
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் அரபிக்கடலின் மீது மும்பை மாநகரம் அமைக்க உள்ளது.
மும்பை தீவையும், ராய்காட் மாவட்ட தரை பகுதியையும் இணைக்கும் பாலமாகவும், 8 வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மகாராஷ்டிரா முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் வழங்கியுள்ளார். மும்பை பெருநகர மண்டல வளர்ச்சி ஆணையம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாட்டில் கடலையும், தரைப் பகுதியையும் இணைக்கும் இரண்டாவது மிகப்பெரிய பாலமாக இது இருக்கும்.
மும்பை டிரான்ஸ் ஹார்பர்ஸ் லிங்க் (எம்.டி.எச்.எல்.) என பெயரிப்பட்ட இந்த பாலம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் கட்டப்படவுள்ளது. ஏற்கனவே மிகப் பெரிய பாலம் மும்பையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

0 comments:
Post a Comment