிப்பறி செய்வதாகவும், கூட்டமான நேரத்தில் பர்ஸ், செல்போன் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொருட்கள் திருடப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாம் வெளியில் செல்லும் போது, கவனமாக இருக்க வேண்டும். தனியாக இருப்பதை தவிர்ப்பது நல்லது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, எனவே மக்கள் எப்போதும் தங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content