தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

நோக்கியாவின் டூயல் சிம் போன்கள்

எத்தனை புதிய செல்போன்கள் வந்தாலும், இந்தியாவில் நோக்கியாவிற்கு ஒரு தனி இடம் இருக்கிறது, டூயல் சிம் போன்கள் வந்த பிறகு நோக்கியாவின் வளர்ச்சி சற்று குறைந்தது, வசதிகள் மற்ற போன்களை போல இல்லாவிட்டாலும் நோக்கியா என்ற பெயரில் உள்ள நம்பிக்கையில் டூயல் சிம் போன்களை தயாரித்து வழங்குகிறது அதன் விபரங்கள் கீழே:

Nokia Asha 200 :
 

போன் அளவு (Size): 115.4 x 61.1 x 14 mm
எடை (Weight): 105 g
திரை அளவு (Screen Size): 320 x 240 pixels, 2.4 inches
தொடுதிரை (Touch): No
3.5 mm ஜாக்: Yes
 ஞாபக அட்டை/துளை (Memory Card/Slot):  up to 32GB/microSD
தொடர்பு எண்கள் (Phonebook): Yes
உள் அளவு (Internal Memory): 10 MB, 64 MB ROM, 32 MB RAM
திறக்கற்றை (Bluetooth): Yes, v2.1
புகைப்படக்கருவி (Camera): 2 MP, 1600x1200 pixels
 மின்கலம்  (Battery): 1430 mAh, 7 h talk time
யு எஸ் பி (USB): microUSB v2.0
ஜி பி ஆர் எஸ் (GPRS): Class 12 (4+1/3+2/2+3/1+4 slots), 32 - 48 kbps
சேணொலி (Wireless LAN): No
விலை (Price around):  Rs. 4,240


Nokia C1-00:

போன் அளவு (Size): 107.1 x 45 x 15 mm
எடை (Weight): 72.9 g
திரை அளவு (Screen Size): 128 x 160 pixels, 1.8 inches
தொடுதிரை (Touch): No
3.5 mm ஜாக்: Yes
 ஞாபக அட்டை/துளை (Memory Card/Slot):  No
தொடர்பு எண்கள் (Phonebook): Yes, 500
திறக்கற்றை (Bluetooth): No
புகைப்படக்கருவி (Camera): No
 மின்கலம்  (Battery): 1020 (BL-5C), 13 h talk time
யு எஸ் பி (USB): No
ஜி பி ஆர் எஸ் (GPRS): No
சேணொலி (Wireless LAN): No
விலை (Price around): Rs. 1,400


Nokia 101:

போன் அளவு (Size): 110 x 45.5 x 14.9 mm
எடை (Weight): 71 g
திரை அளவு (Screen Size): 128 x 160 pixels, 1.8 inches
தொடுதிரை (Touch): No
3.5 mm ஜாக்: Yes
 ஞாபக அட்டை/துளை (Memory Card/Slot):   up to 16GB/microSD
தொடர்பு எண்கள் (Phonebook): Yes, 500
திறக்கற்றை (Bluetooth): No
புகைப்படக்கருவி (Camera): No
 மின்கலம்  (Battery): 1020 (BL-5C), 8 h talk time
யு எஸ் பி (USB): No
ஜி பி ஆர் எஸ் (GPRS): No
சேணொலி (Wireless LAN): No
விலை (Price around): Rs. 1,400


Nokia X1-01:

போன் அளவு (Size): 112.2 x 47.3 x 16 mm
எடை (Weight): 91.1 g
திரை அளவு (Screen Size): 128 x 160 pixels, 1.8 inches
தொடுதிரை (Touch): No
3.5 mm ஜாக்: Yes
 ஞாபக அட்டை/துளை (Memory Card/Slot):   up to 16GB/microSD
தொடர்பு எண்கள் (Phonebook): Yes, 500
திறக்கற்றை (Bluetooth): No
புகைப்படக்கருவி (Camera): No
 மின்கலம்  (Battery): 1320 mAh (BL-5J), 13 h talk time
யு எஸ் பி (USB): No
ஜி பி ஆர் எஸ் (GPRS): No
சேணொலி (Wireless LAN): No
விலை (Price around): Rs. 1,800


Nokia C2-00:

போன் அளவு (Size): 108 x 45 x 14.7 mm
எடை (Weight): 74.1 g
திரை அளவு (Screen Size): 128 x 160 pixels, 1.8 inches
தொடுதிரை (Touch): No
3.5 mm ஜாக்: Yes
 ஞாபக அட்டை/துளை (Memory Card/Slot):   up to 32GB/microSD
தொடர்பு எண்கள் (Phonebook): Yes, 1000
உள் அளவு (Internal Memory): 64 MB ROM, 16 MB RAM
திறக்கற்றை (Bluetooth): Yes, v2.1
புகைப்படக்கருவி (Camera): VGA, 640x480 pixels
 மின்கலம்  (Battery): Li-Ion 1020 (BL-5C),  5 h 40 min talk time
யு எஸ் பி (USB): Yes, microUSB
ஜி பி ஆர் எஸ் (GPRS): Class 12 (4+1/3+2/2+3/1+4 slots), 32 - 48 kbps
சேணொலி (Wireless LAN): No
விலை (Price around): Rs. 2,500


Nokia X2-02:

போன் அளவு (Size): 113 x 50 x 15 mm
எடை (Weight): 71 g
திரை அளவு (Screen Size): 240 x 320 pixels, 2.2 inches
தொடுதிரை (Touch): No
3.5 mm ஜாக்: Yes
 ஞாபக அட்டை/துளை (Memory Card/Slot):   up to 32GB/microSD
தொடர்பு எண்கள் (Phonebook): Yes
உள் அளவு (Internal Memory): 10 MB, 64 MB ROM, 32 MB RAM
திறக்கற்றை (Bluetooth): Yes, v2.1
புகைப்படக்கருவி (Camera): 2 MP, 1600x1200 pixels
 மின்கலம்  (Battery): 1020mAh (BL-5C),  9 h 50 min talk time
யு எஸ் பி (USB): Yes, microUSB
ஜி பி ஆர் எஸ் (GPRS): Class 12 (4+1/3+2/2+3/1+4 slots), 32 - 48 kbps
சேணொலி (Wireless LAN): No
விலை (Price around): Rs. 3,500


Nokia C2-03 and Nokia C2-06:

C2-03

C2-06

போன் அளவு (Size): 103 x 51.4 x 17 mm
எடை (Weight): 115 g
திரை அளவு (Screen Size): 240 x 320 pixels, 2.6 inches 
தொடுதிரை (Touch): Yes
3.5 mm ஜாக்: Yes
 ஞாபக அட்டை/துளை (Memory Card/Slot):   up to 32GB/microSD
தொடர்பு எண்கள் (Phonebook): Yes, 1000
உள் அளவு (Internal Memory): 10 MB
திறக்கற்றை (Bluetooth): Yes, v2.1
புகைப்படக்கருவி (Camera): 2 MP, 1600x1200 pixels
 மின்கலம்  (Battery): 1020mAh (BL-5C),  5 h talk time
யு எஸ் பி (USB): Yes, microUSB
ஜி பி ஆர் எஸ் (GPRS): Class 12 (4+1/3+2/2+3/1+4 slots), 32 - 48 kbps
சேணொலி (Wireless LAN): No
விலை (Price around):
                Nokia C2-03  – Rs.4,300
                Nokia C2-06  – Rs.4,750
இரண்டு போன்களுக்கும் ஒரு சில வேறுபாடுகள்தான், வண்ணங்களிலும் சிறிது வேறுபாடு உள்ளது.





செவ்வாய் கிரகம் உயிரினம் வாழ தகுதியற்றது -- நாசா


அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அங்கு வெட்டி எடுத்து வரப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன. எனவே, அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என கருதினர்.    
 
அதை தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மாதிரிகளையும், செயற்கைகோள் அனுப்பிய போட்டோக்களையும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டனர்.  
 
3 வருட ஆய்வுக்கு பிறகு தற்போது உயிரினங்கள் வாழ செவ்வாய் கிரகம் தகுதியற்றது என கண்டறிந்துள்ளனர். ஏனெனில், அங்கு 60 கோடி ஆண்டுகளாக கடும் வறட்சி சிலவுகிறது. எனவே, அங்கு உயிர் வாழ போதிய அளவு தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை.
 
செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் ஐஸ்கட்டிகள் படர்ந்துள்ளன. அதனால்தான் அங்கு தண்ணீர் இருப்பதாக கருதப்பட்டது. அவை தவிர மற்ற பகுதிகளில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே, அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை மற்றும் தகுதி இல்லை என தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளது. இந்த தகவல் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய வடிவ‌ டேப்லட் -சோனி அறிமுகம்!


புதிய வடிவ‌ டேப்லட்டை இந்தியாவில் அறிமுகம் செய்த ச்!

எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக திகழும் சோனி, தனது புதிய வடிவ டேப்லட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் டேப்லட் பி மற்றும் எஸ் என இரண்டு வகையான டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் படங்களுடன்

டேப்லட் பி - விலை ரூ.36990/-




டேப்லட் எஸ் - விலை ரூ.29990/-





இந்த வருட‌ டாப் 5 ஸ்மார்ட்போன்ஸ்!!


இந்த வருடத்தில் வெளியான ஸ்மார்ட்போன்களின் வச‌திகள் மற்றும் பிரபலம் அடிப்படையில் வரிசை படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் விலை மற்றும் படங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (ரூ 20000 கிழ் உள்ள போன்கள் மட்டும்).

BlackBerry Curve 9360 -- Rs 19,250





LG Optimus Black ---Rs 18,990







Sony Ericsson Xperia Neo V ---Rs 17,500



Nokia 701---Rs 18,450

 Motorola Defy Plus MB526 ---Rs 16,900


நம் சமுதாயம்: சமுதாய அக்கறை உள்ளவரா நீங்கள்! உங்கள் குரல் ஒலிக்க!



நம் சமுதாயம் - இந்த பகுதி சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்தவே, எந்த பிரச்சனையாக இருந்தாலும் இந்த வாயிலின் வழியாக தெரியப்படுத்தலாம். இதன் மூலம் உங்களுடைய எண்ணங்கள், கேள்விகள் மற்றும் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இது வெறும் வெளிப்படுத்தும் இடம் மட்டும் அல்ல, அதற்கான தீர்வு, சரி செய்யும் வழிமுறைகள், சரியான இடத்திற்கு பிரச்சனையை எடுத்துச் செல்லும் வழிகள் என எதுவாக இருந்தாலும் விவாதிக்கலாம். இது ஒரு தொடக்கமே, சிறு துளியாக நாங்கள் தொடங்குகிறோம் அதை வெள்ளமாக மாற்ற வேண்டியது நீங்கள்தான்.

2 ஜி ஊழல், மின் வெட்டு, விலைவாசி உயர்வு, குண்டும் குழியுமான‌ சாலை எனச் சமுதாயப் பிரச்சனை எதுவாயினும், கிராம‌மோ (அ) நகரமோ உங்கள் பிரச்சனையோ, பொதுப்பிரச்சனையோ (அ) அரசாங்கத்தில் சந்திக்க நேரிடும் இடர்பாடுகளோ எதுவாயினும், அதனை ஒரு கட்டுரையாக (அ) ஒரு தொகுப்பாக,  ஆங்கிலத்திலோ அ தமிழிலோ, புகைப்படத்துடனோ தட்டச்சு செய்து நம் சமுதாயம் என்ற தலைப்பில் எங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

சமுதாய பிரச்சனைகளுக்காக ஒன்று பட்டு குரல் கொடுப்போம் 


தமிழ் டைடிங்ஸின் ஆசிரியரின் அனுமதிக்கு பிறகு உடனே இந்த வலைப்பூவில் உங்கள் பெயருடன் பிரசுரிக்க (அ) வெளியிடப்படும் . (பிரச்சனைகளை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பினால் அதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.)

மின்னஞ்சல் முகவரி:  tamiltidings@gmail.com

எஸ்.எம்.எஸ் தொல்லை தரும் பொது நிறுவனங்கள்!!

ஒரு காலத்தில் மக்கள் தகவல் பரிமாற்றத்திற்காக கடிதம் மற்றும் தந்தி என்றழைக்கப்பட்ட விரைவு குறுந்தகவல் போன்றவற்றை பயன்படுத்தினர். பிற்காலத்தில் தொலைபேசி மற்றும் செல்போன்களின் வரவால் கடிதம், தந்தி மதிப்பிழந்து போனது.

தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட தொலைபேசி, தற்போது விளம்பரச் சேவை என்கிற பெயரில் தொல்லை தர ஆரம்பித்துள்ளன இந்த செல்போன் நிறுவனம் மற்றும் பொது நிறுவனங்கள்.

பொது நிறுவனங்கள் விளம்பரச் சேவைக்காக ஒரு குருந்தகவல் ஒன்றை ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து அனைத்து செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்புகிறது. இது போன்ற பலதரப்பட்ட பொது  நிறுவனங்களின் குருந்தகவல்களால், வேலையில் அல்லது கல்லூரியில் இருக்கும் நமக்கு, மிகவும் தொல்லையாக அமைகின்றது.

இதை தவிர்க்கத்தான் இந்தியா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையும் சமிபத்தில் ஒரு கட்டுப்பாட்டை செல்போன் நிறுவனங்களுக்கு விதித்தது. அதன்படி ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் அதன் பயன்பாட்டாளர்களுக்கும் நாளொன்றுக்கு 100 குருந்தகவல்கள் அணுமதிக்க வேண்டும்.

இதையும் மீறி சில நிறுவனங்கள் இணையத்திலிருந்து குருந்தகவல்களை அணுப்ப ஆரம்பித்துவிட்டனர். இதுபற்றி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், இதனை கட்டுபடுத்த வேண்டியது செல்போன் நிறுவனங்களே.

இணையத்திலிருந்து அனுப்பப்படும் குறுந்தக‌வல்களை இடைமறித்து பயன்பாட்டாளரின் நலனை காப்பது அந்நிறுவனங்களின் கடமை என்றார் அவர். செல்போன் நிறுவனங்கள் கண்கானிக்குமா?

ரூ. 1,200.க்கு உலகின் விலை மலிவான கையடக்க கணினி இந்தியாவில்!!

உலகின் விலை மலிவான கையடக்க கணினி (tablet PC), இந்தியாவில் தற்போது தகவல் தொழில்நுட்பம் மூலம் கல்வியை விரிவாக்க, மத்திய அரசு மாணவர்களுக்கு ரூ. 1,200.க்கு அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் வழங்கவிருக்கிறது.
இந்த கணினிக்கு ஆகாஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனை அறிமுகப் படுத்தி பேசிய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், இதற்கான விலை வரி மற்றும் போக்குவரத்து செலவையும் சேர்த்து மொத்தம் ரூ. 2276 ஆகும். ஆனால் மத்திய அரசு இதனை மாணிய விலையில் மாணவர்களுக்கு ரூ. 1200க்கு வழங்கவிருக்கிறது.

இந்த கையடக்க கணினி சிம் கார்டு வசதியுடன் இயங்கவல்லது. இதன் பேட்டரி சுமார் 3 1/2 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் தன்மை கொண்டது.

டேட்டவைன்டு என்கிற நிறுவனம் இதனை தயாரித்து வழங்கயுள்ளது. முதலில் 1 லட்சம் கணினி ஆர்டர் தரப்பட்டுள்ளது என்றும் பின்னர் மாணவர்களின் வரவேர்ப்பை பொருத்து 10 லட்சம் வரை ஆர்டர் தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதில் வேடிக்கை என்னவெனில் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசமாகவே வழங்கப்படுகிறது.

ஆரக்கிள் ஆன்லைன் டெஸ்ட் எழுதிய 13 வயது சிறுவன்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சாப்ட்வேர் நிறுவனமான "ஆரக்கிள்' நிறுவனம் ஆன்லைன் மூலம் நடத்திய தொழில்நுட்ப போட்டித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் திருநெல்வேலியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் விக்னேஷ்வரன்.  

திருநெல்வேலி வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - ரேவதி தம்பதியின் மகனான இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் 8-வது வகுப்பு படித்து வருகிறார். தனது இந்தச் சாதனை குறித்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  பாளையங்கோட்டையிலுள்ள தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் "சி' லாங்வேஜ் படித்து வந்தபோது கம்ப்யூட்டரில் எனக்குள்ள ஆர்வத்தைப் பார்த்த பயிற்சியாளர் எஸ்.சுந்தரபாண்டியன், ஆரக்கிள் நிறுவன தேர்வுக்கு உரிய பயிற்சியை அளித்தார். பி.இ., பிடெக் போன்ற உயர் படிப்புகளை முடித்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மேலும் பயிற்சிக்காக மைக்ரோசாப்ட், சிஸ்கோ மற்றும் ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் ஆன்லைனில் நடத்தும் தொழில்நுட்பத் தேர்வை எழுதி அவர்களது திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள்.  இதற்காக அந்த நிறுவனங்கள் சான்றிதழ் அளிப்பதுடன் அவர்களை தங்கள் நிறுவனங்களில் பணியிலும் அமர்த்திக்கொள்ள வாய்ப்புள்ளது.  இந்த வகையில் ஆரக்கிள் நிறுவனம் நடத்திய ஓசிஏ-11ஜி தேர்வை எழுத என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். இத்தேர்வை கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி எழுதினேன். நானே எதிர்பாராத வகையில் இத்தேர்வில் 83 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். இவ்வளவு சிறிய வயதில் இத்தேர்தவை எழுதி வெற்றி பெற்றது நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும் என எனது பயிற்சியாளர் தெரிவித்தார்.  

 இதற்கு முன் மிகக் குறைந்த வயதில் இத்தேர்வை எழுதி வெற்றி பெற்றவர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த 14 வயதான ராகில் என்பவர் ஆவார். எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் பொறியாளர் ஆவதே எனது லட்சியம். இத்தேர்வில் வெற்றி பெற்றதால் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு நேரடியாக பி.இ., பி.டெக் வகுப்பில் சேரலாம் என்றார் அவர்.  பேட்டியின்போது உடனிருந்த பயிற்சியாளர் சுந்தரபாண்டியன் கூறுகையில், சாதாரணமாக இத்தேர்வில் வெற்றி பெற முடியாது. விக்னேஷ்வரனின் தீவிர முயற்சியாலும், அவரது பெற்றோர் கொடுத்த ஊக்கத்தாலும் இந்த வெற்றியை அடைந்துள்ளார் என்றார்.

பூமி நாளிதழ்

21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்



1.  குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மது அருந்துவதைக் குறைப்பதற்கு உங்களுடைய சொந்தக்காரணங்கள் யாவை? முதலில் உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். மது அருந்துவதை விட்டொழிக்க வேண்டும் என்ற உங்கள் இலக்கை அடைய அது ஒரு வழிகாட்டியாக அமையும். உங்கள் குறிக்கோள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது மது அருந்த வேண்டியிருக்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் இருத்தலாகவோ, மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுதலாகவோ, அல்லது மது அருந்துவதை ஒரேயடியாக விட்டொழிப்பதாகவோ இருக்கலாம். ஆனால் உங்களுக்காக மட்டுமே நீங்கள் மது அருந்துவதை விடமுயற்சி செய்கிறீர்கள் என்பதில் மட்டும் உறுதியாக நில்லுங்கள். இல்லையெனில் நீங்கள் உங்கள் முயற்சியில் வெல்வது கடினம்.

2.  பிறகு, வாரத்தில் ஏதேனும் ஒருநாளை மது அருந்துவதைத் தவிர்க்கும் நாளாகத் தேர்ந்தெடுங்கள் அன்று வேலை நாளாக இல்லாமல் நீங்கள் ஓய்வெடுக்கும் நாளாக இருந்தால்தான் மது அருந்துவதை தவிர்க்க சுலபமாக இருக்கும்.

3.  நம்பிக்கை இழக்காதீர்கள் / இக்கட்டுரையில் எந்த இடத்திலும் மது அருந்துவதை விட்டுவிடுவது சுலபமானது என்று கூறப்படவில்லை. உங்கள் இலக்குகளையும், அவ்விலக்குகளை நீங்கள் தேர்ந்தெடுக்க அடிப்படையானக் காரணங்களையும் மனதில் எப்போதும் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை, ஒரு முறை நீங்கள் தவறி, அதிகமாக மது அருந்திவிட்டாலும், அச்செயல் உங்கள் குறிக்கோளை தடுக்க விடாதீர்கள். மறு நாளிலிருந்து மீண்டும் உங்கள் இலக்கை அடையும் வழியில் தொடர்ந்து செல்லுங்கள். தோல்வி அடையும் போதெல்லாம் ராபர்ட் எப். கென்னடி, “யாரெல்லாம் பெரிய அளவில் தோல்வி அடைகிறார்களோ அவர்கள் பெரிய அளவில் சாதனை புரிவார்கள்” என்று கூறியதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையிலேயே குடிப்பழக்கத்தை நிறுத்த அல்லது குறைக்க விரும்பினால் உங்களால் உறுதியாக வெற்றியடைய முடியும்.

4.  மதுப்பழக்கத்தைக் கைவிட நீங்கள் மேற்கொண்டுள்ள திட்டங்களை உங்கள் குடும்ப அங்கத்தினர்களோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வெற்றியை அடைய அவர்களும் உதவட்டும்.

5.  மதுப்பழக்கத்தை நிறுத்தவேண்டும் என்ற உங்கள் குறிக்கோளை அடைய உங்கள் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களின் ஆதரவினை நாடுங்கள். உங்கள் குடிப்பழக்கத்திலிருந்து நீங்கள் மீண்டுவந்தால் மகிழக்கூடிய அவர்கள், தம் விடுமுறை நாட்களில் உங்களுடன் கூடவே இருந்து உதவுவார்கள். உங்களுடைய கவலைகளையும் எண்ணங்களையும் நீங்கள் அவர்களோடு பகிர்ந்து கொள்வது நலம்.

6.  தடை செய்யுங்கள் / வாரத்தில் ஒரு நாள் மது அருந்துவதை நிறுத்துங்கள். வாரத்தில் ஒருநாள் மது அருந்துவதை நிறுத்துவது உங்களால் முடியும்போது மது அருந்துவதை இரண்டு நாட்களுக்கு நிறுத்த முயற்சி செய்யுங்கள். அதில் வெற்றியடைந்தபின் மூன்று நாட்களாகவும், பின் வாரம் முழுவதையும் மது அருந்தா நாட்களாக மாற்றுங்கள். உங்களது பெரிய இலக்கை, சிறு சிறு இலக்குகளாகப் பிரித்து அடைவது எந்த விதத்திலும் குறைவானதல்ல. உண்மையில் அது உங்கள் குறிக்கோளை நீங்கள் விரைவில் அடையவும், அதில் நிலைத்து நிற்கவும் உதவிகரமாக இருக்கும்.

7.  எப்போதெல்லாம், எந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் நீங்கள் மது அருந்த வேண்டியிருக்கும் என்பதை அறிந்து, பின் அதனைத் தவிர்க்கும் திட்டத்தை உருவாக்குங்கள். வீட்டிலோ அல்லது விருந்துகளிலோ மதுவுக்கு பதிலாக வேறு ஏதாவது பானத்தைப் பருகும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். பொதுவாக நீங்கள் மது அருந்தக்கூடிய நேரத்தில், உங்கள் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகமூட்டும் உரமூட்டும் பொழுது போக்குகளை (உடற்பயிற்சி, படித்தல், ஒவியம்.................. போன்றன) மேற்கொள்ளுங்கள்.

8.  மதுவின் மீது ஏற்படும் ஈர்ப்பினைக் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் எத்தகைய சூழலில் உங்களுக்கு மது அருந்தும் ஆவல் ஏற்படுகிறது என்று கண்டு பிடித்து அச்சூழலைத் தவிர்த்து விடுங்கள். தனியாக இருக்கும்போதோ, விருந்துகளில் பங்குபெறும்போதோ, மதுவருந்தும் ஆவல் ஏற்படுமெனில் அத்தகைய சூழலைத் தவிர்க்கத் திட்டமிடுங்கள். மதுவிற்குப் பதிலாக நல்ல சுவையுள்ள பழரசங்களைப் பருகுங்கள்.

9.  உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள். மது அருந்துவதற்காக நீங்கள் செலவு செய்து வந்த பணத்தை குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் வெளியில் சென்று உண்பதற்காகவோ, திரைப்படம் பார்ப்பதற்காகவோ, விளையாடுவதற்காகவோ செலவு செய்யுங்கள்.

10.       மது அருந்தும் பழக்கக்தைக் குறைப்பது உங்களுக்குக் கடினமாக இருந்தால் கூடுதல் உதவியையும் புதிய திட்டங்களையும் நாடுங்கள் : http://www.stopdrinkingadvice.org/guide/ என்ற இணையதளத்தின் உதவியைப் பெறுங்கள். அல்லது துறைசார்ந்த வல்லுநரை அணுகுங்கள்.

மது அருந்துபவர்களுக்கு எச்சரிக்கை!!!


மது அருந்துவது உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஆனாலும் மது மிகவும் அதிகமாக பாதிப்பது ஈரலை. ஏனென்றால் நாம் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது அது ஈரலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி நமக்கு நோய்களை ஏற்படுத்தும்.
ஈரல் பதிப்பு மூன்று கட்டங்களின் ஊடாக நடைபெறுகிறது.

ஆரம்பத்தில் கொழுப்புப் படித்தல் (fatty change) என்ற பாதிப்பும் பிறகு ஈரல் அழர்ச்சி (hepatitis)என்ற பாதிப்பும் இறுதியாக சிரோசிஸ் (cirrhosis)என்ற வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது

இங்கே முதல் இரண்டும் அதாவது கொழுப்புப் படித்தல் மற்றும் ஈரல் அழர்ச்சி என்பவை இருக்கும் நிலையில் ஒருவர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டால் அவரின் ஈரல் பழைய நிலையை அடைந்து சுகமாகலாம். ஆனால் அது சிரோசிஸ் என்ற நிலையை அடைந்தால் ஈரல் பழைய நிலைக்குத் திரும்புவது சாத்தியமற்றது.

சிரோசிஸ் இருப்பவருக்கு வாழ் நாள் என்னத்தொடங்கி விட்டது என்றே அர்த்தம் , ஆனாலும் அவர் எத்தனை காலங்கள் அந்த நோயிடுன் உயிர் வாழ்வது என்பது அவர் குடியை விட்டாரா என்பதிலேயே தங்கி உள்ளது.


அதாவது சிரோசிஸ் ஏற்பட்ட ஈரல் மேலும் பாதிக்கப்பட்டு முழுவதுமாக செயற்படாமல் போய் மரணம் ஏற்படுவதை பிற்போட மருந்துகளை விட , அந்த நபர் குடிப்பழக்கத்தை விடுவதே முக்கியமானது.

 இந்த ஈரல் பாதிப்பு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே ஏற்படலாம். சில பேரில் ஈரல் முற்று முழுதாக செயல் இழக்கும் வரை மதுவினால் ஏற்படும் பாதிப்பு தெரியாமலேயே ஏற்படலாம்.இதனால் தொடர்ச்சியாக அதிகமாக மது அருந்துபவர்களில் சட்டென மரணங்கள் ஏற்படலாம்.

நீங்கள் மது அருந்துபவர்கள் என்றால் உங்களில் கீழே உள்ள ஏதாவது அறிகுறிகள் உள்ளதா என்பதை அவதானித்துக் கொள்ளுங்கள்...


  1. வயிற்று வலி
  2. உமிழ் நீர் குறைந்து உலர்ந்த வாய்
  3. அதிகமான தாகம்
  4. தொடர்ச்சியான காய்ச்சல்
  5. உடல் பலவீனம்
  6. வயிற்று வீக்கம்
  7. கண் மஞ்சள் நிறமடைதல்
  8. பசி குறைதல்
  9. வாந்தி வருகின்ற உணர்வு
  10. உடல்  நிறை திடீரென அதிகரித்தல்
  11. கருப்பு நிறத்தில் மலம் கழித்தல்
  12. ரத்த வாந்தி எடுத்தல்
  13. ஆண்களில் மார்பு பெரிதாகுதல்
  14. சிந்திக்கும் ஆற்றல் குறைதல்
  15. உள்ளங்கையில் சிவப்பு நிறமாக காணப்படுதல்

மது அருந்துபவர்களே இதில் ஏதாவது அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.அதற்கு முன்பு மது அருந்துவதை விட்டு விடுங்கள்.

மது அருந்துவதை 21 நாட்களில் நிறுத்தலாம் < இங்கே சொடுக்கவும் (Click Here)

ஈ.சி ரீசார்ஜில் அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள்


வாடிக்கையாளர்கள் செய்யும், 'ரீசார்ஜ்' தொகைக்கு அதிகமாக, மொபைல்போன் சில்லரை வியாபாரிகள், கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மொபைல்போன் வாடிக்கையாளர்களில், பெரும்பாலோர், பி.எஸ்.என்.எல்., மற்றும் தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்களின், 'ப்ரீபெய்டு' சேவையை பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக, 'ஈசி டாப்-அப்' என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வசதியை, மொபைல்போன் சேவை நிறுவனங்கள், தங்களின் சில்லரை வியாபாரிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தன. இதற்காக, சில்லரை வியாபாரிகளுக்கு, அந்தந்த சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்கியது.

இந்நிலையில், சில்லரை வியாபாரிகளுக்கு வழங்கிய கமிஷன் தொகை, திடீரென குறைக்கப்பட்டதால், சில மாதங்களுக்கு முன், மொபைல்போன் சில்லரை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேவை நிறுவனங்களால் குறைக்கப்பட்ட, 'கமிஷன்' தொகை ஈடுகட்ட, மொபைல்போன், 'ரீசார்ஜ்'க்கான கட்டணத்திலிருந்து கூடுதலாக, 1 ரூபாயிலிருந்து, 5 ரூபாய் வரை, வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கின்றனர் என புகார் எழுந்துள்ளது.

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content