தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அதிரடி மாற்றம்!!!

இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மற்றும் 5 ஒரு நாள்  பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வருகிற நவ.,6 ஆம் தேதி தலைநகர் டில்லியில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான தேர்வு நேற்று மாலை கொல்கத்தாவில், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலமையில் நடைபெற்றது. அதன்படி இந்திய அணியில் அதிரடி மாற்றங்களாக‌ 15 பேர்  கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளது.

காயம் காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடமல் போன சீனியர்கள் சச்சின், சேவாக் அணியில் மீண்டும்  இடம்பிடித்துள்ளனர்.

கடந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல் படாத ஹர்பஜன் நீக்கப்பட்டு தமிழக வீரர் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் புதுமுக வீரர்கள் உமேஷ் யாதவ், வருண் ஆரோன், ரகானே, ராகுல் ஆகியோர் அணியில் புதிதாக இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி:
தோனி(கேப்டன்), காம்பிர், சேவக், டிராவிட், சச்சின், லட்சுமண், யுவராஜ், அஷ்வின், பிரக்யான் ஓஜா, இஷாந்த், உமேஷ் யாதவ், விராத் கோஹ்லி, வருண் ஆரோன், ரகானே, ராகுல் சர்மா.

தீபாவளி ரேசில் முந்திய வேலாயுதம் !!

சென்னையில் கடந்த புதன் கிழமை தீபாவளியன்று, மழையையும் பொருட் படுத்தாமல் திரையரங்களில் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. காரணம் ஆர்ப்பாட்டமாக மூன்று பெரிய படங்கள் வெளியாகியன.

ஒன்று பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான சூர்யாவின் "ஏழாம் அறிவு", மற்றொன்று இந்தியாவிலே பெரிய எதிர்ப்பார்ப்புடன்  ஷாருக்கான் மற்றும் ரஜினி (சில காட்சிகள்) நடித்து வெளியான "ரா ஒன்", இவையிரண்டுடன் ஒப்பிடுகையில் சற்று எதிர்ப்பார்ப்பில் பின் தங்கி வெளியான விஜய் நடித்த வேலாயுதம்.

மேலும் ஏழாம் அறிவு மற்றும் ரா ஒன் படங்கள் முடிந்த அளவிற்கு முதல் தர திரையரங்களிலே வெளியாயின. தமிழ் நாட்டைப் பொருத்த வரை, வேலாயுதம் மற்றும் ஏழாம் அறிவுக்கும் இடையே போட்டி நிலவிய‌தால் ஓபனிங்கை பொறுத்தவரை இரண்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

7 ஆம் அறிவு புதிய களம், புதிய முயற்சி. ஆனால் தொய்வான திரைக்கதை ரசிகர்களுக்கு பல நேரம் கொட்டாவியை வரவழைத்தது எதிர்பாராத ஏமாற்றம்.
"ரா ஒன்" படம் பற்றி கலவையான விமர்சனங்கள் உள்ளதாலும் சொன்ன தேதியில் 3D யில் வெளியாகததினாலும் இப்படத்திற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதே விஜய் படம் என்றாலும் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் ச‌ரியான விகிதத்தில் ஜெயம் ராஜா தந்திருப்பதால் வேலாயுதம் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

கேரளா மற்றும் வெளி நாட்டின் வசுல் அடிப்படையில், திபாவளியன்று வெளியான படங்களின் ரேசில் வேலாயுதம் முந்தி உள்ளது.

இந்த வார இறுதியில் தமிழ் நாட்டின் நிலமை தெரிந்துவிடும்.

நோக்கியாவின் "விண்டோஸ்" ஸ்மார்ட்போன் அறிமுகம் !!

பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் "விண்டோஸ்" எனும் இயங்குதளம் (Operating System) கொண்டு இயங்கவல்ல இரண்டு  ஸ்மார்ட்போன்களை நோக்கியா நிறுவனம் இன்று அறிமுகப் படுத்தியுள்ளது.

ஒன்று லுமியா 800 !





இது பேஸ்புக் போன்ற சமுக வலை தளங்களை சப்போர்ட் செய்வது மட்டுமில்லாமல் நேவிகேஷன் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்  9 பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ .28000 மட்டும்


மற்றொன்ரு லுமியா 710





இதில் 1.4 GH புராஸசர் பொருத்தப்பட்டுள்ளது. 5 மெகா பிக்ஸள் கொண்ட‌ கேமரா, எல்.ஈ.டி பிளாஷ் மற்றும் இன்டர்னள் மெமரி 8 GB ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன்கள் மைக்ரோசாப்ட் மற்றும் நோக்கியா நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பாகும். தற்போதைய மார்க்கெட்டில் உள்ள ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போனை நோக்கியா நிறுவனம் களமிறக்கியுள்ளது.

சந்தானத்தின் அதிரடியில் "ஒகே ஒகே" ட்ரைலர் படங்களுடன் !!





டீசர் ட்ரைலர் உங்களுக்காக‌


ஏழாம் அறிவு: முரண்பாடான விமர்சனங்கள்




இயக்குனர்: ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்பாளர்: உதயநிதி ஸ்டாலின்
கதை: ஏ. ஆர். முருகதாஸ்

நடிப்பு:
சூர்யா
சுருதி ஹாசன்
ஜானி ட்ரை ஙுயென்

இசை: ஹாரிஸ் ஜயராஜ்
ஒளிப்பதிவு: ரவி கே. சந்திரன்

இணையதளங்களில் ஏழாம் அறிவு படத்திற்கு ஆஹா ஓஹோ எனப் பாராட்டுகள் ஒரு பக்கம் குவிந்தாலும், இன்னொரு பக்கம் மொக்கை, சுமார் என்றும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. எதில் உண்மை என்பதே குழப்பமாக உள்ளது. படத்தை பார்த்த பிறகு தான் தெரிகிறது ஏன் இந்த முரண்பாடான கருத்துக்கள் என்று.


படத்தில் பணியாற்றியிருப்பவர்களை பற்றி பெரிதாக விவரிக்க தேவையில்லை, படத்தின் கதையைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம். ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுறத்தில் வாழ்ந்த போதி தர்மர் சீனாவிற்கு போகிறார். அங்கு அவர் சீனர்களுக்கு மருந்து மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பம் வருகிறது. பின்பு அங்கு அவர்களின் விருப்பப்படி அங்கேயே இறக்கிறார். அடுத்து தற்போதைய காலகட்டத்தில் சுருதி ஹாசன் போதி தர்மர் குறித்து ஆராய்ச்சி நடத்துகிறார், அதில் போதி தர்மர் வம்சாவழியான சூர்யாவை சுற்றி வந்து ஆராய்ச்சிக்கு பயண்படுத்த நினைக்கிறார், இதை காதல் என நினைத்து சூர்யா ஏமாறுகிறார், இப்படி ஒரு சின்ன தனிக் காதல் கதையும் உள்ளது.
ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு போதி தர்மரால் குணப்படுத்தப்பட்ட நோயை மீண்டும் சீனா ஜானி ட்ரை ஙுயென் மூலம் இந்தியாவில் பரப்புகிறது, இதுவே ஆப்பரேசன் ரெட். அதோடு நில்லாமல் சூர்யா, சுருதி ஹாசன் இருவரையும் கொல்வதும் அவர் வேலை. நோய் பரவினால் சீனா மட்டுமே மருந்து கொடுக்கமுடியும், மீண்டும் போதிதர்மனின் வம்சாவழி வரக்கூடாது என்பதே சீனாவின் நோக்கம்.  சுருதி ஹாசன் இதையெல்லாம் தடுக்க போதி தர்மரின் திறமைகளை சூர்யாவிற்கும் தூண்டிவிடுகிறார். அதன் பின் ஜானியோடு சண்டையிட்டு இந்தியாவை மீட்கிறார் சூர்யா. அவ்வளோதான் கதை.


படத்தின் மிகப்பெரிய பலமே போதிதர்மன்தான். அதிகமாக யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை சொன்னதற்காக முருகதாஸுக்கு தனிப் பாராட்டுக்கள். இதை தமிழர்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் தமிழர்களை தவிற மற்றவர்களுக்கு எவ்வளவு ஈர்க்கும் என்று தெரியவில்லை. அடுத்த பலம் சூர்யா, சுருதி ஹாசன், ஜானி  மூவரும்தான். சூர்யாவின் உழைப்பு நன்கு தெரிகிறது படத்திற்காக மெனக்கெட்டிருகிறார், சுருதிக்கும் நல்ல வாய்ப்பு நன்றாகவே செய்துள்ளார். தனியாக கவனிக்க வேண்டியவர் ஜானி, அழகான வில்லன், சண்டைகள் பிரமாதமாக செய்கிறார் ஆனால் அவர் கண்களை பயன்படுத்தியே அவரை சிறிது வீணடித்தது போலவே தோன்றுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை பாடல்களில் அருமையாக இருக்கிறது. படம் முழுவதும் பக்க பலமாக இருப்பது ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவு, அருமை. பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகள் அருமை, (ஆனால் சில இடங்களில் கொஞ்சம் ஒவர்).

இத்தனை பலத்தினையும் வைத்துக்கொண்டு திரைக்கதையில் ஒட்டை வைத்துள்ளார் முருகதாஸ். படத்தில் நிறைய இடங்களில் லாஜிக் இல்லாத காட்சிகள், போதிதர்மன் ஏன் சீனாவிற்கு போனார், ஏன் அவர் இங்கு யாருக்கும் அந்த கலையை கற்றுக்கொடுக்காமல் சென்றார் அவரை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நிறைய ஏன் குறிப்பிடவில்லை. அவரி ஷாவோலின் மாஸ்டராகவே காட்ட முற்பட்டுள்ளார். சர்க்கஸ் சூர்யாவிற்கு அங்கு அதிகமான வேலை இல்லை. ஜானி போலிசார்களை கொன்று குவிக்கிறார் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவே இல்லையா? தமிழக போலீசை பெரிதாக காட்டும் தமிழ் சினிமாவே அவர்களை சாதாரணமாக காட்டியுள்ளது, ஒரு வேளை சிங்கம் சூர்யாவே போலீசாக வந்திருந்தால், ஜானி நாய்க்கு ஊசி போடும்போதே 'ஓங்கி அடிச்சா ஒன்ர டன் வெயிட்டுடா'னு வசனம் பேசியே கொன்றுப்பார். படத்தில் சூர்யா, சுருதி ஹாசன், ஜானி  மூவரை சுற்றி கதை நகர்வதால் மற்ற விஷயங்களை சாதாரணமாக்கி லாஜிக் இல்லாத காட்சிகளை திணித்திருக்கிறார், இதுவே படத்தின் பெரிய பலவீனம்.


படத்திற்கு கொடுத்த 'BUILD-UP' கொஞ்சம் ஒவர் தான், போதிதர்மனை காட்டிய முருகதாஸ் அவரை வைத்தே வியாபாரம் செய்திருக்கிறார், படத்தின் முதல் 20 நிமிடங்கள் அவர்களின் உழைப்பு தெரிகிறது, ஆனால் போதிதர்மனை வெறும் வித்தைக்காரனாக மட்டும் காட்டியதை தவிர்த்து அவரின் வாழ்க்கையை விவரித்திருக்கலாம். படம் ஆரம்பத்தில் இருக்கும் சுவாரஸ்யம் போக போக குறைகிறது. கதை எங்கு போகிறது என்பதை எல்லோராலும் கணிக்க முடிகிறது, கணிக்க முடிகிற காட்சி அமைப்புக்கு எதற்கு இரண்டே முக்கால் ம்ணி நேரம். சஸ்பென்ஸ் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும். கொடுத்த பில்டப்புகளை தவிர்த்துவிட்டு படம் பார்த்தால் படம் ஒகே. எதிர்பார்ப்புகளோடு போனால் சிறிது ஏமாற்றமே. ரசிகர்கள் எதை எடுத்துக்கொள்கிறார்களோ அதுவே விமர்சனம் படத்தில் பாராட்டும் விஷயங்களும் மொக்கையான விஷயங்களும் சரி பாதியாக உள்ளன. BUILD-UP மட்டுமே படத்தின் மொக்கை விமர்சனங்களுக்கு முக்கிய காரணம்.  BUILD-UP தவிர்த்திருக்கலாம்.

2012ம் ஆண்டின் பொதுவிடுமுறைகள்


கீழ்காணும் பொது விடுமுறை தினங்கள், அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேஷன்களுக்கும், வாரியங்களுக்கும் பொருந்தும்.


1. புத்தாண்டு தினம்  ஜனவரி 1 (ஞாயிறு)
2. பொங்கல்  ஜனவரி 15 (ஞாயிறு)
3. திருவள்ளுவர் தினம்  ஜனவரி 16 (திங்கள்)
4. உழவர் திருநாள்  ஜனவரி 17 (செவ்வாய்)
5. குடியரசு தினம்  ஜனவரி 26 (வியாழன்)
6. மிலாடி நபி  பிப்ரவரி 5 (ஞாயிறு)
7. தெலுங்கு வருட பிறப்பு  மார்ச் 23 (வெள்ளி)
8. வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு  ஏப்ரல் 2 (திங்கள்)
9. மகாவீர் ஜெயந்தி  ஏப்ரல் 5 (வியாழன்)
10. புனித வெள்ளி  ஏப்ரல் 6 (வெள்ளி)
11. தமிழ் புத்தாண்டு தினம்  ஏப்ரல் 13 (வெள்ளி)
12. டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினம்  ஏப்ரல் 14 (சனி)
13. மே தினம்  மே 1 (செவ்வாய்)
14. சுதந்திர தினம்  ஆகஸ்டு 15 (புதன்)
15. ரம்ஜான்  ஆகஸ்டு 20 (திங்கள்)
16. கிருஷ்ண ஜெயந்தி  செப்டம்பர் 8 (சனி)
17. விநாயகர் சதுர்த்தி  செப்டம்பர் 19 (புதன்)
18. வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பு  செப்டம்பர் 29 (சனி)
19. காந்தி ஜெயந்தி  அக்டோ பர் 2 (செவ்வாய்)
20. ஆயுத பூஜை  அக்டோ பர் 23 (செவ்வாய்)
21. விஜய தசமி  அக்டோ பர் 24 (புதன்)
22. பக்ரீத்  அக்டோ பர் 27 (சனி)
23. தீபாவளி  நவம்பர் 13 (செவ்வாய்)
24. முகரம்  நவம்பர் 25 (ஞாயிறு)
25. கிறிஸ்துமஸ்  டிசம்பர் 25 (செவ்வாய்)

எஸ்.எம்.எஸ் தொல்லை தரும் பொது நிறுவனங்கள்!!

ஒரு காலத்தில் மக்கள் தகவல் பரிமாற்றத்திற்காக கடிதம் மற்றும் தந்தி என்றழைக்கப்பட்ட விரைவு குறுந்தகவல் போன்றவற்றை பயன்படுத்தினர். பிற்காலத்தில் தொலைபேசி மற்றும் செல்போன்களின் வரவால் கடிதம், தந்தி மதிப்பிழந்து போனது.

தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட தொலைபேசி, தற்போது விளம்பரச் சேவை என்கிற பெயரில் தொல்லை தர ஆரம்பித்துள்ளன இந்த செல்போன் நிறுவனம் மற்றும் பொது நிறுவனங்கள்.

பொது நிறுவனங்கள் விளம்பரச் சேவைக்காக ஒரு குருந்தகவல் ஒன்றை ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து அனைத்து செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்புகிறது. இது போன்ற பலதரப்பட்ட பொது  நிறுவனங்களின் குருந்தகவல்களால், வேலையில் அல்லது கல்லூரியில் இருக்கும் நமக்கு, மிகவும் தொல்லையாக அமைகின்றது.

இதை தவிர்க்கத்தான் இந்தியா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையும் சமிபத்தில் ஒரு கட்டுப்பாட்டை செல்போன் நிறுவனங்களுக்கு விதித்தது. அதன்படி ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் அதன் பயன்பாட்டாளர்களுக்கும் நாளொன்றுக்கு 100 குருந்தகவல்கள் அணுமதிக்க வேண்டும்.

இதையும் மீறி சில நிறுவனங்கள் இணையத்திலிருந்து குருந்தகவல்களை அணுப்ப ஆரம்பித்துவிட்டனர். இதுபற்றி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், இதனை கட்டுபடுத்த வேண்டியது செல்போன் நிறுவனங்களே.

இணையத்திலிருந்து அனுப்பப்படும் குறுந்தக‌வல்களை இடைமறித்து பயன்பாட்டாளரின் நலனை காப்பது அந்நிறுவனங்களின் கடமை என்றார் அவர். செல்போன் நிறுவனங்கள் கண்கானிக்குமா?

ஆஸ்த்ரேலியாவின் சாதனையை முறியடித்த இந்தியா!!

இந்திய அணி கிரிக்கெட்டில் பங்குபெற்று, முதன் முதலாக 300 ரன்களை சேர்க்க சுமார் 22 ஆண்டுகள் எடுத்துகொண்டது, சின்ன அணி என்று குறிப்பிடப்படும் ஜிம்பாப்வே கூட இந்த 300 ரன்களை வெகு குறுகிய காலகட்டத்தில் எட்டிவிட்டது. 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒருமுறை இந்தியா தனது 300 ரன்களை சேர்த்து, தன்னையும் சாதனை படைத்த அணிகளுடன் தடம் பதித்துகொண்டது.

அதன் பிறகு இந்தியா அனைத்து அணிகளையும் அடித்து நொறுக்கியது. நேற்று முன் தினம் மொகாலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 300 ரன்களை குவித்தது. இத‌ன் மூலம் 65 வது முறையாக் 300 ரன்களை கடந்து இந்தியா ஆஸ்த்ரேலியாவின் சாதனை முறியடித்துள்ளது. 

இந்த 65 முறைகளில், 16 முறை இரண்டாவது பேட்டிங் தேர்வு செய்து 11 தடவை வென்றுள்ளது. இதில் மூன்று முறை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வென்றுள்ளது.

இதுவரை ஒருநாள் போட்டியில் ஆஸ்த்ரேலியா அணி 64 முறை 300 எடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 2

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 1 முதல் பாகம்


முதல் பாகத்தில் முடியை பற்றி அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களை பார்த்தோம், இப்போது முடி உதிர்வின் காரணங்களை பார்ப்போம்.

ஒரு கேசத்தின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அது உதிர்ந்து விடும், அடுத்து பிற வேர்களிலிருந்து புதிய கேசம் வளரும். இவ்வாறு பழைய கேசம் உதிர்வதும் வளர்வதும் அன்றாடம் நடக்கும். உதிரும் அளவும் வளரும் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை. மாறாக உதிர்வது அதிகாமாக இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இயல்பாகவே 70 முதல் 100 கேசங்கள் வரை உதிர்ந்து விடும். பெண்கள் தலை வாரும் போது 10-20 கேசங்கள் வருவது இயல்பான ஒன்று. கொத்துக் கொத்தாக உதிர்வது இயல்பை மீறிய ஒன்று, அதன் காரணங்களை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும்.



காரணங்கள்


கேசம் அதிகமாக உதிர சில முக்கிய காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன,

  1. சரியான பராமரிப்பின்மை
  2. மருந்துகள்
  3. போதைப் பொருட்கள்
  4. இயக்கநீர் மாற்றங்கள்
  5. ஊட்டச்சத்து குறைபாடுகள்
  6. உடலை தாக்கும் நோய்கள்
  7. தலையின் தோலை தாக்கும் நோய்கள்
  8. மரபு வழிக் காரணம்
  9. மன அழுத்தம்
  10. வயது
  11. கதிர்வீச்சுகள்
  12. வேதியியல் பொருட்கள்


ஒருவருக்கு அதிகமாக முடி உதிர்வது மேற்கண்ட ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணமாக கூட இருக்கலாம், சரியான காரணத்தை தெரிந்து கொள்ளுதல் சரி செய்ய உதவும்.

1 சரியான பராமரிப்பின்மை

மிக முக்கியமான காரணம் இதுவே ஆகும்.
தலையில் எண்ணெய் பிசுக்குடன், தூசி ஆகியவற்றை சுத்தம் செய்யாதிருத்தல்.
குளித்தபின் ஈரத்தலையை வாருதல்.
தலையை சுத்தம் செய்ய வீரியம் மிகுந்த தரக் குறைவான ஷாம்பூகளை உபயோகித்தல்.
ப்ளீச்சிங்க்,  பெர்மிங்க், கர்லிங் ஆகியவற்றை அடிக்கடி செய்தல்.
அடிக்கடி கேசச் சாயம் பூசுதல், தரமில்லாத சாயம் உபயோகித்தல்.
தரமற்ற சீப்புகளை பயன்படுத்துதல், அவற்றை சுத்தமில்லமல் உபயோகித்தல்.
ஹேர் டிரையரை சரியான முறையில் உபயோகிக்காமல் இருப்பது.
கேசத்தை இருக்கமாக கட்டுதல்.

2. மருந்துகள்

வீரியம் மிகுந்த மாத்திரை மருந்துஅள் தொடர்ந்து உண்பது.
புற்று நோயை குணப்படுத்தும் மருந்துகள்.
இரத்த உறைவை தடுக்கும் மருந்துகள்.
ஸ்டெராய்ட் வகை மருந்துகள்.
சில நோய்க் கொல்லி மருந்துகள்.

 3. போதைப் பொருட்கள்


புகையிலை அதிகாமாக உபயோகப்படுத்துதல், புகையிலையில் உள்ள நிகோட்டின் முடியின் வேரை சுற்றியுள்ள இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்துவிடும், இதனால் இரத்த ஓட்டம் குறையும். தேவையான ஊட்டச்சத்துக்கள் முடிக்கு கிடைகாமல் போய்விடும்.

4. இயக்க நீர் மாற்றங்கள்

உடலில் ஏற்படும் பலவகை மாற்றங்கள் முடி வள்ர்ச்சியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும், இரண்டிற்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கே இந்த மாற்றங்கள் அதிகமாக இருக்கிறது.

பருவம் அடையும் வயதில்
மாதவிடாய் காலத்தில்
கருவுறும் போது
பிரசவத்திற்கு பின்
மாதவிடாய் நின்றபின்

ஒவ்வொரு நிலையிலும் பலவித இயக்கநீர் மாற்றங்கள் தொடர்ந்து பெண்களுக்கு ஏற்படுவதால், கேச வளர்ச்சி பாதிப்பு , உதிர்தல் ஏற்படுகிறது. பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற இயக்க நீர் கேச வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 15 - 30 வயதில் இந்த இயக்க நீர் அதிகமாக இருக்கும், அப்பருவத்தில் கேசம் அதிகமாக வளரும். மாதவிடாய் நின்ற பின்னர் இந்த ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் கேச உதிர்வு அதிகமாக இருக்கும்.

5. ஊட்டச்சத்துக் குறைபாடுகள்


கேசம் நன்கு வளரவும், வேர்கள் உறுதியாக இருக்கவும் உடலில் தேவையான அளவில் கீழ்காணும் சத்துகள் இருப்பது அவசியம்
புரதம்
பி. காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள்
இரும்புச் சத்து
தாமிரம்
துத்தநாகம்
அயோடின்
வைட்டமின் சி

இதில் ஏதேனும் ஒன்று குறைவாக இருந்தாலும் கேசம் அதிகமாக உதிரும்.

6.  உடலை தாக்கும் நோய்கள்


டைபாய்டு, மஞ்சள் காமாலை, அம்மை, புற்றுநோய், காசநோய் போன்ற நாள்பட்ட நோய்களால் உடல் பாதிப்பதோடு மட்டுமில்லாமல் கேசம் அதிகமாக உதிரும்.

நோயின் கடுமையால் சரியான் உணவு உண்ணமுடியாத நிலையில் முடி வலுவிழந்து விடுகின்றன.
தொடர்ந்து மருந்துகள் சாப்பிடுவதாலும் கேசம் உதிரும்.
அதிக நாட்கள் காய்ச்சலினாலும் உடல் சூட்டினால் கேசம் அதிகமாக உதிரும்.

தொடரும்...


அடுத்த பாகத்தில் மற்ற காரணங்களை பார்க்கலாம்.

தனுஷ் நம்ம பிரதர்தான் - சிம்பு பேட்டி


சிம்பு தனது ரசிகர்களுக்காக கொடுத்த சிறு பேட்டி

'தபாங்' சல்மான் கேரியரில் அல்டிமேட் ஹிட். 'ஒஸ்தி' உங்களுக்கு அப்படி அமையுமா? 'தபாங்' செமத்தியான ஒரு போலீஸ் படம். ஆனா, முரட்டுத்தனமா பெரிய மீசை வெச்சுக்கிட்டு, நரம்பு தெறிக்கிற மாதிரி பேசிக்கிட்டு இருக்கிற போலீஸ் இல்லை இது. விஜய் கேரியரில் 'கில்லி' அடிச்ச தரணி துணைக்கு வந்தார். அந்த மாஸ் இந்தப் படத்தில் அப்படியே இருக்கு. தொண்ணூறே நாள்ல படத்தை முடிச்சுக் கொடுத்தார். சல்மான் மாதிரியும் பண்ணக் கூடாது. சல்மான் செஞ்ச சில விஷயங்களைப் பண்ணாமலும் இருக்க முடியாது. முதல் நாள், முதல் ஷாட் எடுக்கிறவரை யோசனையா இருந்தது. ஆனா, அப்புறம் அடி பின்னிட்டோம். இதுவரை இப்படி ஒரு மாஸ் ஃபிலிம் நான் செய்தது இல்லை. படத்தில் எனக்குப் பேரு 'ஒஸ்தி' வேலன். சந்தானம் 'சிவாஜி தி பாஸ், ஒஸ்தி தி மாஸ்'னு சொல்லிட்டே இருப்பார். போலீஸ்ல ராபின்ஹுட் மாதிரி ஒரு ஆள்.    ஆனா அண்ணே... இந்த சிக்ஸ் பேக், எய்ட் பேக்லாம் எவண்ணே கண்டுபிடிச்சான்! மூணு மாசமா நான் கொலைப் பட்டினி. தண்ணிகூட இங்க் ஃபில்லர்ல அளந்து குடிக்க வேண்டி இருக்கு. என்னால பிரியாணி இல்லாம உயிர் வாழவே முடியாது. ஆனா, இப்போ ஒண்ணுகூடத் தொட முடியலை. ஆனா, உடம்பு சும்மா கிண்கிண்ணுனு ஆயிருச்சு!

ரொம்ப ஆசைப்பட்டு மல்லிகா ஷெராவத்தைக் கூட்டிட்டு வந்துட்டீங்கபோல?

நானா ஆசைப்பட்டுக் கேட்கலை. ஆனா, அந்தப் பாட்டுக்கு அப்படி ஒரு வெயிட் பார்ட்டி தேவை. 'தபாங்'கில் 'முன்னி' பாட்டு ப்ளாக்பஸ்டர் ஹிட். அங்கே மலாய்க்கா அரோரா பின்னியிருப்பாங்க. 'முன்னி'யைவிடப் பட்டையைக் கிளப்பணும்னு மல்லிகாவை இறக்கிட்டோம். இங்கே வந்து இறங்குறவரைக்கும் என்னை அவங்களுக்குத் தெரியாது. ட்விட்டரில் 'சென்னைக்கு சிம்புவோட டான்ஸ் ஆடப்போறேன்'னு எழுதி இருக்காங்க. 'ஐயோ, டான்ஸ்ல அவன் பட்டையக் கிளப்புவான். பீ கேர்ஃபுல்'னு நிறைய கமென்ட்ஸ் குவிஞ்சுதாம். ஷாட்டுக்கு வந்து லோக்கலா இறங்கி அடிச்சாங்க. மல்லிகா... மல்லிகாதான். 'கலாசலா... கலாசலா'னு வாலி சார் எழுதின பாட்டை எல்.ஆர்.ஈஸ்வரியும் அப்பா டி.ஆரும் பாடி இருக்காங்க. செம ரவுசா வந்திருக்கு ஸாங்!

ஜீவா உங்களை 'நண்பன் இல்லை'னு சொல்லி இருக்காரே?


நான் யார்கிட்டயும் அவ்ளோ ஈஸியாப் பழகிட மாட்டேன். சிம்புவை நெருங்கறது கொஞ்சம் கஷ்டம். புரிஞ்சுக்கிறது அதைவிட கஷ்டம். 10 பேருக்கு நம்மளைப் பிடிக்கும். 10 பேருக்கு நம்மளைப் பிடிக்காது. என்ன செய்ய?

அதையும் தாண்டி எனக்கு நிறைய வேலை இருக்கே. நம்மளைப்பத்தி யார் என்ன பேசுறாங்கனு கேட்டுக்கிட்டே இருந்தா, அதுவே நமக்கு வேலையாப் போயிரும். எனக்கும் அவருக்கும் பிரச்சினை இல்லை. நான் நடிக்கலாம்னு நினைச்ச ஒரு படத்தில் அவர் நடிச்சார்... அவ்வளவுதான்!


ஆனா, அந்தப் படத்தில் நடிச்ச பிறகுதானே ஜீவா ஒரு இடத்துக்கு வந்துட்டார்?


எல்லாப் படமும் நானே பண்ண முடியாது. நான் ஓடும்னு நினைச்சு ஓ.கே. சொன்ன படம்தானே அது? அப்ப என் ஜட்ஜ்மென்ட் சரிதானே? சிலர் 10 ஹிட்கூடக் கொடுக்கலாம். ஆனா, ஆக்டர்... ஸ்டார்... ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. படம் நல்லா இருந்தா ஆக்டர் நடிச்சதைப் பார்ப்பாங்க. புரிஞ்சுக்காமல் ஆட்டம் போட்டா, யாரையும் கீழே இறக்கிடுவாங்க. முதல் நாள் தியேட்டருக்கு யாருக்கு ஓப்பனிங் வருதோ... அவங்கதான் ஸ்டார்!

ஒரு படம் ஜெயிச்சா, நான் காலரைத் தூக்கி விட்டுக்கிறதும் கிடையாது. தோல்வி அடைஞ்சா, தலையைக் குனிஞ்சுக்கிட்டுப் போறதும் கிடையாது. இந்த உலகத்தில் ஒரே ஒரு சிலம்பரசன்தான் இருக்கான்!

தனுஷ் நேஷனல் அவார்டு வாங்கிட்டார். உங்களுக்கு ஆசை இல்லையா?

தனுஷ் 'ஆடுகள'த்தில் உழைச்சதும் நடிச்சதும் அவ்வளவு சூப்பர். அதுக்கு நிச்சயம் கிடைக்கணும். நமக்கு அந்த ஆசையே இல்லை. எனக்கு 'கிரேட் என்டர்டெயினர்'னு பேர் வாங்கணும். அவ்வளவுதான். தனுஷ் நம்ம பிரதர்தான். அவருக்கு இந்த அவார்டு செல்லும்!

'நண்பன்' படம் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகப்போகுதே... நடிச்சிருக்கலாம்னு இப்ப தோணுதா?

இப்பவும் அப்படித் தோணலை. 'த்ரீ இடியட்ஸ்' சூப்பர் படம். ஷங்கர் கிளாஸ் ப்ளஸ் மாஸ் டைரக்டர். விஜய்க்கு வித்தியாசமான கேரக்டர். வெற்றிக்கு நல்ல கியாரன்ட்டி இருக்கும்!

தம்பி குறளரசனும் நடிக்க வர்றார்போல?


ஆமா! அடுத்த வருஷம். சென்டிமென்டா அப்பா டைரக்ஷன். ஜிம்லயே கெடக்கான். நல்லா டான்ஸ் ஆடுறான். அழகா வசனம் பேசுவான். ஆட்டமும் பாட்டமும் நடிப்பும் ஜீன்லயே இருக்கு. 'பதற்றமே வேண்டாம். அழகா நடி. எல்லோரையும் மதி!'னு மட்டும் சொல்லி இருக்கேன். ரொம்ப ஸ்வீட் பாய். பொண்ணுகளுக்கு ரொம்பப் பிடிக்கும்!


எப்போ கல்யாணம்?

வீட்ல கேட்டுட்டே இருக்காங்க. இதைப்பத்திப் பேசணும்னு அப்பா அம்மா பக்கத்தில் வந்தாலே... ஓட்டம் பிடிச்சிடுவேன். கண்டிப்பா லவ் மேரேஜ்தான். ஆனா, பொண்ணு நம்மளைத் தேடி வரணும். காதலிக்கிறதும் கல்யாணம்பண்ணிக்கிறதும் என் உரிமை.

நான் எது பண்ணாலும் ஒரு குரூப் இருந்துக்கிட்டு கெடுக்குதுண்ணே. புரொடியூசர், டைரக்டர்கிட்ட போய் 'சிம்புவை வெச்சுப் படம் பண்ணாதீங்க'னு சொல்றாங்க. ஹீரோயின்கிட்டே போய் 'ஐயோ... சிம்புவா ஜாக்கிரதை'னு போட்டுக் கொடுக்குறாங்க. மனசார யாரையாச்சும் காதலிச்சாக்கூட இடைஞ்சல் பண்ணுவாங்க போல. ஆனா, கடவுள் இருக்காரு. இதுவரைக்கும் கடவுள் என் கையைப் பிடிச்சுக் கூட்டிக்கிட்டு வந்திருக்கார். நிச்சயமா, அந்த குரூப்கிட்ட இருந்து தப்பிச்சு, காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்குவேன். அப்போ அந்தப் பொண்ணு தோள் மேல கை போட்டுக்கிட்டு பேட்டி கொடுப்பேன்.

விஜய், சிம்புவை இணைத்த ஒஸ்தி !!

இந்தியில் வெளியான தபாங் படத்தின் ரீமெக் படமான ஓஸ்தி, தரணியின் இயக்கத்தில் சிம்பு மற்றும் புதுமுகம் ரிச்சா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீடு நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சற்றும் எதிர்பாராமல் நடிகர் விஜய் கலந்து கொண்டு பாடல் கேசட்டை வெளியிட்டார்.

விஜயைப் பார்த்து விழாவில் கலந்து கொண்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர், காரணம் சிம்பு, "தல" அஜித்தின் தீவிர ரசிகன் ஆயிற்றே. இவ்விழாவில் இயக்குனர் தரணி, பாடாலாசிரியர் வாலி, சிம்புவின் தந்தை டி.ஆர் ராஜேந்திரன் மற்றும் நடிகர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவினை பற்றி சிம்பு தனது பேஸ்புக்கில், பாடல் வெளியீட்டு விழா ரசிகர்களின் பேராதரவால் வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்தது. நான் தீவர அஜித் ரசிகன் என்று தெரிந்தும், எனக்காக இறங்கி வந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக்கிய விஜய்  அண்ணாவிற்கு நன்றி! இதன் மூலம் நடிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துகாட்டியுள்ளார், என்று குறிப்பிட்டுள்ளார் .

இப்படத்தின் ப்ரோமோ ட்ரைலர் !!








ஜேம்ஸ்பாண்ட் இயக்குனர் படத்தில் தமிழ் நாயகன்


டுமாரோ நெவர் டைய்ஸ்  எனும் படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பியர்ஸ் பிராஸ்னன் ஜேம்ஸ்பாண்டாக நடித்த பெரும் வெற்றிப் படம். அப்படத்தை இயக்கிய ரோஜர் ஸ்போட்டிஸ்வுட் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் நடிகர் ஒருவர் நடிக்கிறார். அவர் தான் நம்ம சித்தார்த்.


ரங் தே பசந்தி படத்தில் ரோஜரை மிகவும் கவர்ந்த சித்தார்த், இப்படத்தில் கணித மேதை ஸ்ரீநிவாச இராமானுஜமாக நடிக்கிறார். சித்தார்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மக்களைத் தொடர்ந்து உலக மக்களிடையே பிரபலமாகப் போகிறார். தற்போது சித்தார்த் தீபா மேத்தா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


சிம்பு ஜீவா மோதல்


சிலம்பரசன் ஜீவா இடையே சிறிது காலமாக புகைச்சல் இருந்துகொண்டே இருக்கிறது. கோ திரைப்படத்தில் முதலில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது, பின்பு அதில் ஜீவா நடித்தார். சிம்புவின் இடத்தில் ஜீவாவா? என்று பலதரப்பட்ட கேள்விகள் எழும்பின. ஆனால் படத்தின் வெற்றி ஜீவாவும் சளைத்தவர் அல்ல என நிரூபித்தது. அது முதல் ஜீவாவும் சிம்புவும் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஒருவரை ஒருவர் பற்றி பேசிவந்தனர்.

இப்போது சிம்பு தனது ஓஸ்தி பட வெளியீட்டு வேலைகளில் உள்ளார், அடுத்ததாக போடா போடி படத்தில் இறங்குவார். தற்போது கௌதம் மேனன் இயக்கும் நீதானே எந்தன் பொன்வசந்தம் படத்தில் ஜீவா நடிக்கிறார். போடா போடியும், நீதானே எந்தன் பொன்வசந்தம்  படமும் காதலர் தின படமாக வெளிவர உள்ளது. மீண்டும் இவர்களிடையே படங்களின் வழியாக மோதல் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

வேலாயுதம் சாதனையை முறியடித்த ராஜாபாட்டை


விஜய்யின் வேலாயுதம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரூ.2 கோடி செலவு செய்து இருந்தார். இரண்டு கோடி செலவில் எடுக்கப்படும் காட்சிகள் மிகப் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் இந்த சாதனையை முறியடித்துள்ளது விக்ரமின் ராஜபாட்டை.

தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளை முடித்துள்ள ராஜபாட்டை படக்குழு, படத்தில் அப்பகுதிக்கு மட்டும் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாயை செலவழித்துள்ளது. காட்சிகள் நன்கு வரவேண்டும் என்பதற்காக செலவை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தியுள்ளார் சுசீந்திரன். கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் என கூறப்படுகிறது. ஒரு கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் அதிக செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்ட வேலாயுதம் படத்தின் சாதனையை ராஜபாட்டை முறியடித்துள்ளது.

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 1


கேசத்தின் அடிப்படை

கேசம் ஏன் உதிருகிறது என்பதை தெரிந்து கொள்ள கேசம் குறித்த சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். நமது கேசம் இறந்த திசுக்களால் ஆன மெல்லிய ஆனால் உறுதியான ஒரு பாகம். இவை கெராட்டின் என்ற ஒரு வகை புரதத்தால் உருவானவை.

உள்ளமைப்பு

கேசத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்

1. தோலுக்கு வெளியே
2. தோலுக்கு உள்ளே

தோலுக்கு வெளியே இருக்கும் பகுதியின் பெயர் கேசத் தண்டு (Hair Shaft) ,  தோலுக்கு உள்ளே இருக்கும் பகுதியின் பெயர் கேச வேர் (Hair Root). கேசத் தண்டில் மெடுலா (Medula)எனும் உட்பகுதி, கார்டெக்ஸ் (Cortex) எனும் வெளிப்பகுதி உள்ளது. கேச வேர்களில் அடிப்பகுதி பெரிதா இருக்கும் அதை கேசக் குமிழ் (Hair Bulb) என்கிறோம், அது  பாலிக்கிள் (Hair Follicle) என்ற பகுதியோடு இணைந்திருக்கும். பாலிக்கிள் பகுதியில் உள்ள ரத்த குழாய்கள் வழியாக வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை பெற்றுக்கொள்கிறது.

கேசவேரோடு எண்ணெய் சுரப்பிகள் உள்ளன, (Sebaceous Glands) இந்த எண்னெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் திரவம் கேசத்திற்கு மினுமினுப்பை தருகிறது, சுரப்பிகள் சரியாக இயங்காவிடில் எண்ணெய் பசையின்றி வறண்டு போய் விடும். அதிகமாக இயங்கினால் எண்னெய் பிசுக்குடன் இருக்கும்.

கேசத்தின் நிறம் அதிலுள்ள மெலனின் என்ற வேதிப் பொருள் அளவை பொறுத்து மாறுபடும்.  வயதாகும் போது இது குறைவதால் நரை ஏற்படுகிறது. கேசத்தின் வளர்ச்சியில் மூன்று நிலைகள் உள்ளன அவை வளரும் பருவம், இடைப்பருவம், ஓய்வுப் பருவம் ஆகும். வளரும் பருவத்தில் புதிய கேசம் உருவாகி வளர்ந்து வரும், அடுத்த பருவத்தில் வளரும் வேகம் குறையும். மூன்றாம் பருவத்தில் வளர்ச்சி நின்று உதிர்ந்து விடும். சில மாதங்கள் கழித்து மீண்டும் புதிய கேசம் வளரும்.

அடுத்த பாகத்தில் முடி உதிர்வுக்கான காரணங்களை பார்க்கலாம்

ஏழாம் அறிவு சூர்யாவின் புதிய ஹேர்ஸ்டைல்

ஏழாம் அறிவு படத்தில் சூர்யா தோன்றும் புதிய சிகை வடிவங்கள் படங்களாக உங்கள் பார்வைக்கு.










வேலாயுதம் படத்தில் உதயநிதி!!

ரெட் ஜாயின்ட் மூவிஸின் ராஜெஷ் இயக்கி உதயநிதி நடித்த ஓகே ஓகே படம்  திரைக்கு விரைவில் வெளிவர வரவிருக்கிறது. இப்படத்தின் ட்ரைலர் விஜய் நடித்து திபாவளியன்று இருக்கும் வேலாயுதம் படத்தின் நடுவே திரையிடப்படவுள்ளனர். இதற்காக அவர் வேலாயுதம் படத்தின் தயாரிப்பாளரான ரவிசந்திரனக்கு நன்றி தெரிவித்துள்ளர். அதேசமயம் இப்படத்தின் ட்ரைலர் ஏழாம் அறிவு படத்தின் நடுவேவும் வருகிறது. உதயநிதி பிழைக்க தெரிந்த மனிதராயிற்றே... வெகு சாதாரனமாக பெரிய விளம்பரத்தை தேடிக்கொள்கிறார்.

ஜீன்ஸ் பேண்ட் ‍தயாராவது எப்படி!!!

இன்றைய மேற்கத்திய கலச்சார வாழ்க்கையில் ஜீன்ஸ் ஆடை நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண், பெண் என இருபாலரும் அணியும் நாகரீக‌ உடை என்றே கூறலாம். அதைவிட இத்தகைய உடை ஆண்களை விட பெண்களே அதிகமாக விரும்புகின்றனர், காரணம், ஒரே ஒரு ஜீன்ஸ் இருந்தால் போதும்,  டி-சர்ட்,  ஷார்ட் டாப்ஸ்,  சல்வாருக்கு போடும் குர்தா என்று எதையும் மேலாடையாக போட்டுக் கொண்டு கலக்கலாம். அது மட்டும் இன்றி வெளியில் செல்லும்போது அது மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக‌ பெண்கள் கருதுகின்றனர். அத்தகைய உடை வடிவமைப்பு மற்றும் தயாரிக்கும் முறை பற்றிய வீடியோ பதிவு உங்களுக்காக.


வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content