தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

விலை போகும் ஆண்கள் ! விடையில்லா பெண்கள்!


ஆணுக்கு பெண் இளைப்பில்லை; ஆணுக்கு பெண் சம‌நிகர் சமானம், என்பதெல்லாம் வெறும் வாய்கூற்றாகவே போய்விட்டது இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட. திருமணம் என்னும் வியாபார ச்ந்தையில், வரதட்சனை என்னும் விலை பேசிதான் மணமகனுக்கு திருமணம் செய்யப்படுகிறது.

இந்த வரதட்சனை கொடுமை என்னும் பெண் கொடுமை தமிழகத்திலும், இந்தியாவின் இதர மாநிலங்களிலும் ஒழிந்தபாடில்லை. கடந்த மாதம் நாளிதழ் ஒன்றில் வெளியான் தலைப்பு செய்தியே இதற்கு நற்சான்று.

செய்தி யாவெனில், வரதட்சனை தரமறுத்ததால் மணப்பெண் உயிருடன் எரித்துக்கொலை! நாட்டில் கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணிடம் மட்டுமே வரதட்சனை கேட்கப்பட்டதா என்றால் இல்லை, இது அனைத்து தரப்பு மக்களிடமும், ஜாதி, மதம், கல்வி, வசதி, வேலைவாய்ப்பு என்ற பாகுப்பாட்டிற்கு ஏற்ப வரதட்சனை பெறப்படுகிறது.

வரதட்சனை என்பது திருமணத்துடன் முடிந்துவிடுவதில்லை அழைப்பு, பிறப்பு  என அனைத்து விழாக்களிலும் தொடர்கிறது. இத்தனை வரதட்சனை கொடுத்தும் மகிழ்ச்சியும், நல்வாழ்வும் என்பது மணப்பெண்ணிற்கு உறுதியில்லை.


இதன் விளைவுதான், நாட்டில் பெண் பிள்ளையை பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மட்டும் தமிழ் நாட்டில் வரதட்சனை கொடுமையின் பெயரில் 8931 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புகார் தரமால் புழுங்குவோர் கணக்கில் அடங்கா.

சென்னையில் கடந்த் ஞாயிறுயன்று வெளியான மண்ப்பெண் தேவை விளம்பரத்தில், வயது, ஜாதி, மதம் முக்கியமில்லை எனக் குறிப்பிட்டிருந்தோர் பலர், வெறும் இருவரே வரதட்சனை தேவையில்லை  எனக் குறிப்பிட்டிருந்தனர். சென்னை போன்ற பெரு நகரங்களிலே இது ஒழியவில்லையெனில் கிராமங்களை பற்றி கூறத்தேவையில்லை. ஆகையால் வியாபார திருமணத்திற்கு  விலைபோகும் ஆண்களும், பெண் கொடுமைகளுக்கு ஆளாகும் ஆண்களும் ஒழிய வேண்டும்.


மூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்


ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித சமுதாயம் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை வாய்மொழித் தரவுகளாக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மனித குலத்திற்கு கடத்தி இருக்கிறது.
வேளாண்மை சார்ந்த நாட்டார் தொழில்நுட்பங்கள் பல நீண்ட நெடிய அனுபவத்தின் விளைவாக மனித குலத்திற்குக் கிடைத்தது.

இந்து சமுதாய மக்களின் சடங்கு சம்பிரதாயங்களுக்குள் ஒருவித அறிவியல் சார்ந்த அர்த்தம் இருக்கிறது என்பதைத் தன் அனுபவத்தின் வாயிலாக கவியரசர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி விளக்கினார்.

நாட்டார் நம்பிக்கைகள் சிலவற்றை மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவை வெறும் மூட நம்பிக்கைகள் என்று தோன்றும். ஆனால் அவை மனித குலம் வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் சாரம் என்ற சிந்தனையுடன் அணுகினால், அந்த நம்பிக்கைகளின் உள் அர்த்தம் நமக்குப் புரியும்.
நாட்டுப்புற நம்பிக்கைகளில் அறிவியல் சார்ந்த நம்பிக்கைகள் சிலவற்றை பற்றி மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

* தென்கோடியில் வெள்ளி தோன்றினால் அந்த ஆண்டு பஞ்சம் வரும் (நாள், நட்சத்திரங்களைப் பற்றிய நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகு, வானவியல் துறைசார்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய நம்பிக்கையாகும் இது.)
* கர்ப்பிணிப் பெண்கள் மலைஏறக் கூடாது. (கர்ப்பிணிப் பெண் மலை ஏறினால் அவளின் கருக் கலைந்து விடும் என்பதால் இந்த நம்பிக்கை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.)
* ஈர ஆடைகளை அணிந்து கொண்டு மங்கலமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. (ஈரமான ஆடைகளை அதிக நேரம் உடுத்திக் கொண்டிருப்பதால் உடம்பின் தட்ப வெப்ப நிலை சீர்குலையும். அதனால் பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.)
* விக்கலை நிறுத்த விக்கிக் கொண்டிருப்பவரிடம் அதிர்ச்சி தரும் பொய்த்தகவல்களைச் சொல்வார்கள்.(இது ஒரு விதமான அதிர்ச்சி வைத்தியமாகும்.)
* அன்னத்தை (சோற்றை) வீசி எறியக் கூடாது. (தண்ணீரையும், சோற்றையும் சிக்கனமாகவும், கவனமாகவும் பயன்படுத்த வேண்டும். உண்ணுங்கள், பருகுங்கள், வீண்விரயம் செய்யாதீர்கள்.’ என்றார் நபிகள் நாயகம். உணவுப்பஞ்சம் உலகின் பலபகுதியில் உள்ள நிலையில் ஆக்கிய சோற்றில் தான் உண்டது போக மீதியை ஏழைகளுக்குக் கொடுத்து உதவ வேண்டும், வீசி எறிந்து வீணாக்கக் கூடாது.)
* நட்சத்திரங்கள் எரிந்து பூமியில் விழுவதைப் பார்க்கக் கூடாது. (நட்சத்திரங்கள் எரியும்போது தோன்றும் ஒளியில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நட்சத்திரங்கள் எரிவதைப் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.)
* புதுப்பெண்ணை ஆடி மாதம் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்க மாட்டார்கள் ("ஆடிக்கு (மாதம்) அழைக்காத (விருந்துக்கு கூப்பிடாத) மாமியாரைத் தேடிப்பிடித்து அடி!" என்கிறது ஒரு சொலவம்.
ஆடிமாதம் கணவன் வீட்டில் இருந்து, கணவனுடன் இல்லற சுகத்தை அனுபவித்தால், அதன் மூலம் அப்பெண் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஆடி மாதம் பெண்கள் கருத்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதால் இத்தகைய நம்பிக்கையும், பழமொழியும் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.)
* உச்சி வெயில் நேரத்தில் எண்ணை தேய்த்துக் குளிக்கக் கூடாது (காலையில் அல்லது மாலையில் தான் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். மத்தியான உச்சிப் பொழுதில் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். மத்தியான உச்சிப் பொழுதில் எண்ணை தேய்த்துக் குளித்தால், சூரியனின் ஒளிக் கதிர்கள் உடம்பின் நரம்புகளைத் தாக்கும், அதனால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.
* ஈரத்துணியைப் பிழியாமல் கதவுகளின் மேல் போடக்கூடாது (ஈரத்துணியைப் பிழிந்து வெயிலில் காய வைத்தால்தான் துணியில் சுருக்கங்கள் ஏற்படாது.)
* மூஞ்சூரைக் கொன்றால் தலைவலி வரும். (மூஞ்சூர் என்பது எலி இனத்தைச் சேர்ந்த அரிய உயிர் இனம். இது பிள்ளையாரின் வாகனமாகவும் உள்ளது. ‘மூஞ்சூர்’ என்ற அரிய உயிர் இனம் அழியாமல் காக்கும் நல்லெண்ணத்தில்தான் இத்தகைய நம்பிக்கைகளை நம் முன்னோர்கள் உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்கள்.)
* கர்ப்பிணிப் பெண்கள் வெறும் வயிற்றுடன் தூங்கக் கூடாது (கர்ப்பிணிப் பெண்களைக் கிராமத்து மக்கள் ஈருயிர்க்காரி (இரண்டு உயிர் உள்ளவள். தாய்க்கு ஒரு உயிர், தாயின் வயிற்றில் வளரும் சேய்க்கு ஒரு உயிர்; ஆக ஈருயிர்) என்று சொல்வார்கள். தாய் பட்டினி கிடந்தால் தாய்க்கு வயிற்றுப்புண் (அல்சர்) போன்ற குடல் நோய் வரும். கருவில் இருக்கும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச் சத்துக் கிடைக்காமல் குழந்தை ‘சோணிக்’ குழந்தையாகப் பிறக்கும்.)
* வீட்டில் நூலாம் படை அதிகமானால், தரித்திரம் வரும் (சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த நம்பிக்கையாகும் இது. வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை இந்த நாட்டார் நம்பிக்கை வலியுறுத்துகின்றது.)
* படுத்துக் கொண்டு சாப்பிடவும் கூடாது; நீர் அருந்தவும் கூடாது (படுத்துக் கொண்டு சாப்பிட்டால், உணவுக்குழாயில் நாம் சாப்பிடும் உணவு அடைத்துக் கொள்ளும் அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.)
* சுடுகாட்டுப் பிணம் எரியும் புகையைச் சுவாசிக்கக் கூடாது. (அப்புகையில் அதிகப்படியான கார்பன் உள்ளது. எனவே அப்புகையைச் சுவாசிக்காமல் இருப்பது நல்லது. சுடுகாட்டுப் புகையைச் சுவாசிப்பதால் மனதில் ஏதேனும் கிலேசம் (பயம்) தோன்றவும் உளவியல் பூர்வமான வாய்ப்பு உள்ளது.)
* பகல் நேரத்தில் வயதுக்கு வந்த பெண்கள் வெட்ட வெளியில் மல்லாந்து படுத்து உறங்கக் கூடாது (வயதுக்கு வந்த கன்னிப் பெண்கள் பகல் நேரத்தில் மட்ட மல்லாக்கப் படுத்து உறங்குவதால், அவளை அறியாமல் அவள் உடுத்தி இருந்த மாராப்பு சேலை விலகிவிட வாய்ப்பு உள்ளது. பகலில், வெட்ட வெளியில் மாராப்புச் சேலை, விலகிய நிலையில் கவர்ச்சியைக் காட்டியபடி படுத்து உறங்கும் கன்னிப் பெண்களை, அவ்வழியே செல்லும் ஆண் பார்க்க நேர்ந்தால் அவனுக்கு பால் உணர்வு ஏற்பட்டு, விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது)
* விளக்கு தானாகவே கருகி அணைந்து விடக் கூடாது. (விளக்கில் எண்ணை இருக்கும் வரை, எண்ணை எரியும். எண்ணை தீர்ந்து விட்டால் விளக்கின் திரியே எரிய ஆரம்பித்துவிடும். திரியும் எரியும் மட்டும் எரிந்து பின் விளக்கு தானே அணைந்துவிடும். விளக்கை ஏற்றும் முன் தேவையான அளவு எண்ணை விளக்கில் இருக்கிறதா..? என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்ற கருத்தையே இந்த நம்பிக்கை வலியுறுத்துகிறது)
* வெறும் உரலை ஆட்டக் கூடாது. (வெறும் உரலை ஆட்டினால், உரல்குழி ஆழமாகும் உரலின் உட்புறம் உள்ள கல் கரையும் அதிகமான சத்தம் ஏற்படும்)
* சங்கிலிகளையும், வீட்டுக்கதவில் இருக்கும் இரும்பில் ஆளை நாராஸ்திகளையும் வீணே ஆட்டக்கூடாது (ஒலிசார்ந்த மாசு ஏற்படுவதை தவிர்க்கவே இந்த நம்பிக்கை படைக்கப்பட்டுள்ளது.)
* இடது கையால் கால் விரல்களைப் பிடித்தபடி சாப்பிடக் கூடாது (கால் நரம்புகளும், இடது கை நரம்புகளும் விரைப்பாக இருக்கும் போது சாப்பிடக் கூடாது.)
* உள்ளங்கையில் சோறுபடாமல் சாப்பிடுவது உறவுகளுக்கு (சொந்தக்காரர்களுக்கு) நல்லது. (உள்ளங்கையில் உள்ள அழுக்கு சாப்பாட்டுடன் வயிற்றினுள் செல்லாமல் இருக்கும். குறைவாகச் சாதத்தை அள்ளி மெதுவாக ரசித்துச் சாப்பிட்டால், உள்ளங்கையில் சாதம் படாது)
* மணப்பெண்ணுக்கு மாத விலக்கு ஏற்படும் நாளில் திருமணம் செய்யக் கூடாது. (இத்தனை நாள் உடல் உறவுக்காக காத்திருந்த புதுமாப்பிள்ளை, திருமணம் ஆன அன்று இரவும் உடல்சுகத்திற்கு ஏமாந்து விட கூடாது என்பதால் இந்த நம்பிக்கையைப் படைத்து உலவ விட்டிருக்கிறார்கள்)
* சிவப்பு எறும்பு சாரி, சாரியாக (சாரை, சாரையாக) வீட்டிற்குள் வரக் கூடாது (அதிகமாக வீட்டினுள் குப்பை கூழங்கள் கிடந்தால்தான் சிவப்பு எறும்பு சாரை, சாரையாக வீட்டினுள் செல்லும், சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த நம்பிக்கையாகும் இது!)
* சாப்பிடும்போது வாழை இலையின் நடுநரம்பிற்கு மேற்பகுதியில் சமைத்த காய், கூட்டு முதலியவைகளைப் பரிமாறுவது நல்லது. (வாழை இலையின் நரம்பிற்கு மேற்பகுதி மெல்லியதாக இருக்கும், அதில் சோற்றைக் குழம்புடன் சேர்த்துப் பிசையும் போது தளிரான அந்த இலைப்பகுதி கிழிந்து விடும் எனவே அதில் கூட்டைப் பரிமாற வேண்டும். வாழை இலையின் நரம்பிற்கு கீழே உள்ள பகுதி சற்று முரடாக இருக்கும். அதில் சோற்றைப் பரிமாற வேண்டும்)
* நகத்தைக் கடிப்பதால் தரித்திரம் வரும். (நகத்தைக் கடிக்கும் போது நகத்தின் உட்புறம் உள்ள அழுக்குகள் வயிற்றினுள் சென்றுவிடும். அதனால் நோய்வரும். நகத்தைக் கடிக்கும்போது, வெட்டுப்படும் நகத்துண்டுகளும் வயிற்றினுள் சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது.)
* அந்தி நேரத்தில் உணவு உண்ணலாகாது. (அந்தி என்பது இரவும் அல்லாத பகலும் அல்லாத நடுப்பொழுது. அந்நேரத்தில் உணவு உண்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல.)
* நின்று கொண்டு சிறுநீர் கழிக்க கூடாது. (இஸ்லாமியர்கள் இதை ஒரு கொள்கையாகவே கொண்டு வாழ்கின்றார்கள். நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும்போது, அதன் துளிகள் தெறித்து காலில் பட வாய்ப்புள்ளது. அதனால் நோய்கள் தோன்றும்.)
* படுக்கும்போது முகத்தை மூடிக் கொண்டு படுக்கக் கூடாது. (முகத்தை மூடிக்கொண்டு படுத்துக் கிடந்ததால் பெற்ற தாயையே அடையாளம் தெரியாமல் ஒருவன் கொன்றதாக ஒரு நாட்டுப் புறக்கதை-(உங்காத்தாளும் எங்காத்தாளும் விடிந்தால் தெரியும்) உள்ளது.
* விளக்கின்றி (இருட்டில்) சாப்பிடக் கூடாது. (இருட்டில் சாப்பிட்டால், சாப்பாட்டுடன் பூச்சி, பொட்டைகளையும் சேர்த்துச் சாப்பிட்டு விடும் அபாயம் உள்ளது.)
* கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது எந்தவித உணவையும் உட்க்கொள்ளக் கூடாது (சூரிய கிரகணத்தின்போது ஏற்படும் வேதியல் மற்றும் ரசாயன மாற்றத்தால், உண்ணும் உணவு மெல்லிய விஷமாகி தாயின் வயிற்றில் இருக்கும். கருவை பாதித்து விடும் அபாயம் உள்ளது.)

இப்படி கிராமத்து மக்களின் நம்பிக்கைகளுக்குப் பின்னால் அறிவியல் பூர்வமான செய்திகளும் உள்ளன. மேலோட்டமாக இவைகளைப் பார்த்து, இவைகள் யாவும் படிக்காத, பாமர மக்களின் மூட நம்பிக்கைகள் என்று பெரும் போக்காக புறங்கையில் தள்ளி ஒதுக்கி விடக் கூடாது. இது போன்ற நம்பிக்கைகள், உலகம் எங்கும் உள்ள பழமையான சமூகங்களில் காணக்கிடக்கிறது. இன்றும் மலைவாழ் மக்களும், பழங்குடியினரும், இதுபோன்ற நம்பிக்கைகளைக் கடைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

"உலகம் எங்கும் (பழங்குடி மக்கள் உட்பட) உள்ள நம்பிக்கைகளை எல்லாம் திரட்டி, ஒருகளப்படுத்திக் கொண்டு (ஓரிடத்தில் வைத்துக் கொண்டு) ஆய்வு செய்தால் பல்வேறு புதிய செய்திகள் ஆய்வுலகத்திற்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ஆன்மீகம், உளவியல், சுற்றுச் சூழலியல் சார்ந்த பல்வேறு நம்பிக்கைகளும் ஓரு விதத்தில் அறிவியல் சார்ந்ததாகவே உள்ளன.

மானுட அனுபவமும், அறிவும் உருவாக்கிய தொழில்நுட்பங்கள், பழந் தமிழர்களால் விஞ்ஞான பூர்வமாகப் பதிவுசெய்யப்படாததால் நாம் இழந்த செல்வங்கள் பலவாகும். நாட்டார் தரவுகளை மூடியிட்ட மனத் தடைகளுடன் அணுகாமல், திறந்த மனதுடன் ஆய்வறிஞர்கள் ஆராய முன்வர வேண்டும்.

 நன்றி : கழனியூரன் ('கிராமங்களை கடந்து செல்லும் கால்கள்' புத்தகத்திலிருந்து)

தோள்பட்டை வலி அதிகரித்தால் கவனம் தேவை


தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது. தோள்பட்டை வலிக்கும், இதய நோயின் அறிகுறியான இடது புறத்தில் பரவும் வலிக்கும் உள்ள வித்தியாசத்தை சாதாரண மக்களால், துல்லியமாக கண்டுபிடிக்க இயலாது என்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் வலி ஏற்பட்ட உடனே, பயந்து அது இதய நோயின் அறிகுறி என்று நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம் 

இரு சக்கர வாகனங்களில் அதிகம் பயணம் செய்பவர்கள், கம்ப்யூட்டர்களில் அமர்ந்து அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், இருக்கைகளில் சரியான முறையில் அமராதவர்கள், எக்கி பொருட்களை தூக்குகிறவர்கள் கையைத் தலைக்கு கீழே மடக்கி வைத்து தூங்குகிறவர்கள், உடற்பயிற்சியில் தோள் மூட்டுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள் இப்படி யாருக்கு வேண்டுமானாலும், தோள்பட்டை வலி, புஜப் பகுதி வலி, கழுத்து எலும்புப் பகுதி வலி போன்றவை ஏற்படலாம்.

சில சமயங்களில் ஊசியால் குத்துவது போன்று வலிக்கும். கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து, கைவிரல் நுனி வரை இழுத்துப் பிடிப்பது போன்று வலி வரும்.

தோள்பட்டை மூட்டு பாதிப்பால் ஏற்படும் வலி என்றால், அது முழங்கை மூட்டுக்கும், தோள்பட்டைக்கும் நடுவில்  வலிக்கும். இரவில் படுக்கும் போது சிலருக்கு, இந்த வலி அதிகரிக்கும். கழுத்து எலும்புகளின் இடையே உள்ள ஜவ்வுகள் போன்றவை தேய்ந்தாலும், தோள்பட்டை வலி தெரியும்.

மூட்டு அசைவு குறைந்து, வலி ஓரளவுக்கு மேல் அதிகமாகி, அதனால் இரவில் தனது தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு சிறப்பு வைத்தியம் அவசியமாகிறது. குறிப்பாக, தோள்பட்டை மூட்டிலுள்ள வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, சின்ன வேலை செய்யக்கூட கையை சற்று தூக்கினாலே வலிக்கும்.

தோள்மூட்டை உள்பக்கமும், வெளிப்பக்கமும் அசைக்கும் தசைநாரில் கால்சியம் உப்பு படிந்தாலும், வலி உருவாகும். இப்படி வலி ஏற்பட்டால், பயமில்லாமல், டாக்டரை அணுக வேண்டும். அது கழுத்து வலியா? தோள்பட்டை வலியா? `ரொட்டேட்டர் கப்’ தசை அழுத்தத்தால் ஏற்பட்ட வலியா? மூட்டு இணைப்பில் காச நோய் உருவானதால் ஏற்படும் வலியா? தோள் மூட்டின் மேல் உள்ள தசைகளில் கால்சியம் படிந்ததால், ஏற்படும் வலியா? என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து விடலாம்.

மிக நுண்ணிய அளவில், தசை சிதைந்து போயிருந்தால், அதனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.

பிசியோதெரபி, மருந்து மாத்திரைகளால் பெரும் பாலான தோள்பட்டை வலிக்கு நிவாரணம் கிடைத்து விடும்.

இது போன்றவர்களுக்கு தொடர்ந்து தேவையான மருந்து மாத்திரைகள், பிசியோதெரப்பி கொடுத்த பின்னும் வலி இருந்தால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் தோள்பட்டை மூட்டு எலும்பில் பிரச்சினையா?, சுழல் தசைகளின் கோர்வையில் உள்ள தசை நார்கள் நைந்து, பிய்ந்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் அறுந்து போகாதபடி அறுவைச் சிகிச்சை செய்வது அவசியமாகிறது.

இதனால் தோள்பட்டை வலி நன்றாக குறைந்து, தொலைந்து போன அசைவை மீண்டும் வலியின்றி பெறலாம்.

 நமது உடலில் எலும்பும் தசையும் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகிறது. நாம் தசைக்கு முறையான உடற்பயிற்சி கொடுத்தால், அது எலும்புக்கு வலு கொடுத்து, வலியின்றி வாழ வழிவகுக்கும்.

பெண்களுக்கு உண்மையாக பிடித்தது என்ன ?


பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர். அதை ஆண்கள்  நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள்  வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமாவில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரிசமமாக நடத்த வேண்டும்.

4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.


6. கட்டுப்பாடு:  உணவில் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை:  விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

3. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

7. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

9. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண்டும். உள்ளாடை வெளியே தெரியும்படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.


21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷோகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக்கிறது, “டிவி’ யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற்றோரோ, குழந்தைகளோ நிறைவேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

நன்றி - ஆர் சௌந்தர ராஜன் - பெங்களுரு 

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 1


கேசத்தின் அடிப்படை

கேசம் ஏன் உதிருகிறது என்பதை தெரிந்து கொள்ள கேசம் குறித்த சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். நமது கேசம் இறந்த திசுக்களால் ஆன மெல்லிய ஆனால் உறுதியான ஒரு பாகம். இவை கெராட்டின் என்ற ஒரு வகை புரதத்தால் உருவானவை.

உள்ளமைப்பு

கேசத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்

1. தோலுக்கு வெளியே
2. தோலுக்கு உள்ளே

தோலுக்கு வெளியே இருக்கும் பகுதியின் பெயர் கேசத் தண்டு (Hair Shaft) ,  தோலுக்கு உள்ளே இருக்கும் பகுதியின் பெயர் கேச வேர் (Hair Root). கேசத் தண்டில் மெடுலா (Medula)எனும் உட்பகுதி, கார்டெக்ஸ் (Cortex) எனும் வெளிப்பகுதி உள்ளது. கேச வேர்களில் அடிப்பகுதி பெரிதா இருக்கும் அதை கேசக் குமிழ் (Hair Bulb) என்கிறோம், அது  பாலிக்கிள் (Hair Follicle) என்ற பகுதியோடு இணைந்திருக்கும். பாலிக்கிள் பகுதியில் உள்ள ரத்த குழாய்கள் வழியாக வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை பெற்றுக்கொள்கிறது.

கேசவேரோடு எண்ணெய் சுரப்பிகள் உள்ளன, (Sebaceous Glands) இந்த எண்னெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் திரவம் கேசத்திற்கு மினுமினுப்பை தருகிறது, சுரப்பிகள் சரியாக இயங்காவிடில் எண்ணெய் பசையின்றி வறண்டு போய் விடும். அதிகமாக இயங்கினால் எண்னெய் பிசுக்குடன் இருக்கும்.

கேசத்தின் நிறம் அதிலுள்ள மெலனின் என்ற வேதிப் பொருள் அளவை பொறுத்து மாறுபடும்.  வயதாகும் போது இது குறைவதால் நரை ஏற்படுகிறது. கேசத்தின் வளர்ச்சியில் மூன்று நிலைகள் உள்ளன அவை வளரும் பருவம், இடைப்பருவம், ஓய்வுப் பருவம் ஆகும். வளரும் பருவத்தில் புதிய கேசம் உருவாகி வளர்ந்து வரும், அடுத்த பருவத்தில் வளரும் வேகம் குறையும். மூன்றாம் பருவத்தில் வளர்ச்சி நின்று உதிர்ந்து விடும். சில மாதங்கள் கழித்து மீண்டும் புதிய கேசம் வளரும்.

அடுத்த பாகத்தில் முடி உதிர்வுக்கான காரணங்களை பார்க்கலாம்

நடிகைகளின் குத்தாட்ட மோகம் குறைந்துவிட்டதா?

தமிழ் சினிமாவில் நடிகைகளின் குத்தாட்டத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
பொதுவாக வணிக ரீதியாக தயாரிக்கப்படும் தமிழ் சினிமாவில் குத்தாட்ட நடனம் மற்றும் பாடல்கள் மிக முக்கிய பங்கு வகித்தன. ஆனால் தற்போது அதன்மீது ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

ஆனால் இந்தி சினிமாவில் சல்மான் நடித்து வெளிவந்த‌ தபாங் படத்தின் முன்னி எனத் தொடங்கும் குத்தாட்டப் பாடல் மிகப் பெரிய ஹிட் ஆனது. அங்கு இன்னமும் சூடான பாட்ல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஆனால் தமிழில்,  சமிபத்தில் வெளியான நான்கு படங்களின் குத்தாட்ட பாடல்கள் ஒன்று கூட தேரவில்லை. தேரவில்லை என்பதை விட ரசிகர்களை ஒன்றுகூட சூடாக்கவில்லை என்பதே குற்றசாட்டாகும்.

1 வெடி (சோபியா)
2 வேலுர் மாவட்டம் (மேக்னா)
3 ஆயிரம் விளக்கு ([புதுமுகம்)
4 ரவுத்திரம் (புதுமுக‌ம்)

இதற்கு காரணம் ஆர்வம் குறைந்துவிட்டது எனக் கூறினாலும், ஒளிபதிவாளர் ஒருவர் குறிப்பிடுகையில், முதலில் படத்தின் போக்கு ஏற்றவாறு குத்தாட்டம் பாடல்கள் ஸ்கிரிப்ட் லே குறிப்பிட‌பட்டிருக்கும். ஆதலால் பாடல் ஆசிரியர், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் ஒன்றுகூடி குத்தாட்ட பாடல்கள் ரசிகர்களை கவரும் வகையில் படமாக்கப்படும். ஆனால் தற்போது ஹீரோ மற்றும் இயக்குனர்களே முடிவு செய்துவிடுகின்றனர்.

அதே சமயம் தற்போது ஹீரோ மற்றும் ஹீரோயின்களே குத்தாட்ட பாடல்களில் இடம் பெறுவதாலும் ரசிகர்கள் அலுத்துபோவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



ஓஸ்தி படத்தில் மல்லிகா ஷெரவாத் மற்றும் சிம்பு குத்தாட்ட பாடலில் நடனம் ஆடியுள்ளனர். இந்த பாடலாவது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

ரூ.20 கோடி அபாரதம் வசூலிக்கும் போக்குவரத்து காவல்துறை!!


சென்னையை பொருத்தவரை என்னதான் அரசு கிடுக்குப்பிடியான சட்டங்களை வகுத்தாலும், போக்குவரத்து விதிமுறையை மீறுவோர் எண்ணிக்கையும் விபத்துகளும் குறைந்தபாடில்லை. அப்படி விதியை மீறுவோர்கள் போக்குவரத்து காவல்துறை அதிகாரி வசம் பிடிபட்டால், அவர்களில் சிலர் அதிகாரியை 50 (அ) 100  க்கு கவனித்துவிட்டு சென்றுவிடுவது வழக்கம். ஆனால் அதில் பலர் அபாரத்திற்கு உள்ளாவார்கள், அப்படி  வசூலிக்கப்படும் தொகை மூலம் ஆண்டுக்கு 20 கோடி அரசுக்கு வருமானம் வருகிறது என்கிறது போக்குவரத்து காவல்துறை.

இது பற்றி போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா குறிப்பிடுகையில், இந்த விதிமுறை மீறல்களால் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 86 கோடி வரை அபாரம் விதிக்கபட்டு பெறப்பட்டுள்ளது. இந்த வகையில் பெருமளவில் அபாரதம் வசூலிக்கப்படுவது இருசக்கர வாகன ஓட்டிகள் ‌ஹெல்மட் அணியாமல் ஓட்டுவதற்குதான்.

இந்த ஆண்டில் இதன் மூல‌ம் சுமார் 6 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதே போன்று சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவோர்க்கு விதிக்கப்படும் அபாரதம் மூலம் ரூ 77 லட்சமும், முறையான லைசன்ஸ் இல்லாம்ல் வாகன்ம் ஓட்டும் ஒட்டுனர்களுக்கு ‌விதிக்கப்படும் அபாரதம் மூலம் 75 லட்சம்  வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆரக்கிள் ஆன்லைன் டெஸ்ட் எழுதிய 13 வயது சிறுவன்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சாப்ட்வேர் நிறுவனமான "ஆரக்கிள்' நிறுவனம் ஆன்லைன் மூலம் நடத்திய தொழில்நுட்ப போட்டித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் திருநெல்வேலியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் விக்னேஷ்வரன்.  

திருநெல்வேலி வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - ரேவதி தம்பதியின் மகனான இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் 8-வது வகுப்பு படித்து வருகிறார். தனது இந்தச் சாதனை குறித்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  பாளையங்கோட்டையிலுள்ள தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் "சி' லாங்வேஜ் படித்து வந்தபோது கம்ப்யூட்டரில் எனக்குள்ள ஆர்வத்தைப் பார்த்த பயிற்சியாளர் எஸ்.சுந்தரபாண்டியன், ஆரக்கிள் நிறுவன தேர்வுக்கு உரிய பயிற்சியை அளித்தார். பி.இ., பிடெக் போன்ற உயர் படிப்புகளை முடித்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மேலும் பயிற்சிக்காக மைக்ரோசாப்ட், சிஸ்கோ மற்றும் ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் ஆன்லைனில் நடத்தும் தொழில்நுட்பத் தேர்வை எழுதி அவர்களது திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள்.  இதற்காக அந்த நிறுவனங்கள் சான்றிதழ் அளிப்பதுடன் அவர்களை தங்கள் நிறுவனங்களில் பணியிலும் அமர்த்திக்கொள்ள வாய்ப்புள்ளது.  இந்த வகையில் ஆரக்கிள் நிறுவனம் நடத்திய ஓசிஏ-11ஜி தேர்வை எழுத என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். இத்தேர்வை கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி எழுதினேன். நானே எதிர்பாராத வகையில் இத்தேர்வில் 83 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். இவ்வளவு சிறிய வயதில் இத்தேர்தவை எழுதி வெற்றி பெற்றது நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும் என எனது பயிற்சியாளர் தெரிவித்தார்.  

 இதற்கு முன் மிகக் குறைந்த வயதில் இத்தேர்வை எழுதி வெற்றி பெற்றவர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த 14 வயதான ராகில் என்பவர் ஆவார். எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் பொறியாளர் ஆவதே எனது லட்சியம். இத்தேர்வில் வெற்றி பெற்றதால் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு நேரடியாக பி.இ., பி.டெக் வகுப்பில் சேரலாம் என்றார் அவர்.  பேட்டியின்போது உடனிருந்த பயிற்சியாளர் சுந்தரபாண்டியன் கூறுகையில், சாதாரணமாக இத்தேர்வில் வெற்றி பெற முடியாது. விக்னேஷ்வரனின் தீவிர முயற்சியாலும், அவரது பெற்றோர் கொடுத்த ஊக்கத்தாலும் இந்த வெற்றியை அடைந்துள்ளார் என்றார்.

பூமி நாளிதழ்

தமிழ்நாடு அரசு போக்குவரத்தின் ஆன்லைன் இ-டிக்கெட்

 ரயில்களில் முன்பதிவு செய்ய இ-டிக்கெட் வசதி இருப்பது போல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இன்று (அக்.3) தொடங்கி வைக்கிறார்.

டிக்கெட் கவுண்டரில் காத்து நிற்காமல் வீட்டில் இருந்தபடியோ, கம்ப்யூட்டர் மையத்தின் மூலமோ, டிராவல் ஏஜென்சி மூலமோ இனி பேருந்திற்காக முன் பதிவு டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம்.

எந்த ஊரில் இருந்து எங்கு செல்ல வேண்டுமானாலும் அரசு நீண்ட தூர பேருந்துகளுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழக பஸ்களுக்கும் இ.டிக்கெட் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும், திருப்பதி, புதுச்சேரி, பெங்களூர் போன்ற அண்டை மாநில நகரங்களுக்கு செல்லவும் அரசு விரைவு பேருந்துகளில் ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம். ஒரு மாதத்திற்கு முன்பாக பயணத்திட்டத்தை வகுத்து அதற்கேற்றவாறு அரசு பஸ்களில் முன் பதிவு செய்து கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்.

மேலும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை காலங்களிலும் இந்த திட்டத்தில் முன் பதிவு செய்து பயணம் செய்யலாம். ஆன்லைன் மூலம் இ.டிக்கெட் பெறும் வசதி செய்யப்படுவதால் தேவையற்ற அலைச்சல், கால விரயம், காத்திருத்தல் போன்றவற்றை தவிர்க்கலாம்.

www.tnstc.in என்ற இணையதளத்தின் வழியாக அரசு பேருந்துகளில் இன்று முதல் இ.டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து எந்த இடத்தில் இருந்தும் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய முன் பதிவு சேவை தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செயலாளர் பிரபாகர்ராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். 

பஸ் இ.டிக்கெட் பெறுவதற்கு தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணம் மாறுபடுகிறது. ஆன்-லைன் முன் பதிவுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேருந்துகளின் தடம் எண், எங்கிருந்து எங்கே செல்ல வேண்டும், பணம் செலுத்தும் முறை, தேதி, எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் போன்ற தகவல்களை இணைய தளத்தின் வழியாக பதிவு செய்யும் போது இ-டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

பயணத்தின் போது இ.டிக்கெட் பயணிகள் அடையாள சான்றினை வைத்திருக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு பயணம் செய்ய விரும்புவோர் இந்த வசதியை உடனே பெற்றுக் கொள்ளலாம். 



டிஎன்எஸ்

21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்



1.  குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மது அருந்துவதைக் குறைப்பதற்கு உங்களுடைய சொந்தக்காரணங்கள் யாவை? முதலில் உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். மது அருந்துவதை விட்டொழிக்க வேண்டும் என்ற உங்கள் இலக்கை அடைய அது ஒரு வழிகாட்டியாக அமையும். உங்கள் குறிக்கோள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது மது அருந்த வேண்டியிருக்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் இருத்தலாகவோ, மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுதலாகவோ, அல்லது மது அருந்துவதை ஒரேயடியாக விட்டொழிப்பதாகவோ இருக்கலாம். ஆனால் உங்களுக்காக மட்டுமே நீங்கள் மது அருந்துவதை விடமுயற்சி செய்கிறீர்கள் என்பதில் மட்டும் உறுதியாக நில்லுங்கள். இல்லையெனில் நீங்கள் உங்கள் முயற்சியில் வெல்வது கடினம்.

2.  பிறகு, வாரத்தில் ஏதேனும் ஒருநாளை மது அருந்துவதைத் தவிர்க்கும் நாளாகத் தேர்ந்தெடுங்கள் அன்று வேலை நாளாக இல்லாமல் நீங்கள் ஓய்வெடுக்கும் நாளாக இருந்தால்தான் மது அருந்துவதை தவிர்க்க சுலபமாக இருக்கும்.

3.  நம்பிக்கை இழக்காதீர்கள் / இக்கட்டுரையில் எந்த இடத்திலும் மது அருந்துவதை விட்டுவிடுவது சுலபமானது என்று கூறப்படவில்லை. உங்கள் இலக்குகளையும், அவ்விலக்குகளை நீங்கள் தேர்ந்தெடுக்க அடிப்படையானக் காரணங்களையும் மனதில் எப்போதும் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை, ஒரு முறை நீங்கள் தவறி, அதிகமாக மது அருந்திவிட்டாலும், அச்செயல் உங்கள் குறிக்கோளை தடுக்க விடாதீர்கள். மறு நாளிலிருந்து மீண்டும் உங்கள் இலக்கை அடையும் வழியில் தொடர்ந்து செல்லுங்கள். தோல்வி அடையும் போதெல்லாம் ராபர்ட் எப். கென்னடி, “யாரெல்லாம் பெரிய அளவில் தோல்வி அடைகிறார்களோ அவர்கள் பெரிய அளவில் சாதனை புரிவார்கள்” என்று கூறியதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையிலேயே குடிப்பழக்கத்தை நிறுத்த அல்லது குறைக்க விரும்பினால் உங்களால் உறுதியாக வெற்றியடைய முடியும்.

4.  மதுப்பழக்கத்தைக் கைவிட நீங்கள் மேற்கொண்டுள்ள திட்டங்களை உங்கள் குடும்ப அங்கத்தினர்களோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வெற்றியை அடைய அவர்களும் உதவட்டும்.

5.  மதுப்பழக்கத்தை நிறுத்தவேண்டும் என்ற உங்கள் குறிக்கோளை அடைய உங்கள் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களின் ஆதரவினை நாடுங்கள். உங்கள் குடிப்பழக்கத்திலிருந்து நீங்கள் மீண்டுவந்தால் மகிழக்கூடிய அவர்கள், தம் விடுமுறை நாட்களில் உங்களுடன் கூடவே இருந்து உதவுவார்கள். உங்களுடைய கவலைகளையும் எண்ணங்களையும் நீங்கள் அவர்களோடு பகிர்ந்து கொள்வது நலம்.

6.  தடை செய்யுங்கள் / வாரத்தில் ஒரு நாள் மது அருந்துவதை நிறுத்துங்கள். வாரத்தில் ஒருநாள் மது அருந்துவதை நிறுத்துவது உங்களால் முடியும்போது மது அருந்துவதை இரண்டு நாட்களுக்கு நிறுத்த முயற்சி செய்யுங்கள். அதில் வெற்றியடைந்தபின் மூன்று நாட்களாகவும், பின் வாரம் முழுவதையும் மது அருந்தா நாட்களாக மாற்றுங்கள். உங்களது பெரிய இலக்கை, சிறு சிறு இலக்குகளாகப் பிரித்து அடைவது எந்த விதத்திலும் குறைவானதல்ல. உண்மையில் அது உங்கள் குறிக்கோளை நீங்கள் விரைவில் அடையவும், அதில் நிலைத்து நிற்கவும் உதவிகரமாக இருக்கும்.

7.  எப்போதெல்லாம், எந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் நீங்கள் மது அருந்த வேண்டியிருக்கும் என்பதை அறிந்து, பின் அதனைத் தவிர்க்கும் திட்டத்தை உருவாக்குங்கள். வீட்டிலோ அல்லது விருந்துகளிலோ மதுவுக்கு பதிலாக வேறு ஏதாவது பானத்தைப் பருகும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். பொதுவாக நீங்கள் மது அருந்தக்கூடிய நேரத்தில், உங்கள் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகமூட்டும் உரமூட்டும் பொழுது போக்குகளை (உடற்பயிற்சி, படித்தல், ஒவியம்.................. போன்றன) மேற்கொள்ளுங்கள்.

8.  மதுவின் மீது ஏற்படும் ஈர்ப்பினைக் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் எத்தகைய சூழலில் உங்களுக்கு மது அருந்தும் ஆவல் ஏற்படுகிறது என்று கண்டு பிடித்து அச்சூழலைத் தவிர்த்து விடுங்கள். தனியாக இருக்கும்போதோ, விருந்துகளில் பங்குபெறும்போதோ, மதுவருந்தும் ஆவல் ஏற்படுமெனில் அத்தகைய சூழலைத் தவிர்க்கத் திட்டமிடுங்கள். மதுவிற்குப் பதிலாக நல்ல சுவையுள்ள பழரசங்களைப் பருகுங்கள்.

9.  உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள். மது அருந்துவதற்காக நீங்கள் செலவு செய்து வந்த பணத்தை குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் வெளியில் சென்று உண்பதற்காகவோ, திரைப்படம் பார்ப்பதற்காகவோ, விளையாடுவதற்காகவோ செலவு செய்யுங்கள்.

10.       மது அருந்தும் பழக்கக்தைக் குறைப்பது உங்களுக்குக் கடினமாக இருந்தால் கூடுதல் உதவியையும் புதிய திட்டங்களையும் நாடுங்கள் : http://www.stopdrinkingadvice.org/guide/ என்ற இணையதளத்தின் உதவியைப் பெறுங்கள். அல்லது துறைசார்ந்த வல்லுநரை அணுகுங்கள்.

மது அருந்துபவர்களுக்கு எச்சரிக்கை!!!


மது அருந்துவது உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஆனாலும் மது மிகவும் அதிகமாக பாதிப்பது ஈரலை. ஏனென்றால் நாம் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது அது ஈரலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி நமக்கு நோய்களை ஏற்படுத்தும்.
ஈரல் பதிப்பு மூன்று கட்டங்களின் ஊடாக நடைபெறுகிறது.

ஆரம்பத்தில் கொழுப்புப் படித்தல் (fatty change) என்ற பாதிப்பும் பிறகு ஈரல் அழர்ச்சி (hepatitis)என்ற பாதிப்பும் இறுதியாக சிரோசிஸ் (cirrhosis)என்ற வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது

இங்கே முதல் இரண்டும் அதாவது கொழுப்புப் படித்தல் மற்றும் ஈரல் அழர்ச்சி என்பவை இருக்கும் நிலையில் ஒருவர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டால் அவரின் ஈரல் பழைய நிலையை அடைந்து சுகமாகலாம். ஆனால் அது சிரோசிஸ் என்ற நிலையை அடைந்தால் ஈரல் பழைய நிலைக்குத் திரும்புவது சாத்தியமற்றது.

சிரோசிஸ் இருப்பவருக்கு வாழ் நாள் என்னத்தொடங்கி விட்டது என்றே அர்த்தம் , ஆனாலும் அவர் எத்தனை காலங்கள் அந்த நோயிடுன் உயிர் வாழ்வது என்பது அவர் குடியை விட்டாரா என்பதிலேயே தங்கி உள்ளது.


அதாவது சிரோசிஸ் ஏற்பட்ட ஈரல் மேலும் பாதிக்கப்பட்டு முழுவதுமாக செயற்படாமல் போய் மரணம் ஏற்படுவதை பிற்போட மருந்துகளை விட , அந்த நபர் குடிப்பழக்கத்தை விடுவதே முக்கியமானது.

 இந்த ஈரல் பாதிப்பு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே ஏற்படலாம். சில பேரில் ஈரல் முற்று முழுதாக செயல் இழக்கும் வரை மதுவினால் ஏற்படும் பாதிப்பு தெரியாமலேயே ஏற்படலாம்.இதனால் தொடர்ச்சியாக அதிகமாக மது அருந்துபவர்களில் சட்டென மரணங்கள் ஏற்படலாம்.

நீங்கள் மது அருந்துபவர்கள் என்றால் உங்களில் கீழே உள்ள ஏதாவது அறிகுறிகள் உள்ளதா என்பதை அவதானித்துக் கொள்ளுங்கள்...


  1. வயிற்று வலி
  2. உமிழ் நீர் குறைந்து உலர்ந்த வாய்
  3. அதிகமான தாகம்
  4. தொடர்ச்சியான காய்ச்சல்
  5. உடல் பலவீனம்
  6. வயிற்று வீக்கம்
  7. கண் மஞ்சள் நிறமடைதல்
  8. பசி குறைதல்
  9. வாந்தி வருகின்ற உணர்வு
  10. உடல்  நிறை திடீரென அதிகரித்தல்
  11. கருப்பு நிறத்தில் மலம் கழித்தல்
  12. ரத்த வாந்தி எடுத்தல்
  13. ஆண்களில் மார்பு பெரிதாகுதல்
  14. சிந்திக்கும் ஆற்றல் குறைதல்
  15. உள்ளங்கையில் சிவப்பு நிறமாக காணப்படுதல்

மது அருந்துபவர்களே இதில் ஏதாவது அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.அதற்கு முன்பு மது அருந்துவதை விட்டு விடுங்கள்.

மது அருந்துவதை 21 நாட்களில் நிறுத்தலாம் < இங்கே சொடுக்கவும் (Click Here)

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content